என்கவுண்டர்களை நிறுத்தினால் மட்டும் போதாது, போலிசார் துப்பாக்கி பயன்படுத்துவது, காவல் நிலையங்களுக்கு என உள்ளறைகள் சித்ரவதைக்காக இருப்பதும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மக்களின் feedbackஐ வாங்கி அதன் அடிப்படையில் பதவி நீடிப்பு, சம்பளம் வழங்குதல், உயர்த்துதல் முடிவு செய்யப்பட வேண்டும். இப்போது காவல்துறை மட்டற்ற அதிகாரத்துடன் முடிசூடா மன்னர்களாக உள்ளது மாறி ஒரு தனியார் ஊழியர் போல நடத்தப்பட வேண்டும். மக்களின் கோபத்தை சம்பாதித்தால் உடனடியாய் வேலையை இழக்க நேரிடும், மேலதிகாரிகளை, அரசியல்வாரிகளுக்கு பணிந்தால் போதாது எனும் நிலை கொண்டு வரப்பட வேண்டும். அதுவரை காவல்துறை ஒருவித சமூக புற்றுநோயாகவே தொடரும்.
( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

Comments