Skip to main content

நாவலில் காட்சியைக் கட்டமைக்கும் திறன்: ஷோபாசக்தியின் “சலாம் அலைக்கில்” இருந்து ஒரு உதாரணம்




ஷோபாசக்தியின்சலாம் அலைக்என்னை மிகவும் பாதித்த இடம் இது. ஜெபானந்தன் ஈழப் போரின் போது அங்கிருந்து தப்பித்து நிறைய போராட்டங்களுக்குப் பிறகு பிரான்ஸுக்கு வருகிறான். அங்கு அவன் மற்ற அகதிகளைப் போன்று குடியுரிமைக்காக விண்ணப்பித்து தனக்கெதிராக தொடர்ந்து மூடப்படும் கதவுகளைக் கண்டு மனம் தளராது, அல்லது அதற்கான வாய்ப்பில்லாமல் தன்னை தக்க வைப்பதற்காக ஓடிக் கொண்டே இருக்கிற ஒருவன். அவன் தன்னை விட வயதில் மூத்தவளான உமையாளைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். அவர்கள் ஒரு கட்டத்தில் பிரிகிறார்கள். விவாகரத்து பெறுகிறார்கள். அவர்களுடைய மகனை உமையாள் தனியாக வளர்க்கிறார். அம்மகன் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து மாலியில் நடக்கும் போரில் கண்ணி வெடியில் சிக்கி இறந்து போகிறான். ஜெபான்ந்தன் ஒரு போரினால் சிதைந்து போகும் குடும்பத்தில் இருந்து தப்பி வந்து பிரான்ஸில் தன் மகன் மீண்டும் ஒரு மகனையும் பலி கொடுக்கிற துயரத்துடன், கையாலாகாத பரிதவிப்புடன் நாவல் முடிகிறது.

இறுதியில் வருகிற காட்சி ஒன்று முக்கியமானது. ஒரு சிறந்த காட்சி உருவாக அதன் முடிவில் வரும் சிறிய திருப்பம், அதிர்ச்சியுடன் அதன் பின்புலம், பின்னணியில் வரும் பொருட்கள், உயிர்கள் சரியாக திட்டமிடப்படுவதும் அவசியம் (staging). ஒரு இடம், அங்குள்ள விசயங்கள், அங்கு வரும் மனிதர்கள் எங்கிருக்கிறார்கள், எங்கிருந்து எங்கு போகிறார்கள், ஒரு வசனத்தைப் பேசும் போது எந்த இடத்தில் நிற்கிறார்கள் என்பதைப் பற்றின தெளிவு இருந்தால் தான் குறைவான சொற்களில் நம்மால் நெஞ்சைத் தைக்கிற ஒரு காட்சியை உருவாக்க முடியும். இதற்கு கீழ் வரும் காட்சி ஒரு சிறந்த உதாரணம்.

 ஜெபானந்தன் ஒரு தேவாலயத்தில் வேலை பார்க்கும் தன் முன்னாள் மனைவியைத் தேடிப் போகிறான். அவனுக்கு ஒரு நிச்சயமான நோக்கம் இருக்கிறது. அது பின்னால் வருகிறது:


"மகன்ர டொக்குமெண்ட்ஸ் வேணும்."

"என்ன டொக்குமெண்ட்?"

"பிறப்பு சேர்ட்டிபிகெட், பிறப்பு சேர்ட்டிபிகெட்"

"என்னத்துக்கு?" என்று கேட்ட உமையாளின் கண்கள் இப்போது சுருங்கிப் போயின. நான் ஆலயத்தின் கூரையைப் பார்த்தவாறே சொன்னேன்:


"மகன் பிரான்ஸுக்காக செத்திருக்கிறான். இதைச் சொல்லிக் கேட்டால் எனக்கு பிரஞ்சு நஷனாலிட்டி கிடைக்கும்."

(...)

உமையாள் தனது கையிலிருந்த இரண்டு தாள்களையும் என் முன்னே மேசையில் வைத்தாள். அவை மகன் மக்ஸென்னினது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்.


நான் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்தேன். உமையாள் அப்போது ஒரு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தவாறே ஒளிப்பிராணியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தாள்.


"வாறன்" என்றேன்.


என்னை நிமிர்ந்து பார்த்த உமையாள் "சமைக்கப் போறன் ... சாப்பிடிட்டுப் போறீரோ?" என்று கேட்டாள்.


"பிள்ளைக் கறி" என்றேன்.


"சந்நிதியானே" என்ற முணுமுணுப்பு என் காதில் ஒலித்தது."


(“ஸலாம் அலைக்", பக் 139-140, ஷோபாசக்தி)


இருவரும் தனியாக சந்தித்திருந்தால் இக்காட்சி இவ்வளவு உணர்வுபூர்வமாக அமைந்திருக்காது. அந்த செல்லப்பிராணியும் அதை உமையாள் நடத்தும் விதமும் அச்சூழலை கூர்மையாக்குகிறது. அவர்களுடைய இறந்து போன மகனின் வெற்றிடம் ஒளிமிக்கதாகத் தோன்றுகிறது. இருவர் பேசுகையில் பின்னணியில் வரும் உயிர்கள், பொருள்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதென்பது திரைப்படக்கலையின் முக்கியமான உத்தி. ஷோபாசக்தி இந்நாவல் முழுக்க இப்படியான திரை உத்திகளை நிறைய பயன்படுத்துகிறார்

இன்னொரு விசயம் அந்த ஒளிப்பிராணி அவர்களுடைய மகனின் ஆன்மாவாகவும் இருக்கலாம்.

ஒரு காட்சியில் வெளியை, சூழலை, பொருட்களை எப்படி சரியாக பயன்படுத்துவது, பாத்திரங்களை எங்கே நிற்க வைப்பது எனில் பிளாக்கிங்கிற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கிறது.


கடைசியாக வரும் "பிள்ளைக்கறி" எனும் வசனம் நம்மை உலுக்கிப் போடுகிறது. ஆனால் அத்துடன் காட்சியைத் தறித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உமையாள் மனமுடைந்து "சந்நிதியானே" எனக் கேவுவதாக காட்சி முடிவது தேவையற்றது எனத் தோன்றுகிறது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...