முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலையிறங்குவது


நேற்றுடன் நான் இனி சர்ச்சைக்குரிய, விமர்சனத்துக்குரிய எதையும் எழுதாமல், வம்பு தும்புக்குப் போகாமல் வாயைப் பொத்திக் கொண்டிருப்பேன் எனும் விரதம் முடிந்து போனது. ஆக, ‘இந்த விரதம் அனுஷ்டித்த பத்து நாட்களும் எப்படி இருந்தன’ என நான் இங்கு கூறியாக வேண்டும்:


1) முதல் இரு நாட்கள் அவ்வப்போது விரல்கள் கருத்தெழுத பரபரத்தன. கட்டுப்படுத்திக் கொண்டேன்.

2) போகப் போக அப்படி விரல்கள் இருப்பதையே மறந்து போனேன். 

3) யாரிடமும் விவாதத்துக்குப் போகாததால் ஒருவித அமைதி என் இதயத்தில் வந்து குடிகொண்டது. அது நன்றாகவே இருந்தது.

4) ரொம்பவும் கருத்து சொல்லுவது, தீர்ப்பெழுதுவது கெட்டப்பழக்கம் மட்டுமல்ல அது மனநிம்மதியையும் கெடுக்கிறது, நாம் நம் சொற்களை அடுத்தவரை நோக்கி அல்ல, இறுதியில் நம்மை நோக்கியே வீசுகிறோம் எனப் புரிந்து கொண்டேன்.

5) இந்த பத்து நாட்களும் கவிதை எழுதுவதில் கவனம் செலுத்தினேன். சில நீள்கவிதைகளை, narrative கவிதைகளை பிரசுரித்தேன். அவை ஓரளவுக்கு கவனமும் பெற்றன. பேரறிவாளன் பற்றி ஒரு கவிதை எழுதினேன் - அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது; நிறைய இடங்களில் என் கண்கள் துளிர்த்ததில் எழுதுவதே சவாலானது.

5) இது போக, என் நாவலில் தினமும் கவனம் செலுத்த முடிந்தது. சில நாட்களில் எந்த இடையூறும் இல்லாமல் 5 மணிநேரம் கூட எழுத முடிந்தது.


6) பேஸ்புக் சர்ச்சைகள் என் வாசிப்பை குறைப்பதோ கூட்டுவதோ இல்லை எனப் புரிந்து கொண்டேன். 


7) என்னதான் தினமும் செய்தி படித்து, நாட்டுநடப்புகளை கவனித்தாலும் நாம் “அரசியல் பண்ணாமல்” விலகி இருந்து கவனிப்பது நெஞ்சுக்கு ஆறுதலளிக்கிறது. அன்றாட அரசியலைத் தாண்டி மனிதர்களை கவனிக்க, பொருட்படுத்த முடிகிறது. அரசியல் எப்படி நம் பார்வைக்கு நிறமூட்டி உலகை மாற்றி விடுகிறது என ஆச்சரியப்பட்டேன். ஜெயமோகனுடன் பல விசயங்களில் நான் மாறுபட்டாலும் அன்றாட நடப்புகள், அரசியல் விவாதங்களில் எதிர்வினையாற்றுவதன் ஆபத்து பற்றி அவர் சொல்வதுடன் முழுக்க இப்போது உடன்படுகிறேன்.

 ஆனால் முழுக்க அரசியலற்று இருப்பதும் ஆபத்தானது. இதன் நடுவே ஒரு சமநிலை வேண்டும். 

அது எப்படி என்று தான் யாருக்கும் தெரியவில்லை, அரசியல்வாதிகளைத் தவிர. ஏனென்றால் அவர்கள் எப்போதும் ஜாலியாக நல்லிணக்கத்துடன் இருக்கிறார்கள்.

8. அதே நேரம் இப்படி “சாமி சரணம்” என மாலைபோட்டுக்கொண்டு சுற்றுவதில் ஒரு சுயநலம் உள்ளது. ஒரு எழுத்தாளன் இப்படி இருக்கலாமா என எனக்கு ஒரு கேள்வி உள்ளது.

 9) பத்து நாட்களை தாண்டிய நிலையில் இனி மெல்ல மெல்ல மாலையைக் கழற்றி, கோயில் குளம் சுற்றுவதை நிறுத்தி விட்டு கறிசாப்பாடு, கோபப்படுவது என “இயல்பு வாழ்க்கைக்கு” மீளலாம் என இருக்கிறேன். எல்லை மீறிப் போவதாகத் தோன்றினால் திரும்ப ஒரு 20 நாட்கள் மாலை போட்டு விடலாம்.

10) “நல்லவனாக” இருப்பதே இந்த உலகின் மிக ஜாலியான விசயம். அதனால் தான் இத்தனை நல்லவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...