என்கவுண்டர்களை நிறுத்தினால் மட்டும் போதாது, போலிசார் துப்பாக்கி பயன்படுத்துவது, காவல் நிலையங்களுக்கு என உள்ளறைகள் சித்ரவதைக்காக இருப்பதும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மக்களின் feedbackஐ வாங்கி அதன் அடிப்படையில் பதவி நீடிப்பு, சம்பளம் வழங்குதல், உயர்த்துதல் முடிவு செய்யப்பட வேண்டும். இப்போது காவல்துறை மட்டற்ற அதிகாரத்துடன் முடிசூடா மன்னர்களாக உள்ளது மாறி ஒரு தனியார் ஊழியர் போல நடத்தப்பட வேண்டும். மக்களின் கோபத்தை சம்பாதித்தால் உடனடியாய் வேலையை இழக்க நேரிடும், மேலதிகாரிகளை, அரசியல்வாரிகளுக்கு பணிந்தால் போதாது எனும் நிலை கொண்டு வரப்பட வேண்டும். அதுவரை காவல்துறை ஒருவித சமூக புற்றுநோயாகவே தொடரும்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments