Skip to main content

ஒரு வெட்டுக்கிளியின் விபத்து




நான் என் தானியங்கி சக்கரநாற்காலியை விடுகிற இடத்தில் காலை நேரத்தில் தேனீக்கள், வண்டுகள், குளவிகள், வெட்டுக்கிளிகள் தினமும் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் பண்ணும். இன்று காலை நான் என் அலுவலகத்துக்காக மின்தூக்கியில் ஏறும் போது என் பையில் அந்த வெட்டுக்கிளியைப் பார்த்தேன். ஆர்ப்பாட்ட களத்தில் இருந்தே என் பையில் வந்தேறியிருக்க வேண்டும். இளம்பச்சையில் பளபளப்பாக அழகாக இருந்தது. அதன் அசையாத அமர்தல், தான் எங்கிருக்கிறோம் எனும் தன்னுணர்வு இன்மை எனக்கு சிறுபயத்தைக் கொடுத்தது. கூடவே எனக்கு இந்த பறக்கும் உயிர்களைக் கண்டாலே ஒரு உதறல். பறக்கும் கரப்பானபூச்சியைக் கண்டால் என்னை மறந்து கைகளைத் தூக்கியபடி கத்துவேன். அதனால் வெட்டுக்கிளியிடம் முதலில் சொல்லிப் பார்த்தேன். அது கேட்கவில்லை. ஊதி விட்டேன். சிறிது அசைந்தது. ஆனால் என் பையை விட்டிறங்க மறுத்தது. தட்டி விட்டாலும் கேட்கவில்லை. மின் தூக்கியில் இருந்து வெளிவந்ததும் அதை தட்டி விட்டேன். இப்போது அது தரையில் இறங்கி அங்கும் ஒரு தியான முத்திரை காட்டி அமர்ந்தது. பொறுமையாக ஊரைப் பார்த்து போ என நான் என் அலுவலகம் சென்று விட்டேன்.


 நான் என் வகுப்புக்காக மீண்டும் அதே மின் தூக்கியிடம் வந்த போது தான் தரையில் அதைப் பார்த்தேன் - யாரோ மிதித்ததில் இளம்பழுப்பில் தன் உள்ளுறுப்புகளை கக்கி விட்டு கால்களைப் பரப்பி பரிதாபமாகக் கிடந்தது. இப்போது வரை அந்த பிம்பம் என் மனதை விட்டகலவில்லை. அது ஏன் என் பையில் ஏறியது? போராட்டக் களத்திலே இருந்திருக்கலாம் அல்லவா? மின் தூக்கி அருகே வந்தவர்கள் ஏன் அதைப் பார்க்கவில்லை? தமது பூட்ஸ் கால்கள் எதையெல்லாம் மிதிக்கின்றன என கவனிக்க மாட்டார்களா? அது ஏன் அந்த பெரிய பூட்டைப் பார்த்ததும் எழுந்து தாவிப் பறக்கவில்லை? அது எந்த சப்தமும் எழுப்பாமல் இறந்திருக்கும் அல்லவா


ஒருவேளை எதேச்சையாக அது என் பையில் ஏறி அமர்ந்திருக்கலாம். எங்கு போனாலும் அங்கு நமக்கு இரை கிடைக்கும் என நம்பியிருக்கலாம். பூட்ஸ் அணிந்த கால்கள் வந்த போது சுதாரிக்க அவகாசம் இல்லாமல் போயிருக்கலாம். நமக்கும் அப்படித் தானே ஆகிறது - சுதாரிக்க சிறிதும் அவகாசம் தராமல் இந்த வாழ்க்கை எதையெதையோ நம்மிடம் இருந்து தட்டிப் பறித்து விட்டு நிராதரவாக விட்டுப் போகிறது


காலம் ஏன் இப்படி ஒரு ஜேப்படித் திருடனாக இருக்கிறது? விபத்து என்றால் இந்த திருடனிடம் நம் உடலை, நம் உறவுகளை, உயிரை பறிகொடுப்பது தானே? இங்கு நடக்கிற எதற்காவது ஒரு தர்க்கம், நியாயம் இருக்கிறதா? நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம்மை எங்கு எடுத்து செல்லும் என்பது குறித்து ஏதாவது ஒரு முன்னறிதல் நமக்கு இருக்கிறதா? எந்த உயிருக்காவது இருக்கிறதா?


முன்னறிவில்லாமல் தன்னை காலத்திடம் ஒப்புக்கொடுத்த வெட்டுக்கிளியே இங்கு உன் தவறு தான் என்ன? இன்று நீ கூடுதலாக சிறிது நேரம் தூங்கியிருக்கக் கூடாதா? சிறு இலைகளை ஏதாவது ஒரு தாவரத்தில் தேடியிருக்கக் கூடாதா? அங்கேயே எதையாவது வேடிக்கை பார்த்தபடி இருந்திருக்கக் கூடாதா? ஏன் என்னுடன் உல்லாச சுற்றுலா வந்தாய்? நான் ஏன் உன்னைக் கண்டு பயந்தேன்?


சிறு வெட்டுக்கிளியே அடுத்த முறை உன்னை இறக்கி விட மாட்டேன்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...