முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லியும் தமிழ் எழுத்தாளர்களும்



எழுபது, எண்பதுகள் வரை தில்லியில் வாழ்ந்த மத்தியவர்க்க தமிழ் புனைவெழுத்தாளர்களின் கதைகளில், நாவல்களில் சுதந்திர தின அணிவகுப்பைக் காண குடும்பத்துடனோ நண்பர்களுடனோ செல்லும் காட்சி தவறாமல் வருகிறது. அவ்விவரணைகளில் ஒரு திகைப்பு, பிரம்மாண்டம், சாகசங்களுக்கான எதிர்பார்ப்பு, தன்னை மறந்த பரவச உணர்வுகளும் தவறாமல் தோன்றுகின்றன.  ராணுவம், மாணவர்களை உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட, சீருடை அணிந்த திரள், ஆயுதங்கள் உணர்த்தும் கட்டுப்படுத்தப்பட்ட வன்முறை, அதிகாரத்தின் ஒழுங்கமைவு, ஆடல், பாடல் எனும் தேசியப் பண்பாட்டுப் பெருமிதம் ஆகியவை அவர்களை கிளர்ச்சியடைய வைக்கின்றன. அல்லது தம் அன்றாட வாழ்வின் அலுப்புகளை கூடுதலாக நினைவுபடுத்துகின்றன. இந்த தேசத்தின் அச்சமூட்டும் அதே சமயம் சிலிர்ப்பு தரும் அரசதிகாரத்தின் முகத்தை அவர்கள் முன் இந்த அணிவகுப்புகள் திரைவிலக்கி காட்டுகின்றன. இறையாண்மையை அருகில் போய் பார்க்கும் ஒரு 'தீபாராதனை சடங்காகவும்' அந்த கால மத்திய வர்க்கத்துக்கு இந்த அணிவகுப்புகள் இருந்திருக்கலாம்.அல்லது வெற்றுப் பொழுதுபோக்காகவும் இருந்திருக்கலாம்.

ஆனால் இந்த படைப்பாளிகள் வெகுமக்கள் ஒரு அரசியல் இயக்கத்தின் சார்பில் திரள்வதையோ, சித்தாந்தம் பேசும் கூட்டங்களையோ இப்படி ரசித்து, பிரமித்து சித்தரிப்பதில்லை. அதாவது ஜனநாயக அரசியல் மீதுள்ள அவநம்பிக்கை, ஒவ்வாமை, தேசிய கட்டமைப்பு, இறையாண்மை, தில்லி மீது ஒரு பிரமிப்பு, நல்லுணர்வு எனும் இருமை இவர்களின் புனைவுகளில் வெளிப்படுகின்றன. 

ஒரு கட்டத்துக்கு மேல் இத்தகைய காட்சிகள் நம் கதைகளில் வருவது நின்று போனது. தொண்ணூறுகளில் இந்த அணிவகுப்பை டிவியில் பார்த்தோம். நான் சென்னையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் இருந்த போது காலையில் கிளம்பிப் போய் பார்த்திருக்கிறேன். ஆனால் பரவசமெல்லாம் இல்லை. ஒரு முடிந்து போன சர்க்கஸ் மூட்டை முடிச்சுகளுடன் புறப்படுவதைப் பார்க்கும் உணர்வு. இப்போதைய எழுத்தாளர்களுக்கு இதெல்லாம் வெற்றுச்சடங்குகள். அவர்கள் விக்ரம் பட ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் குறைவாக எதையும் பிரம்மாண்டமாக ஏற்கப் போவதில்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...