Skip to main content

நண்பர் லஷ்மி சரவணகுமாருக்கு (சற்று தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துகள்!

 


லஷ்மி சரவணகுமார் பங்கேற்ற ஒரு கூட்டத்திலே நான் இதைச் சொன்னேன் - எதிர்கால தமிழ் இலக்கியத்தின் திசைகளைத் தீர்மானிக்கும் ஒரு சில படைப்பாளிகளில், ஆளுமைகளில் ஒருவராக அவர் இருப்பார். எழுத்து மட்டுமல்ல, தொடர்ச்சியான வாசிப்பு, தனக்கான பாதையை அமைக்கும் முயற்சி, அயராமல் தன்னை தக்க வைக்கும் முனைப்பு ஆகிய இயல்புகளை நான் என் தலைமுறையினர் அனைவரிடம் காண்பதில்லை. நிறைய பேர் தனிப்பட்ட தேவைகளால் இலக்கிழந்து போகிறார்கள். ஒரு சில புத்தகங்கள் எழுதிய பிறகு ஒரு நீண்ட இடைவெளி, அடுத்து திரும்ப வருகிறார்கள், காணாமல் போகிறார்கள், அல்லது வெறும் தோற்றமாக மட்டும் நிலைக்கிறார்கள். லஷ்மி என்ன தடுமாற்றங்கள் வந்தாலும் இலக்கிய குதிரையில் இருந்து இறங்குவதே இல்லை என்பது பாராட்டத்தக்கது. இன்னொரு பக்கம் சினிமாவிலும் இயங்கி வருகிறார். இரு எதிரெதிரான களங்களில் வேலை செய்வது மிக மிக கடினம். கடும் பிரயாசை, கவனம், தீர்க்கமான பார்வை இருந்தாலே அது சாத்தியமாகும்.


கடந்த பத்தாண்டுகளில் அவர் சிறுகதைகளில் கையாண்டுள்ள பரப்பு, உணர்ச்சிகள், வித்தியாசமான கதையமைப்புகளைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே கதையை திரும்பத் திரும்ப எழுதக் கூடாது எனும் தெளிவும், ஆசான்களை பிரதியெடுக்கக் கூடாது எனும் முடிவும், தனக்கான எழுத்துலகை உருவாக்க வேண்டும் எனும் தீர்மானமும் இக்கதைகளின் பின் இருக்கிறது


புதிய உலகொன்றை, தனக்கேயான உலகொன்றை உருவாக்க முயலும் படைப்பாளிக்கே ஆன தடுமாற்றங்களை அவருடைய கதைகளிலும் காண முடியும். அதுதான் அவருடைய வலிமை என்றும் தோன்றுகிறது.


கடந்த ஓராண்டில் வெகுஜன பரப்பில் அவர் எழுதிய தொடர்புனைவில் தன் மொழியை, கதைகூறும் பாணியை சற்றே லகுவாக்கி, பரபரப்பாக்கியிருக்கிறார். நரனும் இதைச் செய்திருக்கிறார். இது இன்று தோன்றியுள்ளதொரு போக்கு


அதே போல கடந்த ஏழாண்டுகளில் அவர் சிறுகதையின் இலக்கணத்தை, வடிவ ஒருங்கை மீறி நாவலுக்கான களத்தை சிறுகதைக்குள் கொண்டு வருகிறார். சில சிறுகதைகளை சுருக்கமான திரைக்கதை வடிவிலும் எழுதுகிறார். இதைப் பற்றி நான் விசாரித்த போது சிறுகதையின் கராறான இரும்பு விதிகள் மூச்சுத்திணறடிக்கும் வகையில் உள்ளன, அவற்றை மீறிப் போக வேண்டும் என்று தெரிவித்தார். இது தான் எனக்கு லஷ்மியிடம் பிடித்தது - சரியோ தப்பா தான் என்ன செய்கிறோம், செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவு அவரிடம் உண்டு. யோசித்தால் உடனடியாக செயல்படுத்தும் பாங்கும் அவருக்கு உண்டு.


தற்போது அவரது மோக்லி அமைப்பைக் கொண்டு அவர் ஒருங்கிணைக்கும் கூட்டங்களும் முக்கியமானவை. சிலரைப் போல ஒரு அமைப்பை உருவாக்கி தன் படைப்புகளைப் விளம்பரப்படுத்த அதை பயன்படுத்தாமல் தான் நம்புகிற, முக்கியமாக கருதுகிற விசயங்களை, ஆளுமைகளை உள்ளே கொண்டு வந்து அக்கூட்டங்களை நடத்துகிறார். மடங்களை உருவாக்க முயலவில்லை.


மனதளவில் லஷ்மி இன்னும் ஒரு 12 வயதுக்காரரே என அவரிடம் பேசும் போதும் அவர் தன் அப்பாவைப் பற்றி எழுதியுள்ளவற்றைப் படிக்கையிலும் தோன்றும். அதாவது தன்னை ஒரு தன்னிலையாக அவர் எப்படி பார்க்கிறாரோ அந்த பிம்பத்தை சொல்கிறேன். அந்த பிம்பத்தின் குரலிலே அவர் எழுத்துக்குள் பேசுகிறார். அவருடைய புனைவுகளிலும் அவர் தனக்கென முதிர்ச்சியான குரலை உருவாக்கிக் கொள்வதில்லை. அவருடைய கதைகளில் - குறிப்பாக தன்மையில் (first person) சொல்லப்படும், பெண்களை மையமிட்ட கதைகளில் - ஒலிப்பது இந்த பன்னிரெண்டு வயதினனின் குரலே. தான் எப்படியே தன் கதைகளிலும் அப்படியே இருக்க முயல்வது தான் அவரது பிரதானமான சிறப்பே. அதில் செயற்கைத்தனம், நாடகம் துளியும் இல்லை. அவரது எழுத்து நம்மை ஈர்ப்பதற்கு - அதன் கலைத்தன்மையை, மனவெழுச்சியை கடந்து - இந்த உளவியலும் ஒரு முக்கிய காரணம். மேற்கில் ஜெ.சி சாலிங்கர், புக்காவஸ்கி போன்றோர் - வேறு தளங்களில், சூழல்களில் - இப்படியான பதின்வயது ஆளுமையை எழுத்துக் குரலாக உருமாற்றி வெற்றி கண்டவர்களே.


லஷ்மி சரவணகுமார் சினிமாவிலும் வெப்சீரிஸிலும் வெற்றி பெற இத்தருணத்தில் வாழ்த்துகிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...