Skip to main content

அரைவினாடி தாமதமாக செயல்படும் உடல்



பொதுவாக கொழுப்புணவுகள் சுவையானவை. சாப்பிட்டதும் நிறைவு தருபவை. அதனால் கீட்டோ உணவு முறையின் முதல் இரு நாட்கள் நன்றாகவே போயின. மூன்றாவது நாள் தான் தலைவலி, சிறிது களைப்பு தென்பட்டது. அடுத்து இந்நிலை மோசமாகி ஒருவிதமான கோபம், கடுப்பாக மாறி யாரைப் பார்த்தாலும் கொலைகாண்டாகத் தொடங்கியது. தலைசுற்றல் ஏற்படவில்லை, இயல்பாகவே எல்லா வேலைகளையும் பண்ண முடிந்தது. வகுப்பில் நன்றாகவே பேசினேன். அன்றாட வேலைகளிலும் குழப்பம், நினைவு மறதி ஏற்படவில்லை. ஓய்வு நேரத்தில் நிறைய எழுதக் கூட முடிந்தது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசத்தை உணர்ந்தேன். முன்பு நான் எழுதும் போது விரல்கள் வேகமாக தட்டச்சுப் பலகையில் விளையாடும். ஆனால் இன்றோ நான் நினைத்த சொல்லை ஒரு வினாடி தாமதமாகவே என் விரல்கள் அடித்தன. அதாவது நான் நினைப்பதற்கும் என் உடல் செயல்படுவதற்கும் இடையே ஒரு மிகச்சிறிய தாமதம், lag உணர்ந்தேன். என்னுடைய இதுவரையிலான எழுத்துப் பயிற்சியினால் இக்குறையைக் கடந்து எழுதவும் வேறு வேலைகளை முடிக்கவும் இயன்றது.


ஆனாலும் இன்று முழுக்க மனதின் பின்னால் கண்ணுக்குப் புலப்படாத யார் மீதோ கடும் வன்மம் நொதித்துக் கொண்டிருந்தது. இன்று கஷ்ட காலத்துக்கு யாராவது என் கோபத்தை கிளறும்படியாக, என்னை சீண்டும்படியாக நடந்திருந்தால் நான் நிச்சயமாக என் கட்டுப்பாட்டை இழந்திருப்பேன். நல்லவேளை இன்று உலகம் மிக அமைதியாக என் முன் காட்சியளித்தது. சாலையில் கூட வாகன நெரிசல், இடைஞ்சல்கள் இல்லை. எப்படியோ பகல் நேரப் பணிகளை முடித்து வீட்டுக்கு வந்து ஒரு ஆம்லெட்டை மட்டும் சாப்பிட்டு விட்டு குத்துச்சண்டை பயிற்சிக்காக ஜிம்முக்கு சென்றேன்.


இன்று மாஸ்டர் ஒரு கடினமான அடவைப் பயில வைத்தார். என் எதிரே ஒரு பையன் உட்கார்ந்து கொண்டு இடது கையால் குத்துவான். நான் தலையை இடப்பக்கமாக அசைத்து அந்த குத்தை தவற விட்டு அவனுடைய கை திரும்பப் போகும் முன்பே அதன் மீதாக என் வலக்கை கொண்டு அவனுடைய கைக்கும் தலைக்குமான இடைவெளியில் குத்த வேண்டும். இதைப் புரிந்து கொண்டு சரியாகப் பயிலவே நேரம் பிடித்தது. நான் நினைத்து குத்துகிறேன், அது சில நொடிகள் தாமதமாகவே போய் படுகிறது. நான் தலையை சாய்த்து மிஸ் பண்ணுறேன், ஆனால் நினைத்த வேகத்தில் தலை அசையவில்லை. ஒருவழியாக இதை செய்து காட்டிய பின்னர் அடுத்ததாக மிஸ் பண்ணி குத்தி விட்டு அதே சரளத்துடன் என்னுடைய கை என் வலது காதைப் பாதுகாக்க வரும் முன்பே இடக்கை எதிராளியை அடைந்து அவனை அப்பர் கட் செய்ய வேண்டும் என்றார் மாஸ்டர். எப்படியென்று செய்தும் காட்டினார். இரண்டு குத்துக்களையும் வேகமாக ஒரே ஒழுக்கில் விட என்னால் முடியவில்லை. விலகி மிஸ் பண்ணி குத்தி விட்டு அடுத்தொரு அப்பர் கட்டை விட்டாலும் என் உடம்பு தனியாகவும் கைகள் தனியாகவும் இயங்குவதைப் போலொரு உணர்வு. அப்போது தான் மாஸ்டர் வந்துஉங்க மைண்ட் இங்க இல்ல. வேறெதையோ யோசிச்சிட்டு இருக்கீங்கஎன்றார். நான் அவரிடம் கீட்டோவின் மூன்றாவது நாளாகையால் என் உடல் நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறது என்றேன். அவர் கிளம்பும்படி சொன்னார்


அப்போது தான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது - முழுமையான மன ஆற்றலோ, உடல் வேகமோ இல்லாமல் இருந்தால் கூட பேசுவது, யோசிப்பது, எழுதுவது போன்ற வேலைகளை சமாளிக்க முடிகிறது. உடம்பு சுத்தமாக முடியாத சந்தர்பத்தில் கூட சுணக்கமின்றி ஒரு நாவலை எழுத, ஒரு பாட்டைப் பாட, ஒரு மணிநேரம் மேடையில் பேச, தர்க்கரீதியாக சிந்தித்து முடிவெடுக்க முடிகிறது. ஆனால் உடலை முழுக்க பயன்படுத்த வேண்டிய இடங்களில் தான் அந்த தாமதமான எதிர்வினைகள் நம்மை கைவிட்டு விடுகின்றன. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நம் உடல் முழுக்க அம்பலப்பட்டு விடுகிறது. ஒரு அரைவினாடி தாமதத்தில் உடல் இயங்குவது கூட அங்கு அனைவருக்கும் புலப்பட்டு விடுகிறது

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...