Skip to main content

பாரதி மணி எனும் ஆழ்வார்க்கடியான்


பாரதி மணி அவர்களை சென்னையில் சிலமுறைகள் சந்தித்திருக்கிறேன். அவர் எனக்கு “பொன்னியின் செல்வனில்” வரும் ஆழ்வார்க்கடியானை நினைவுபடுத்துவார். அவரைப் பற்றி பொதுவில் உள்ள, எழுத்தின் வழி உருவாகிற சித்திரங்களுடன் முரண்படாதபடி நாம் சந்திக்கும் போதும் தோன்றுவார். எப்படி கல்கி ஆழ்வார்க்கடியானை மாறாத இயல்பு கொண்ட ஒரு பாத்திரமாக தொடர்ந்து தக்க வைத்தாரோ, அப்படியே பாட்டையாவும் நம்மிடையே தோன்றினார்.
 நுரைத்துப் பொங்கும் பியரைப் போல் ஒரு சிரிப்பு, பிரவாகிக்கும் உற்சாக அருவி, அதே நுட்பமான கிண்டல், நாடக மேடையில் குறைவான ஒளியில் மையத்தில் உயரமான நாற்காலியில் கைத்தடியுடன் அமர்ந்திருக்கும் பாத்திரத்தைப் போல ஒரு தோரணை, ஒரு துணிச்சல், ஸ்டைல்.

 நான் பெங்களூருக்கு வந்த பிறகு வாசக சாலை கூட்டங்களில் அவரை சந்தித்ததுண்டு. அவருடைய வீடு கூட சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே இருந்தது. 'ஒருநாள் சாப்பிட வாங்க' என்று கூட அழைத்தார். ஆனால் நான் பெங்களூர் வந்த பிறகு யாரையும் சந்திக்க மனமில்லாமல், ஒரு அவநம்பிக்கையான மனநிலையில் இருப்பதால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. வந்து இத்தனை வருடங்களில் தமிழவனையோ வேறு நண்பர்களையோ சென்று சந்திக்கவில்லை. தவறு தான். ஆனால் என்ன செய்ய? எப்போதெல்லாம் பாட்டையாவின் புத்தகங்களைப் பார்க்கிறேனோ அவரைப் பற்றி நினைக்கிறேனோ என்ன இப்படி பக்கத்தில் இருந்து ஒரு எட்டு போய் பார்த்து வராமல் இருக்கிறேனே என குற்றவுணர்வு எட்டிப் பார்க்கும். பிறகு இருட்டு மீண்டும் என் மனத்தை மூடிடும். எண்ணங்கள் சிதறும். இப்படி போய்க் கொண்டிருக்கும் போது அவர், எதிர்பாராமல் யாரோ நம் முகத்துக்கு எதிராக கதவை மூடியதைப் போல, மேடையின் திரையை மூட சொல்லி விட்டு போய் விட்டார்.

அவரை கடைசியாக இங்கு வாசக சாலை கூட்டத்தில் சந்தித்த போது இளைஞர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் உற்சாகத்தில் திளைத்திருந்தார். அவர் வயது ஆட்களிடம் உள்ள அதே பேச்சார்வம், அதன் பின்னால் ஒரு தனிமை! அந்த ஜாலியான பந்தாவான தோற்றத்திற்குப் பின்னே, அவருக்கு தன்னுடன் வம்பளக்கிற, சிரித்து அகம் மலர்கிற நண்பர்கள், வாசகர்கள், அன்பர்கள் நிறைய பேர் சுற்றி இருக்க வேண்டும் எனும் ஏக்கம் இருந்தது என நினைக்கிறேன். அவருடைய சிறப்பு இப்படி யோசிக்கவே விடாதபடி தன்னை வேறுவிதமாக - துக்கமே அற்ற, ஒளி ஊடுருவும் கண்ணாடி போன்ற ஒருவராக - நம் மனங்களில் தக்க வைத்துக் கொண்டார் என்பதே. இதை எழுதும் போதும் அவர் பின்னால் இருந்து கனிவான புன்னகையுடன் கூர்மையாக பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது.

ஆழ்ந்த இரங்கல்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...