Skip to main content

எழுத்தாளனின் பகைவன்


“நம்மால் இந்த பெங்களூர் குளிரைத் தாங்கிக் கொண்டு எழுதவே முடியவில்லை, ஐரோப்பா போன்ற தேசங்களில் குளிர்காலங்களில் எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள்?” என்பது எனக்கு புரிபடாத மர்மங்களில் ஒன்று. குளிர்காற்று அடிக்கும் போது ஒன்று கம்பளி அங்கியை அணிந்திருக்க வேண்டும், அல்லாவிட்டால் அடிக்கடி கைகளைக் கொண்டு உடம்பை நாமே அணைத்துக் கொள்ள வேண்டி வரும். சரி, அப்படியே கம்பளி உடை அணிந்திருந்தாலும் விரல்கள் குளிரில் விரைக்கிற உணர்வு வரும் போது தட்டச்சுவது சிரமம். கையுறை அணிந்து எழுதலாம் என்றால் விரலின் சருமம் பொத்தான்களில் படுகிற உணர்வு கூட இல்லாமல் என்ன எழுத்து? இது போக, அடிக்கடி உள்ளிருந்து குளிர் கிளம்பி வந்து காதுக்குள் கெக்கலிக்கும் போது ஒருவேளை நிஜமாகக் குளிர்கிறதா அல்லது நமக்குத் தான் ஜுரம் வந்து விடுகிறதா என சந்தேகம் வருகிறது. இந்த அவஸ்தைகள் தொடர்ந்து எழுத்தின் சரளத்தில் இருந்து நம்மை தடம் புரள வைக்கிறது. அதே நேரம் எழுத்து குழாயைத் திறந்ததைப் போல கொட்ட ஆரம்பித்து விட்டால் குளிரின் தாக்குதல் மறந்து போகும். “ரொம்ப நேரமா என்னை மறந்திட்டியா?” எனக் கேட்டபடி உடனே அது தன் ஜில்லென்ற விரல்களை நம் விலாவிலோ முதுகிலோ வைத்து திரும்பவும் கவனத்தை சிதறடிக்கவும் செய்யவும். 


சென்னையில் வியர்வை நெற்றியில் இருந்து ஒழுக, கழுத்துப் பக்கம் கசகசக்க எந்த கவலையும் இல்லாமல் என்னை மறந்து நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த குளிர் அவ்வளவு அந்நியமாக இருக்கிறது. ஒருவேளை குளிரிலே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதனுடன் ஒரு சினேகம் ஏற்பட்டு “வாப்பா பக்கத்தில் வந்து உட்காரு” என்று அழைத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அதனுடன் இணக்கமாக இருக்க முடியலாம். வெப்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு அது சாத்தியமில்லை.


அப்புறம், சென்னையில் வெக்கை என்றால் அது எப்போதும் ஒரே போலத்தான் இருக்கும். இங்கோ பத்து நிமிடத்துக்கு முன் வீசிய குளிர் காற்றை இப்போது காணோம். லேசாக வெப்பம் மிதந்து வருகிறது. காலையில் ரொம்ப குளிர்கிறது என்று கம்பளி அணிந்து வந்தால் பத்து மணிக்கு மேல் வெயில் உறைக்கிறது. சரி ரொம்ப வெயில் போல என ஹய்யா என்று உட்கார்ந்தால் குளிர் பதுங்கியிருந்த சீரியல் கில்லரைப் போல பாய்ந்து வருகிறது. சற்றும் கணிக்க முடியாத, முரண்படும் உணர்வு வெளிப்பாடுகளால் ஆன ஒரு உறவைப் போல இது இருக்கிறது. அவ்விதத்தில் “காதலில் சொதப்புவது எப்படி?” படத்தின் அமலா பாலைப் போல இருக்கிறது பெங்களூர்.


ஒரு காலத்தில் குளிர்மையை மிகவும் ரொமாண்டிசைஸ் பண்ணியிருக்கிறேன். இப்போது தான் எஸ்.ரா ஏன் வெயிலைப் பற்றி மருகி மருகி தன் நாவல்களில் எழுதுகிறார் எனப் புரிகிறது. வெயிலின் பிள்ளைகளால் குளிரின் சித்தி கொடுமையை தாள முடியாது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...