Skip to main content

இந்த பிறந்த நாளின் போதான எண்ணங்கள்



முந்தின வருடத்தை விட இந்த வருடம் எனக்கு மகிழ்ச்சியானதாக, நம்பிக்கையளிப்பதாக உள்ளது. எல்லா பிறந்த நாட்களிலும் நான் வழக்கமாக உற்சாகமாக இருப்பேன். கடந்த சில வருடங்களே விதிவிலக்கு. இவ்வருடம் நான் மீண்டும் அதே உற்சாகத்தை திரும்பப் பெற்றிருக்கிறேன். குறிப்பாக கடந்த ஒரு மாதமாக மனம் சற்று தெளிவாகி இருக்கிறது. சின்னச் சின்ன, சில நேரம் பெரிய பிரச்சனைகளைக் கூட அதிகம் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எடுத்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான ஒரு காரணம் எனக்கு அளப்பரிய அன்பைத் தரும் நண்பர்கள் என் நெஞ்சிற்கு இனியவர்களும். மற்றொரு முக்கிய காரணம் சற்று விசித்திரமானது:


பிறர் தமது அனுபவம், உள்ளுணர்வு வழியாக கற்கிற பாடங்களை நான் எப்போதும் வாசிப்பு வழியாகவே கற்கிறேன். ஒருவேளை ஒரு புத்தகம் தர்க்கரீதியாக பிசிறில்லாத கருத்தாக்கமாக ஒரு பாடத்தை அளிக்கும் போது அது சுலபத்தில் என் மனதில் போய் சப்பணமிட்டு அமர்ந்து கொள்கிறது என நினைக்கிறேன், ஆனால் உணர்வுரீதியான அனுபவங்களை நான் ஆர்ப்பார்ட்டமாக எதிர்கொள்ளும் போது இயல்பாகவே அவை என் மனக்கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி விடுகின்றன. அவ்விதத்தில் அண்மையில் அரிஸ்டாட்டிலை தொடர்ந்து வாசித்தது, அவருடைய கருத்துக்களைப் பற்றி யோசித்து எழுதவும் செய்தது எனக்கு மிகவும் உதவி உள்ளது. அது எனக்குள் ஏதோ ஒரு மாயத்தை செய்து விட்டது. அவர் கவிதையியல், அறம் குறித்து சொல்லி உள்ள கருத்துக்கள் கூட இந்த உலகை, மனிதர்களை, வாழ்வை அறிவதை சற்று சுலபமாக்கி உள்ளது. நான் கடுமையான அழுத்தத்தில் இருந்த நாட்களில் இது எனக்கு மிகவும் தேவைப்பட்டது. இத்தனைக்கும் நீண்ட காலமாக அவரைக் குறித்து எனக்கு ஒரு எதிர்மறையான எண்ணமே இருந்தது, ஆனால் இப்போது அவர் என்னுடைய ஆசான்களில் ஒருவராகி விட்டார். 


இப்போது நான் இந்த வாழ்க்கையை ஒரு பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளமாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு சிறு பகுதியிலும் பலவிதமான படங்களின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. நான் என் வாழ்க்கையின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினால், முடிந்தளவுக்கு பிறருடைய படப்பிடிப்பு உதவினாலும் போதும். ஒவ்வொரு பிரச்சனையும் தனிமனிதர் எனும் நடிகர்களாலோ அவர்களுடைய பாத்திரங்களாலோ அவர்களை உருவாக்கிய திரைக்கதையாலோ மட்டுமே விளைவதில்லை. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று கலந்ததாக, ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்துவிட முடியாதபடி பிணைந்ததாக இருக்கின்றன. ஆகையால் நான் என்னையோ பிறரையோ குற்றம் சொல்வதில் பொருள் இல்லை. திரைக்கதையின் நோக்கம் அர்த்தத்தை உண்டு பண்ணுவது, அர்த்தத்தின் நோக்கம் மகிழ்ச்சியை தருவது. ஆக, தொடர்ந்து ‘திரைக்கதையை’ செறிவாக்கும் பணியை மட்டும் நான் செய்திருந்தால் போதும் என கற்றுக் கொண்டேன். 


அண்மையில் எனக்கு காவல் நிலையம் செல்லும் அளவுக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அப்போது ஒரு ‘தவறான படப்பிடிப்பின்’ பக்கம் கூட தலைகாட்டக் கூடாது, ‘மோசமான இயக்குநர்கள்’, ‘அபத்தமான ‘திரைக்கதைகளிடம்’ இருந்து விலகி இருக்க வேண்டும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு வற்புறுத்தி நம்மை ‘நடிக்கக்’ கேட்டுக் கொண்டலும் சரி எனப் புரிந்து கொண்டேன்.   


இந்த இனிய பிறந்த நாளின் போது என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் ஆழ்மனதில் இருந்து அன்பையும் முத்தங்களையும் அளிக்கிறேன். அரிஸ்டாட்டில் எனும் அந்த மாமனிதனையும் இந்நாளில் வணங்குகிறேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...