Skip to main content

இந்திரஜித்தின் “ஞானக்கூத்தன்”

 


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிழைப்பு தேடி சிங்கப்பூருக்கு வந்த சில தமிழர்களின் கதை எனத் தோன்றினாலும் இது அதுவல்ல. மாறாக வியாபாரம், உழைப்பு, வன்முறை மூலம் தன்னையறிவதே இந்த நாவலின் மையம். கதைசொல்லி சிறுவயதிலேயே தன் பெற்றோரை விட்டு சிங்கப்பூருக்கு வந்து ஒரு மளிகைக்கடையில் சேர்ந்து வேலை செய்கிறான். தன்னைப் போன்று அந்த ஊருக்கு வந்தவர்களுக்கு என்னவெல்லாம் நேர்கிறது, மது போதை, வன்முறை, பெண்ணாசை என ஆண்கள் தம் பாதையை இழப்பதை, பெண்கள் அவர்களால் துயருறுவதையும், பிரித்தானியர்கள் அதிகாரத்தை விட்டு விலகும் இடத்தில் வந்து சேரத் தவிக்கும் அரசியல் தலைவர்களையும் காண்கிறான். இறுதியில் எப்படி தன்னுடைய கடை முதலாளி தனது முதலாளியின் கடையை எடுத்துக் கொண்டாரோ அதே போல அவரது கடையும் தன்னிடம் வந்து சேர்வதைப் பார்க்கிறான். கடும் உழைப்பாலும் அதிர்ஷ்டத்தாலும் அவன் மேலே வந்து சிறிய அளவில் ஒரு பணக்காரன் ஆகிறான். வாழ்க்கை மிக எளிதானது, காதல், கோப வெறி, அரசியல் சித்தாந்தம், லட்சியம் ஆகியவற்றுக்கு வெளியே இருப்பது வாழ்க்கை, வாழ்க்கைக்குத் தேவை பணம், சாப்பாட்டுக்கு உத்தரவாதம், அமைதியான குடும்ப வாழ்க்கை, இவற்றில் மிதமிஞ்சி உணர்ச்சிகரமாக ஈடுபடாமல் விலகி இருப்பதே எனும் தெளிவுக்கு வருகிறான். அதனாலே அவனைஞானக்கூத்தன்என இந்திரஜித் அழைக்கிறார்.


இது போக இந்நாவலுக்குள் மற்றொரு கதைமடிப்பு இருக்கிறது - அது கதைசொல்லியின் (அவனுக்கென்று பெயர் இருப்பதாகத் தெரியவில்லை, அவன் ஒரு everyman.) உளச்சிக்கல், அடிக்கடி அவனுக்கு ஏற்படும் பிரமைகள், அவனை வழிநடத்தும் மிகுபுனைவு தோற்றங்கள் பற்றியது. ஏனோ இந்திரஜித் அந்த பாதையில் நாவலை எடுத்துச் செல்லவில்லை. அந்த பாதையில் ஐம்பது பக்கங்கள் நாவல் போயிருந்தால் இன்னும் சிக்கலானதாக, இருண்மையானதாக (செகாவின்கறுப்புத் துறவியைப்போல) வந்திருக்கும். நான் இந்நாவலை எழுதியிருந்தால் அந்த எருமை மீது வரும் சீனருடன் அவன் பேசுவதாக, அதன் பிறகு அதன் பொருளென்ன, அவனுடைய அப்போதைய நிலையில் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு தீர்வுக்கு (மதம், சிறுதெய்வங்கள், குடும்ப தெய்வம், காதல், காமம், அப்பா, அம்மா இப்படி ஏதாவது ஒன்றை ஒரு உருவகமாக மாற்றி) வருவதாக முடித்திருப்பேன்.


அதே போல நாவலின் இறுதி அத்தியாயங்களை - கதைசொல்லி தன் வியாபாரத்தை எப்படி போராடி மீளுருவாக்கி பணக்காரனாகிறான், அவனுடைய சவால்களை முறியடிக்கிறான் என்பதை - அவர் இன்னும் விரித்து 50-70 பக்கங்களாக எழுதி விட்டு கதைசொல்லி அடிதடி கேங்குகளுக்குள் போகலாமா வேண்டாமா எனத் தடுமாறுவதை ஒன்றிரண்டு அத்தியாயங்களில் சுருக்கியிருக்கலாம். இது நாவலுக்கு ஒரு சமநிலையைக் கொடுத்திருக்கும்.


இவ்வகை நாவல்களை நமது மத்திய வர்க்க ஆண்களின் (பூர்ஷுவா எலிப்பொந்து வாழ்க்கைக்கு வெளியில்) பணத்தேடல், வாழ்வில் நிறைவை அடைவதற்காகன் தத்தளிப்பு, இறுதியில் வெற்றியைப் பேசும் bildungsroman பாணி கதைகள் என்று கூறலாம். தமிழில் 80களில் பாலகுமாரனும், 2010க்குப் பிறகு சரவணன் சந்திரனும் இவ்வகை கதைகளை இலக்கிய-வணிக ரசனைக்குள் நின்று எழுதினார்கள். மேற்கில் பவுலோ கோய்லோ Alchemist போன்ற நாவல்களை வெற்றிகரமாக எழுதி இந்த வடிவத்தில் தனிமனிதனின் தன்னறிதலை பிரதானப்படுத்தினார். சரவணன் சந்திரன் பொருளாதார வெற்றி, ஆன்மீக மலர்ச்சி இரண்டையும் ஒரே புள்ளியில் (வியாபாரம் + முருக வழிபாடு + செக்ஸ்) இணைக்க முயன்றார். இதில் இரண்டாவது இரு அம்சங்களையும் பெரிதாகத் தொடாமல் கொஞ்சம் இருத்தலியல் தொனியில் இந்திரஜித் எழுத முயன்றிருக்கிறார்


வடிவரீதியாக இன்னும் கொஞ்சம் திருத்தியிருக்கலாம், அல்லது இன்னும் ஒரு நூறு பக்கங்கள் எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.  


பதிப்பகம்: உயிர்மை


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...