Skip to main content

கே.எஸ் பரத்திடமிருந்து எதிர்பாராத டி 20 ஆட்டம்



RCB vs Delhi - final league match


கே.எஸ் பரத் நினைத்த இடங்களில் எல்லாம் பந்தை அடிக்கும் திறமை மிகுந்தவர் அல்ல. உள்ளூர் போட்டிகளில் அவருடைய டி 20 சராசரி 18.5. ஸ்டிரைக் ரேட் 110க்குள். ஆக எதைக் கண்டு இவரை பெங்களூர் அணி தேர்ந்தெடுத்தார்கள் என முதலில் வியந்தேன். கோலி இரண்டு நோக்கங்களுக்காக அவரை அணிக்குள் எடுத்து மூன்றாவது எண்ணில் ஆட வைத்தார்:

1) டி வில்லியர்ஸுக்கு முதுகுக்காயம் இருப்பதால் அவரிடத்தில் ஒரு கீப்பர் தேவை. பரத் ஒரு சிறந்த கீப்பர்.

2) ஹைதரபாத், ஆந்திராவை சேர்ந்த பலரையும் போன்றே பரத் சுழல் பந்தை நன்றாக ஆடக் கூடியவர். மத்திய வரிசையில் விக்கெட் இழக்காமல் ஒற்றை, இரட்டை ரன்களை எடுத்து 120 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிற மட்டையாளர் தேவை. அதனால் பட்டிதாரை தியாகம் பண்ணி பரத்தை அவ்விடத்தில் கொண்டு வந்தார் கோலி.


பரத்தோ தன் மீது அழுத்தம், எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையை பயன்படுத்தி சாமர்த்தியமாக, நிதானமாக ஆடினார். அவ்வப்போது சுழலர்களை மிட் விக்கெட்டுக்கு மேல் தூக்கி அடித்தார். பந்தின் திசை off ஸ்டம்புக்கு வெளியே மாறினால் கவர், எக்ஸ்டிரா கவரில் தட்டி விட்டு முயலைப் போல் ஓடி விடுவார். பெரும்பாலான போட்டிகளில் தன்னால் அணியின் மத்திய வரிசை ஆட்டம் சுணங்காமல் மெத்தனமாகாமல் பார்த்துக் கொண்டார். அவர் எல்லா ஆட்டங்களிலும் சிரத்தையுடன், பந்துகளை ஒழுங்காக கவனித்து சமநிலை குலையாமல் அடித்தாடியதை நான் ரசித்தேன். ஏனென்றால் இந்த ஐ.பி.எல் பருவத்தில் பல இளம் மத்திய வரிசை மட்டையாளர்கள் எந்த பந்து விழுகிறது என்பதையே பார்க்காமல் மட்டையை சுற்றி விக்கெட்டை கொடுப்பதைப் பார்த்தோம். பரத் இந்த விசயத்தில் எனக்கு ராகுல் திராவிட் விக்கெட் கீப்பராக இந்திய ஒருநாள் அணியில் ஐந்தாவது / ஆறாவது எண்ணில் வந்து அடித்தாடிவதை நினைவுபடுத்தினார். 


பரத் எனக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கீப்பர் மட்டையாளர் இயன் ஹீலியையும் நினைவுபடுத்துகிறார். திராவிட், ஹீலி போன்றவர்களுக்கு ஆட்டத்திறன் சற்று குறைவு, ஆனால் அதையே தமது வலிமையாக மாற்றிக் கொண்டார்கள் - எந்த பந்துக்கு, எந்த சூழலுக்கு எப்படி ஆட வேண்டும் என தெளிவான திட்டத்துடன், முன் தயாரிப்புடன் ஆடினார்கள். அதனாலே யாரும் எதிர்பாராத போது நைசாக அங்கிங்கு தட்டி விட்டு ஓடி சரியான நேரத்தில் தாம் அடிக்க வேண்டிய பந்துகளை கணித்து விளாசி வெற்றியின் பக்கத்தில் அணியை கொண்டு சென்று விடுவார்கள். கே.எஸ் பரத் இன்று இறுதிப் பந்தில் நேராக ஒரு சிக்ஸர் விளாசி ஆட்டத்தை வென்றும் கொடுத்தார். 


போட்டிக்குப் பின் அவர் அளித்த பேட்டியில் "எதுவும் சுலபத்தில் கிடைக்காது, எதை அடையவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நம்புகிறேன்" என்று கூறினார். இந்த ஐ.பி.எல்லுக்கு என்றே அவர் தனியாக பயிற்சி எடுத்திருக்கிறார், யாரை எப்படி கையாள்வது என ஒரு மனக்கணக்கை போட்டு வைத்து வந்திருக்கிறார் எனத் தெரிகிறது. பரத்தால் இஷான் கிஷன் இன்று அடித்ததைப் போல ஆட முடியாது. ஆனால் இஷான் கிஷனால் பரத்தைப் போன்று இப்படியான சிக்கலான ஒரு சந்தர்பத்தில் இறுதி வரை நின்று நிதானம் இழக்காமல் ஆட்டத்தை ஏதோ கோழியை ஈரத்துணி போட்டி அமுக்கிப் பிடிப்பது போல கூலாக சத்தமில்லாமல் ஜெயித்து தரவும் முடியாது!


இந்த இடத்தில், பரத்தை நம்பி களமிறக்கி தொடர்ந்து ஆதரித்த கோலியையும் நாம் நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...