Skip to main content

பெற்றோர்களின் அட்ராசிட்டிகள்

 

ஒரு செய்தியைப் படித்தேன். தமிழகத்தின் சிறுநகரம் ஒன்றை சேர்ந்த இரு இளம்பெண்கள். தன்பால் விழைவாளர்கள். கல்லூரியில் ஒருவர் நர்ஸிங் படிக்க மற்றொருவர் ஆங்கில இலக்கியம் இளங்கலை முதலாமாண்டு படிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ முடிவெடுத்து சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். பெற்றோர்கள் போலீஸில் வழக்கு கொடுத்து இப்பெண்களை பிடித்து கொண்டு போய் விடுகிறார்கள். “போலிசார் இப்பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்என சன் நியுசில் சொன்னார்கள். அப்படி அறிவுரை சொல்லும்படி என்ன குற்றம் பண்ணினார்கள்? காதலிப்பது குற்றமா? லெஸ்பியனாக இருப்பது குற்றமா? இந்த பாலின அரசியல் புரிதலற்ற போலிசாரை திருத்த முடியாது. அதை விடுங்கள். உண்மையான பிரச்சனை இனிமேல் தான் ஆரம்பிக்க இருக்கிறது. அடுத்தடுத்து இப்பெண்களின் பெற்றோர்கள் என்ன செய்வார்கள் என சொல்லி விடுகிறேன். ஏனென்றால் இதைப் போல நிறைய கேஸ்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்:


  1. இப்பெண்களை அவரவர் குடும்பங்களில் இருந்து சில போலி உளவியலாளர்கள், மருத்துவர்களிடம் அழைத்துப் போவார்கள். எதற்கு? தன்பால் விழைவு தப்பு என மூளைச்சலவை செய்ய. அது எடுபடாது. அதானால் அடுத்து இவர்களுடைய உடம்பில் எஸ்டிரஜன் ஹார்மோனை அதிகமாக்க மருந்துகளை ஏற்றுவார்கள். இந்த சிகிச்சைக்கென கணிசமான ஒரு தொகையை இம்மருத்துவர்கள் வசூலிப்பார்கள் (இப்படி ஒருவர் முன்பு ஜு.வியில் பத்தி ஒன்றைக் கூட எழுதிக் கொண்டிருந்தார்.) இந்த சிகிச்சையும் பலன் தராது.
  2. இந்த பெண்கள் தம் பெற்றோரை ஒருவழியாக ஏமாற்றி பட்டப்படிப்பை முடிப்பார்கள். ஒன்று அவர்களுடைய பழைய காதல் முறியும், புது காதல்கள் பிறக்கும், அல்லது பழைய காதலையே தொடர்வார்கள். படிப்பு முடிந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கு வரன் பார்க்க ஆரம்பிப்பார்கள். உடனே கல்யாணம் பண்ணிக்கோ என நச்சரிப்பார்கள். இப்பெண்களுக்கும் பெற்றோருக்கும் மோதல் வெடிக்கும். “நாங்க கேட்கிறது படி கல்யாணம் பண்ணிக்கோ, அதன் பிறகு என்ன எழவுன்னாலும் பண்ணித்தொலைஎன்பார்கள். ஒரு மறைமுக ஒப்பந்தம். அதைத் தொடர்ந்து திருமணம் நடக்கும்.
  3. தான் மணப்பது ஒரு தன்பால் விழைவாளரை என்று உணராமலே ஒரு மரமண்டை இவர்களை கல்யாணம் பண்ணிக்கும். அடுத்து தாம்பத்ய வாழ்வில் பல பிரச்சனைகள் வெடிக்கும்.
  4. சொல்லி வைத்தது போல ஆறு மாதத்தில்லோ ஒரு வருட முடிவிலோ அந்த பெண் மூட்டை முடிச்சை தூக்கிக் கொண்டு தன் பெற்றோரின் வீட்டுக்கு வந்து விடுவார். முதலில் போலீஸ், மருத்துவர்கள் என தய்யத்தக்கா என குதித்த பெற்றோர் இப்போது அமைதியாக / கமுக்கமாக தம் மகளின் முடிவை ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தேவை சமூகத்தின் வாயை மூட ஒரு கல்யாணம் பண்ணி வைப்பது. தம் மகளிடம்குற்றமில்லைஎன்று ஊருக்கு காட்டுவது. இதனால் அப்பாவி ஆண் ஒருவனின் வாழ்க்கை நாசமாவதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
  5. அடுத்தது, பெற்றோர் தம் பெண்ணுக்காக விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவார்கள். அதில் கணவன் அவளை கொடுமை செய்தான், தாம்பத்ய சுகம் அளிக்கவில்லை, உளநெருக்கடி கொடுத்தான் என குற்றச்சாட்டுகளை அடுக்குவார்கள். அவர்கள் தரப்பில் சுமூகமான விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வருடக்கணக்கில் இப்பிரச்சனை ஓடும். பெரும்பாலும் சீக்கிரமாகவே முடித்து விடுவார்கள்
  6. இப்பெண்கள் இப்போதுவிடுதலைபெறுவார்கள் - வேலை ஒன்றை தேடிக் கொண்டு சுதந்திரமாக இருப்பார்கள். தம் காதலியுடன் சேர்ந்து வாழ்வார்கள். பெற்றோர் இதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் இவர்கள் இடையே மாட்டி சில ஆண்கள் வாழ்வை இழப்பார்கள். எப்படி இருக்கிறது இவர்களுடைய அறம்?

இது போல தன்பால் விழைவாளரான ஆண்களை வற்புறுத்தி மணமுடித்து வைக்கும் பெற்றோரும் உண்டு. அதனால் பெண்களின் வாழ்க்கை இன்னொரு பக்கம் நாசமாகிறது.


இதற்கு தீர்வு ஊடகங்களில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி பிரச்சாரம் மேற்கொள்ளுவது, பெற்றோரைத் திருத்துவது, குழந்தைகளை வற்புறுத்தி மணமுடித்து வைக்கும் பெற்றோருக்கு ஐந்து வருடங்களாவது சிறைத்தண்டனை கொடுப்பது. இந்த போலி மருத்துவர்களுக்கு கடுமையான தண்டனை அளித்து அவர்களுடைய சான்றிதழ்களை பறிப்பது.


என்னவொரு காட்டுமிராண்டி சமூகம் இது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...