முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சஹஹிருதயர்கள்


நான் எந்த தீவிர படைப்பாளிக்கு, சிறுபத்திரிகை மரபுக்கு, இலக்கியத்துக்கு பங்களித்த படைப்பாளிக்கு தேசிய விருது கிடைத்தாலும் அதை ஆதரித்து வாழ்த்தி இருக்கிறேன். ஏன் இவருக்கு, அவருக்குக் கொடுக்கவில்லை என்று புலம்பியதில்லை. சரியான ஆட்களுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் மிகச்சரியானவர்களுக்கும் ஒருநாள் வந்தே ஆகும் என நம்புகிறேன். லாபி செய்தாலும் இல்லாவிட்டாலும் கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும். நான் எந்த லாபியும் பண்ணினதில்லை, என்னைப் போல கடுமையான விமர்சனங்களை சக படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள், சமூகம், ஆட்சியில் உள்ள அரசியல் இயக்கங்கள் மீது வைத்தவர்கள் என் வயதில் எத்தனை பேர் உண்டு? இப்படிப்பட்ட எனக்கே இரு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. நண்பர் பாவெல் சக்தி தினம் தினம் எழுதுவதன் லாஜிக் படி எனக்கெல்லாம் ஒரு சொப்பு சாமான் கூட கிடைத்திருக்கக் கூடாதே. அவர் பேஸ்புக்கில் வீசும் கத்தியை அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே நான் காத்திரமான விமர்சனமாக வீசியிருக்கிறேனே. வெறும் மீம் போடாமல் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறேனே. என்னை என்ன ஒதுக்கி வைத்து விட்டார்களா? நான் கடுமையாக விமர்சித்த ஜெயமோகன் தான் என்னை தன் விஷ்ணுபுரம் அரங்குக்கு பேச அழைத்தார். நான் அதன் பின்னர் ஒரு நூறு பக்கங்களாவது அந்த அமைப்பை விமர்சித்து எழுதினேன். அந்த சுதந்திரம் இங்கு எல்லாருக்கும் உள்ளது. அதை பயன்படுத்துவது நம் உரிமை, நம் பொறுப்பு. இங்கே ஏதோ ஜால்ராவால் தான் எழுத்தாளன் பிழைப்பதாக நினைப்பது எல்லாம் நமக்கு ஏற்படும் மனபிராந்தி மட்டுமே.
நாம் தொடர்ந்து வேலை செய்தால் நமக்கான அங்கீகாரம், விருதுகள் வந்தே தீரும். அதைச் செய்வதற்கான அச்சம், தயக்கமே நம்மை பல சதியாலோசனைகளை கற்பனை பண்ண வைக்கிறது. இவர்கள் பேசும் சதியாலோசனைகள் நடைமுறையில் எங்கும் இல்லை. நம்மைக் கண்டு சக எழுத்தாளர்கள் வெறுப்பில் முகம் சுளிப்பதாகக் கருதுவதும் ஒரு கற்பனை. நாம் அவர்களை வெறுப்பதாக நினைத்து அவர்கள் ஒதுங்கிப் போவதே உண்மை. இந்த பரஸ்பரம் பயம், பயத்தினால் வரும் வெறுப்பு தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு.
உண்மையில் நம்மை பழிவாங்க எந்த இலக்கியவாதியும் திரிவதில்லை. நம்மைக் கொல்ல வேண்டும் என மனதில் கத்தியோடு திரிபவர்கள் நம் மனைவி, சகோதர சகோதரிகள், உறவினர்கள் மட்டுமே. எழுத்துலகம் மிக பாதுகாப்பானது. இதுவரை சொத்துக்காகவோ துரோகத்தின் பேரிலோ ஒரு கொலையோ விவாகரத்தோ கூட இலக்கிய உலகில் நடந்ததில்லை. ஆனால் இந்த கேள்விகளை உங்களுடைய மனைவியை நோக்கி கேட்க முடியுமா? மாட்டீர்கள். கேட்டால் இரவில் அம்மிக்குழவியை தூக்கி தலையில் போட்டு விடுவார்களோ என பயம். குழந்தைகளை நோக்கிக் கேட்டால் “போடா” என்று சொல்லி விடுவார்களோ என் பீதி. உறவினர்களிடம் தகராறு பண்ணினால் ஊரை விட்டு ஒதுக்கி விடுவார்கள். உண்மையில் சக இலக்கியவாதிகள் உங்களை பழிவாங்க சதியில் எல்லாம் ஈடுபடுவதில்லை. உங்களை ரொம்பவெல்லாம் துன்புறுத்துவதில்லை. நீங்கள் கொஞ்சிக் குலவினாலும் எதையும் தூக்கிக் கொடுக்க மாட்டார்கள். நீங்கள் தொடர்ந்து தீவிரமாக இயங்கும் போது, சந்தர்ப சூழல் கூடி வந்தால் விருதுகள், அங்கீகாரங்கள் வரும். இதுவே எதார்த்தம். பாவெல் அண்ணே, எனக்குத் தெரிந்து நான் ஒருமுறை கூட பேசியிராத இலக்கியவாதிகள் கூட என்னிடம் அன்பையும் மரியாதையும் அளித்திருக்கிறார்கள். உங்களுக்கும் அது கிடைக்கும். யுத்தம் வருமுன்னே கோட்டைக் கதவுகளை இழுத்து சாத்தாதீர்கள். என் அனுபவத்தில் சொல்கிறேன்: உங்கள் மொத்த குடும்பமும் உங்களை கைகழுவும் நாள் ஒன்று வரும். ஆனால் நீங்கள் காறித்துப்பும் நாங்கள் உங்களுடன் இருப்போம். சாரு சொல்வதைப் போல எழுத்துலகமே சஹஹிருதயர்களால் ஆனது. ரத்த உறவுகளும் கூட இருப்பவர்களும் ரத்தக் காட்டேறிகள்.

கருத்துகள்

தியானி - Dhyaani இவ்வாறு கூறியுள்ளார்…
ச(ஹ)ஹ்ருதயர்கள், காட்டேறிகள் - very much liked and laughed out loud on these intended puns. Your views on this issue are fair and square.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...