Skip to main content

ஒரே புனிதப்பசு (இல்லை இரண்டு புனிதப்பசுக்கள்)



இதைக் கேட்க வினோதமாக இருக்கும் - தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய புனிதப்பசு காந்தி தான். 

பெரியாரின் குடியரசு பத்திரிகை கட்டுரைகளின் தொகுப்பை படிக்கையில் அவர் எத்தனை இடங்களில் காந்தியை விமர்சித்திருக்கிறார் என ஒரு பட்டியல் எடுத்தேன். 13 கட்டுரைகளில் பெரியார் காந்தியை கடுமையாக விமர்சிக்கிறார். மிக முக்கியமான கருத்துக்கள் அவை. ஆங்கிலத்தில் அம்பேத்கர் காந்தியை பற்றி எழுதிய விமர்சனங்களுடன் பொருந்திப் போகிறவை அவை. அது மட்டுமல்ல, அருந்ததி ராயின் “டாக்டரும் புனிதரும்” நீள்கட்டுரைக்கும் இணக்கமானவை பெரியாரின் காந்தி விமர்சனங்கள். 

ஆனால் பெரியாரால் எப்படி தமிழர்களின் வைதீக கடவுள் பக்தியை முழுக்க ஒழிக்க முடியவில்லையோ அப்படியே காந்தி பக்தியையும் அவரால் சீண்டக் கூட முடியவில்லை. ஏனென்றால் காந்தியை புனிதராக முன்னெடுத்து ஆங்கிலத்தில் பல லட்சம் பக்கங்களை எழுதி சினிமாக்கள் எடுத்து அவரை ஒரு நவீன ஏசுநாதராக கட்டமைத்து விட்டனர். தமிழில் எழுத்து இதழின் காலகட்டத்தில் இருந்தே ஏகப்பட்ட காந்தி பஜனை கட்டுரைகள், நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பஜனை மடத்தில் இருந்து தோன்றிய இலக்கிய மனங்களுக்கு காந்தி சொன்ன பல மதவாத, பிற்போக்கு கருத்துக்களை மேற்கோள் காட்டினாலே கோபம் வருகிறது. “டாக்டரும் புனிதரும்” கட்டுரை கூட தமிழில் மொழியாக்கம் பெற்று வந்திருக்கிறது. ஆனால் எந்த அறிவுஜீவியும் அதை படித்ததாக கூட காட்டிக் கொள்ள மாட்டார்கள். தமிழில் நீங்கள் எந்த சிறு, நடுநிலை, அச்சு, இணைய பத்திரிகையிலும் காந்தியை மிகச்சற்று விமர்சித்து அவருடைய எழுத்துக்களில் இருந்து மேற்கோள் காட்டிக்கூட ஒரு கட்டுரையை வெளியிட முடியாது. ஆனால் நீங்கள் இங்கே கடவுளை கடுமையாக சாடி எழுதலாம், இங்கே நீங்கள் எந்த சிந்தனையாளரையும், தலைவரையும் விமர்சிக்கலாம், திராவிடத்தை, தமிழ் தேசியத்தை, வைணவத்தை, சைவத்தை விமர்சிக்கலாம். ஆனால் காந்தியை மட்டும் தீண்ட முடியாது. அவர் கடவுளுக்கு அப்பாலான கடவுளாக இங்கு கட்டமைந்திருக்கிறார். 


தமிழ் இலக்கிய சூழலில் முழுமையான கடவுள், மத, மரபு மறுப்பாளராக இருக்க முடியாமல், அதே நேரம் அவற்றில் ஈடுபடவும் முடியாமல் நடுவில் தொக்கி நிற்கிறவர்கள் அநேகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு காந்தி தான் ஒரே புகலிடம். நடுங்கியபடி மழைக்கு ஒதுங்கி நிற்பவரை திரும்ப பிடித்து மழையிலே தள்ளியதைப் போல் ஆகிறது இவர்களுக்கு நாம் காந்தியை விமர்சித்தால். 


 பாஜக முறியடிக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும், காந்தியை விமர்சித்தால் அது காங்கிரஸின் வாய்ப்பை கெடுக்கும் என நம்புகிறவர்களும் உண்டு. அன்னா ஹசாரே காங்கிரஸுக்கு எதிராக செய்த சர்க்கஸை நினைத்து இன்றும் பொதுமக்களிடையே காந்திக்கு பெரும் மதிப்புண்டு என நினைக்கிறவர்கள் உண்டு. எனக்கு இந்தியா காந்தியை கடந்து மிக நீண்ட தூரம் வந்து விட்டது எனத் தோன்றுகிறது. நான் ஏராளமான மாணவர்களிடம் உரையாடுகிறேன், அவர்களிடையே ஒரு காந்தியவாதியை கூட நான் கண்டதில்லை. மாறாக காந்திய கருத்துக்களை வகுப்பில் விவாதித்தால் கண்டமேனிக்கு அவரை இன்றைய மாணவர்கள் திட்டுகிறார்கள். எனக்கே பாவமாக இருக்கிறது என்றால் பாருங்களேன். ஹிந்த் ஸ்வராஜில் உள்ள ஒரு கட்டுரையை நான், காந்திக்கு ஆதரவாக, வகுப்பில் விவாதித்தால் கூட மாணவர்கள் காந்திக்கு ரெண்டு குட்டு விடாமல் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மதிப்பீட்டின் படி காந்தி மிகவும் காலாவதியான ஒரு டினோசர். காந்தி தன் சபர்மதி ஆசிரமத்தில் காதலித்த பெண்களை மொட்டை அடிக்க வைத்து பொதுவில் மன்னிப்பு கேட்க சொன்னதைப் பற்றி லூயிஸ் பிஷர் எழுதி இருக்கிறார் (Life of Gandhi). இதை இங்கே குறிப்பிட்டால் நம் இலக்கிய காந்தியவாதிகள் வந்து “தப்பு தான். ஆனால் அதை அவருடைய காலகட்டத்துக்கு நம்பிக்கைகளின் பின்னணியில் வைத்து பார்க்க வேண்டும்” என எல்லாவற்றுக்கும் ஒரு “ஆனால்” போட்டு உருட்டுவார்கள். ஒரு அம்மிக்குழவி கூட தமிழ் இலக்கிய காந்தியவாதிகள் அளவுக்கு உருளாது. “காந்தியை கொஞ்சம் நியாப்படுத்துங்க” என்று சொல்லி விட்டு ஒரு துண்டு தேங்காயும் புளியும் மிளகாயும் பக்கத்தில் வைத்து விட்டால் உருட்டுகிற உருட்டில் நைசாக சட்னியே அரைத்து கொடுத்து விடுவார்கள். ஆனால் இன்றைய இளம் மாணவிகள் இச்சம்பவத்தை எடுத்து காட்டினால் பழைய செருப்பை எடுத்து காட்டி விடுகிறார்கள். அவர்கள் எல்லாம் காந்தி ஒரு புனிதப்பசு என பயப்படுவதே இல்லை. காந்திக்கு இன்று இந்தியாவில் இருக்கிற ஒரே செல்வாக்கு தமிழ் இலக்கியவாதிகளிடம் மட்டுமே.

எனக்கு இவர்களிடம் உள்ள ஒரே பிரச்சனை வேறு எல்லா விசயத்திலும் கரார்தன்மையை காட்டும், நிஜத்தை எதிர்பார்க்கும் நீங்கள் காந்தி விசயத்தில் மட்டும் ஏன் வேகவைத்த மரிச்சீனி கிழங்கைப் போல இப்படி குழைகிறீர்களே என்பது தான். இந்த மிகைப்படுத்தல், பக்தி, கண்ணீர் மல்கலை விட்டு விட்டு நிஜ காந்தியைப் பற்றி பேச மறுக்கிறார்கள் என்பதே. அண்மையில் போகனிடம் பேசும் போது தல்ஸ்தாயின் உண்மைப் பக்கத்தை, அவருடைய பல கீழ்மைகளைப் பற்றி பேசினால் தமிழில் பலர் புண்படுகிறார்கள், ஏனென்றால் தமிழில் அவரை அறிமுகப்படுத்தியவர்கள் மிகவும் புனிதப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் காந்தியின் குருநாதர் தான் தல்ஸ்தாய். சீடரை அம்பலப்படுத்தினாலே தாங்காதவர்கள் குருவைப் பற்றி பேசினால் மட்டும் பொறுப்பார்களா? தமிழ் இலக்கிய உலகம் இப்படி பல “தெய்வங்கள் வாழும் நிலமாக” இருக்கிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...