Skip to main content

வட்டார மொழியும் இலக்கியவாதிகளும்

 






வட்டார இலக்கியம் ஏன் சில ஊர்களில் மட்டும் செழிக்கிறது? மற்ற ஊர்க்காரர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விகளை என்னுடையஅந்த காலம் போல இல்லைகட்டுரையை படித்து விட்டு நண்பர் மோகன் ராஜ் எழுப்பி இருந்தார். எங்களுக்குள் நடந்த அந்த விவாதத்தை இங்கு சிறிதுதிருத்திபகிர்ந்து கொள்கிறேன்.


மோகன் ராஜ்: நான் காஞ்சிபுரம் நான் நாகர்கோவிலை நேரில பார்த்த உணர்வு வந்து விட்டது. நாகர்கோவில் எழுத்தாளர்கள் எழுதுவதை படித்து விட்டு அந்நிலத்தில் பிறந்திருக்க கூடாத என்று ஏங்கியதுண்டு. கன்னியாகுமரி தஞ்சை மதுரை கோவில்பட்டி விருதுநகர் நாகர்கோவில் போன்ற ஊர்கள் இலக்கியத்  தின் மீது இவ்வளவு தாக்கம் செலுத்து வதன் பின்னணி என்ன?


நான்: அங்கு தோன்றி இலக்கியம் வளர்த்த படைப்பாளிகள் தாம் அதற்குக் காரணம்.


மோகன் ராஜ்: படைப்பாளிகளுக்கும் நிலத்திற்கும் தொடர்பு இருப்பது உண்மை தானே? எங்கள் ஊர் காஞ்சியிலிருந்து எந்த [இலக்கிய] படைப்பாளியும் வரவில்லையே. நா.முத்துக்குமார் கூட பாடல் ஆசிரியர் தான். ஒரு மாவட்டம் அதாவது நிலவியல் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதும் முக்கியம். உதா "ஜேஜே: சில குறிப்புகள்" வெளிவந்த போது மருத்துவ மாணவர்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததை கோவில் பட்டியில் பார்த்ததாக எஸ்.ரா எழுதியுள்ளார். இதெல்லாம் என் ஊரில் நடக்காது. பணத்தை தவிர இங்கு வேறு எதுவும் முக்கியப் படுவது இல்லை


நான்: ஒரு ஊரில் ஒரு படைப்பாளிகளின் குழு தோன்றி தொடர்ந்து எழுதும் போது அது ஒரு இலக்கிய தடத்தை ஏற்படுத்துகிறது. அதில் அடுத்தடுத்த படைப்பாளிகளில் பயணிக்க முடிகிறது. ஒரு ஊரின் பண்பாட்டை, மக்களை எப்படியெல்லாம் எழுதலாம் எனத் தெரிந்து போகும் போது அந்த மண்ணின் எழுத்தை வளர்த்தெடுப்பது அடுத்த தலைமுறைக்கு சுலபமாகிறது


 கூடவே ஒரு மாவட்டத்துக்கான தனி அழகியலும் தோன்றுகிறது. அதன் நிலப்பரப்பு துலங்குகிறது. அதற்கென பிரத்யேகமான மனிதர்கள் பாத்திரங்கள் ஆகிறார்கள். அதுவே அந்த ஊரின் எதார்த்தம் என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த மண்ணின் இலக்கியத்துக்கான ஒரு நிலவியல், ஜனங்கள், சூழல், தட்பவெட்பம், இயற்கை என ஒரு திரட்சி உருவாக்கப்படுகிறது. அது மேலும் மேலும் செறிவாக்கப்பட்டு திரண்டு வெண்ணெய் போல் மேலே வருகிறது.


.தா., என்னுடைய ஊரான பத்மநாபபுரத்தில் இருந்து வெகுசிலரே படைப்பாளிகளாக வந்திருக்கிறோம். என் ஊரை சேர்ந்தவர்களும் எனக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்த பின்னரே என்னை கவனித்தார்கள். என் நாவலைப் படித்தார்கள். ஊர் நூலகத்தில் என்னுடைய நாவல் வாங்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இதன் பொருள் நான் அந்த ஊரின் பண்பாட்டு முகம் என்றல்ல. நான் ஒரு உதிரி மட்டுமே. தக்கலை, விளவங்கோடு, நாகர்கோயில் பகுதிகளில் இன்னும் அதிகமான இலக்கிய எழுத்தாளர்கள் கடந்த முப்பதாண்டுகளில் தோன்றி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களும் அங்கு உதிரிகளே. ஆனால் ஒரு முகாமாக, குழுவாக செயல்படுகிறார்கள். முன்பு எங்கள் ஊரில் சு.ரா இருந்தார். இப்போதும் ஜெயமோகன் இருக்கிறார். கலை இலக்கிய பெருமன்றத்தின் முகமாக பொன்னீலன் செயல்படுகிறார். மீரான், குமார செல்வா, நட. சிவகுமார், என்.டி ராஜ்குமார், முஸ்தபா, பீர் முகமது போன்ற அண்ணன்கள் இலக்கிய, கோட்பாட்டு எழுத்துப் பணியை முன்னெடுக்கிறார்கள் செல் சேவியஸ் எனும் அபூர்வ படைப்பாளியையும் மறக்க முடியாது. வாஸ்தோ இருக்கிறார். வேறு புது படைப்பாளிகளும் தோன்றி வருகிறார்கள்.


கலை இலக்கியப் பெருமன்றத்தின் விழாக்களில் வெகுமக்கள் சற்றே கலந்து கொள்வார்களே ஒழிய இலக்கியம் அம்மக்களின் மையப் போக்கல்ல. எல்லா ஊரிலும் அப்படித்தான் இருக்க முடியும். நெல்லை, விருதுநகர், கோவை இலக்கியவாதிகளும் இப்படித்தான் ஒரு தடத்தை உருவாக்குகிறார்கள். தனித்தனியாக, ஒரு தனிக்குழுவாக. இலக்கியம் அந்த ஊரின் முகமாக மாறினாலும் கூட அது விளிம்பிலேயே இருக்க முடியும். அதனாலே அம்மக்களின் சிறப்புப் பண்புகளால் அங்கு இலக்கியம் செழிப்பாக வளர்கிறது என்று கூற முடியாது. நீங்கள் உங்களூருக்கு சொல்வது தான் நாகர்கோயிலுக்கும் சொல்வேன். இங்குள்ள மக்களுக்கும் இலக்கியம்உயிர்மூச்சல்ல”. மாறாக அம்மக்களின் வெளிப்படாத விளிம்புநிலை, உதிரிப் பண்பாடே அவ்வட்டாரத்தின் இலக்கியமாக மலர்கிறது என்பேன். ஒரு காட்டுச்செடியில் மலரும், யாரும் பொருட்படுத்தாத பூக்களைப் போல. போத்ரிலர் சொல்லும் தீமையின் மலர்களைப் போல.


சொல்லப்போனால், எந்த மாவட்டத்துக்கும் அப்படி ஒரு தனி இலக்கிய மரபு உண்டாக முடியும். வேலை செய்ய ஆட்கள் இருந்தால் மட்டும் போதும்உங்கள் ஊருக்கென்று ஒரு வட்டார இலக்கியத் தடத்தை நீங்களும் உங்களைப் போன்றோரும் ஆரம்பிக்கலாமே?


மோகன் ராஜ்: எனக்கு அந்த ஆசை உண்டு; ஆனால் சென்னையில் உள்ள விரிவான மனநிலை இங்கு கிடையாது. இங்கு அனைத்தையும் தனிப்பட்ட விரோதமாகவும் விமர்சனம் ஆகவும் எடுத்து கொள்கிறார்கள்.


நான்: எந்த ஊரிலும் சிறு சிறு குழுக்களுக்குள் விரோதமும் பரஸ்பரம் காலைப் பற்றி கீழே தள்ளுகிற நண்டு அரசியலும் இயல்பே. மூச்சு முட்டுவதைப் போலிருக்கும். நீங்கள் சொல்வதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னும் கூடுதலாக சுதந்திரம் இருக்கும். அதே நேரத்தில் வட்டார புலத்திலே மேலும் தனித்துவமான செயல்பாடுகள் சாத்தியமாகும்.


மோகன் ராஜ்: நிலவியலுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய உங்கள் பார்வையை தெரிந்து கொள்வதற்காக தான் கேட்டேன். எனக்கு விரிவான பதிலை கொடுத்ததற்கு நன்றி


நான்: உங்கள் கேள்விகளுக்கும் அன்புக்கும் நன்றி!


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...