Skip to main content

மன்னிப்புக் கேட்ட சாவர்க்கர் மட்டும் தான் துரோகியா?




சாவர்க்கர் வெள்ளையருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி சிறையில் இருந்து வெளிவந்த பின் இணங்கிப் போனதைப் பற்றி பேசும் நாம் காந்தியும் ஒரு கட்டம் வரை பிரித்தானியருக்கு ஜால்ரா அடித்தவரே என்பதை மறந்து விடுகிறோம். வடக்கே உள்ள அரசியல் வியாபாரிகளும் அனைவரும் அன்று அப்படித்தான் இருந்தார்கள். காங்கிரார் இப்படி என்றால் அவர்களுக்கு எதிராக இருந்த கட்சியினரும் அவ்வாறே பிரித்தானியருடன் நல்லுறவை பேணினர். ஒரு கட்டத்தில், சிறையில் இருந்து மன்னிப்புக் கேட்டு வெளிவந்த சாவர்க்கர் காந்தியின் எதிர்பாரா வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தனது அரசியலை அப்படியே காந்திக்கு நேர் எதிர் பாதையில் வகுத்துக் கொண்டார். பிரித்தானிய எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு பேசாமல் ஓய்வூதியம் வாங்கியபடி இந்துத்துவாவை கனவு காணவும் வளர்த்தெடுக்கவும் தன் கடைசி காலத்தில் முயன்றார் என்பதே வரலாறு. நாம் இப்போது காந்தி ஆங்கிலேயரை எதிர்த்த இந்த இறுதி சில பத்தாண்டுகளையும் அப்போது சாவர்க்கர் எடுத்த எதிர் தேசிய, பிரித்தானிய ஆதரவு நிலைப்பாட்டையும் மட்டும் வைத்து இருவரையும் மதிப்பிடுவது நியாயமல்ல. இரண்டு பேருமே சந்தர்ப்பவாதிகள் என்பதே உண்மை.


இன்னொரு சுவாரஸ்யமான தகவல் சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிய போது அதற்கு ஆதரவளித்து தன் பத்திரிகையில் எழுதியவர் காந்தி. அது மட்டுமல்ல கடிதத்தை எப்படி எழுதினால் பிரித்தானியர் அருள் பாலிப்பர் என ஒரு வக்கீலாக பரிந்துரைத்தவர். எப்படி இருக்கிறது ஜோடி?


சாவர்க்கர் அன்றிருந்த பல காங்கிரஸ், காங்கிரஸ் அல்லாத தலைவர்களைப் போல அரசியலில் சமயோஜிதத்தை முக்கியமாக கருதினவர். இன்று நாம் ஏதோ மாய லோகத்தில் மிதந்தபடி காங்கிரசார் மட்டும் வெள்ளையரை காலமெல்லாம் எதிர்த்த வீரர்கள் என்றும், சாவர்க்கர் மட்டும் பேடி என்று வசனம் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. சுதந்திரத்துக்கு மூன்று பத்தாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை பார்த்தாலே நமது இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் இங்கிலாந்து ராணியை சேவித்தவர்களே என புரிந்து போகும். அந்த கூட்டத்தில் வெறுப்பரசியலின் தாவூத் இப்ராகிமாக திகழ்ந்தவரே சாவர்க்கர் என்பது தான் வித்தியாசம். ஆரம்பத்தில் இருந்தே அவர் வன்முறையையும் துப்பாக்கியையுமே நம்பினார் என அவரது வரலாறு சொல்லுகிறது. 


அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டதும் அமைதி வழி அரசியலில் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதாலே. சிறை வாசத்துக்குப் பின் ஊர் திரும்பிய அவர் கடைசியில் செய்ததென்ன? காந்தியைக் கொல்வதற்கு என துப்பாக்கியை கோட்சே கையில் ஒப்படைத்தார். இந்த துப்பாக்கி, சதியாலோசனைகள், தீவிரவாதம், பின்னால் அவர் உருவாக்கிய மதவாதம், இந்து தேசியவாதத்தை தவிர்த்தால் அவரும் அந்த கால காங்கிராரைப் போல வெள்ளையருக்கு கால் அமுக்கி விட்ட பரம்பரை தான். இவர்களில் உத்தமர்கள் என நாம் இன்று நம்ப விரும்புகிற பொருளில் யாரும் இல்லை. 


அன்றைய சூழல் அப்படி - வெள்ளையரின் சாம்ராஜ்ஜியம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் நொடிந்திட காந்தியும் அவரது தொண்டர்களும் இது தான் சந்தர்ப்பம் என திரும்ப அடித்தனர். அதுவரை வெள்ளையனுக்கு நீதியுணர்வு உண்டு எனக் கூறி வந்த காந்தி யு டர்ன் எடுத்து 'இனி நாட்டை ஆளும் தகுதி உனக்கு இல்லை' என்றார். ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் எல்லாம் ஒரு உணர்ச்சிகரமான சாக்கு மட்டுமே. ஆங்கிலேயர் என்றுமே கொடூரமாகத் தான் இந்தியர்களை நடத்தி வந்தனர். நிஜத்தில் நாட்டை ஆகும் பொருளாதார ஆற்றலை அன்று வெள்ளை அரசு இழந்து வந்ததையே காந்தி அன்று அப்படி பில்ட் அப் பண்ணி சொன்னார். வரலாறு இப்படிப் போகிறது - நம் வடக்கத்திய தியாகிகள் ஒவ்வொருவரும் ஒரு வியாபாரி. சாவர்க்கர் துப்பாக்கியாலும் பின்னர் மன்னிப்பு கடிதத்தாலும் மதவாதத்தாலும் வியாபாரம் செய்தார். காந்தி அதையே சமரசம், குற்றவுணர்வு, உணர்வு சுரண்டல், சனாதனம், தியாகம் என வேறுவழியில் செய்து நல்ல பெயர் பெற்றார். வரலாறும் சந்தர்பங்களும் காலனியாதிக்கத்தில் இனி லாபமில்லை என முதலீட்டியம் உலகம் முழுக்க உணர்ந்து கொண்டதும் இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தது. ஆனால் அந்த பெருமையை மொத்தமாக காந்தி ஆண்ட் கோ லவுட்டிக் கொண்டனர்.

இப்படி நமது வரலாறு சொல்வது என்னவென்றால் காந்தியோ சாவர்க்கர் 

 யாரும் மெச்சத்தக்கவர்கள் அல்ல.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...