Skip to main content

இளைஞர்கள் மேலான நாவலாசிரியர்களா?




#நாவலாசிரியனுக்கானகுறிப்புகள் அனுபவம் அதிகமாக ஆக, வயது கூட கூட நாவலாசிரியர்களாக, புனைவெழுத்தாளர்களாக நாம் நமது உண்மையை சொல்லும் திறனை இழக்கிறோமா? இதைக் குறித்து பொதுவாக உள்ள பார்வை இது: கணிசமான இளம் எழுத்தாளர்களிடம் ஒரு அபாரமான துணிச்சலை, அதிரடித்தன்மையை, புதிய மொழியை, ஒரிஜினலான தன்மையை, களங்கமின்மையை அவர்களுடைய முதற் சில கதைகளில், நாவல்களில் நாம் காண்பதுண்டு. (இளமையிலேயே மூத்த படைப்பாளிகளை பிரதியெடுத்து, தேய்வழக்கான மொழியில் எழுதுகிறவர்களும் உண்டு தாம்.) ஆனால் அடுத்தடுத்த நாவல்களில் அவர்களுடைய இந்த தன்னெழுச்சி, களங்கமின்மை, தன்னனுபவ போக்கு குறைந்து, தாம் கண்ட உண்மையை சொல்லியே ஆக வேண்டும் எனும் தவிப்பு குறைந்து அவர்கள் பிரக்ஞைபூர்வமாக எழுத ஆரம்பிப்பார்கள். அதாவது தம்மில் இருந்து வெளியேறி மற்றமைகளில் தம் ஆன்மாவை கடத்தி தம் அன்றாட உலகில் இருந்து மாறுபட்ட உலகொன்றை சித்தரிக்க முயல்வார்கள். சில படைப்பாளிகள் இதிலும் தமது சொந்த குரலை ஒலிக்க விடும் திறன் பெற்றிருப்பார்கள்; சிலரோ பிளாஸ்டிக்கான குரலொன்றில் பேசத் தொடங்குவார்கள். ஆரம்பத்தில் கவனம் பெறாதிருந்த போது இருந்த துணிச்சல் மறைந்து தம்மை பிறர் அதிகமாக கவனிக்கிறார்களோ எனும் பதற்றம் இபோது அவர்களுடைய இயல்பூக்கத்தை தின்று விடத் தொடங்கும். அதனாலே அவர்கள் எல்லாருக்கும் பிடிக்கும்படியாக எழுத முயன்று செயற்கையாக மாறுவார்கள். சில மூத்த படைப்பாளிகள் தமது இளமையில் கொண்டிருந்த செழுமையை, தீவிரத்தை பின்னர் இழந்து தம்மையே பிரதியெடுக்கிறார்கள் என்றும் விமர்சகர்களால் நம்பப்படுகிறது. “அவரோட ஆரம்ப கால கதைகளே எனக்கு பிடிக்கும்” என்று பல சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி வாசகர்கள் கூறுவதுண்டு. ஜேம்ஸ் ஜாய்ஸின் “டப்ளினர்ஸ்” தொகுப்பு அவருடைய “யுலைஸஸை” விட நல்ல புத்தகம் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். தஸ்தாவஸ்கியின் ஆரம்ப கால நாவல்களான Insulted and Humilated, The Double மீது எனக்கு ஒரு தனி பிரியம் உண்டு. அவரது பிற்காலத்தைய நாவல்களின் முதிர்ச்சி, விரிவு இவற்றில் இல்லையெனினும் என் இதயத்தை வெகுவாக கவர்ந்த ஒரு எளிமையை இந்த நாவல்களில் நான் கண்டேன். தமிழ் நாவலாசிரியர்களுக்கும் இதை சொல்ல முடியும். ஆன் லேமெட் தனது Bird by Bird (“ஒவ்வொரு பறவையாய்”) நூலில் இதைப் பற்றி பேசும் போது அனுபவம் பெற்ற ஒரு எழுத்தாளனின் சுயபிரக்ஞை அவனுடைய எழுத்தின் சரளத்தை பாதிக்கக்கூடியதே, அதே நேரம் அதில் இருந்து விடுபட முடியும், அதற்கு அவன் திரும்பத் திரும்ப தனது குழந்தைப்பருவ நினைவுகளுக்குள் பயணிக்க வேண்டும் என்கிறார். இங்கே ‘குழந்தைமை’ என்பதை ஒரு உருவகம் என்றே நான் பார்க்கிறேன். அதாவது நமக்குள் இருக்கும் குழந்தையை திரும்பத் திரும்ப கண்டுபிடிப்பது. புத்திசாலிகளின், நாகரிக வழக்கங்களின் உலகில் அக்குழந்தை ஒரு நிழலாகத் தேய்ந்து போகக் கூடும். தன்னுணர்வும் எழுத்துக்கலை குறித்த போதமும் மிக்க ஒரு நாவலாசிரியனுக்கு தான் எழுதி வரும் படைப்பு பற்றின பயம், குழப்பம், பதற்றம், கற்பனை (இந்நாவல் இப்படியாகுமோ, அப்படியாகுமோ, இப்படி விமர்சிப்பார்களோ, அப்படி பாராட்டி தழுவுவார்களோ) சில நேரம் எழுத்தின் சரளத்தை, வேகத்தைக் குறைக்கும்; போகப் போக நாவலே நின்று போகும். எழுதும் பயத்திலே எழுதுவதை நிறுத்தி ஆய்வில், கற்பனையில் திளைப்பார்கள், எழுதியதை அவ்வப்போது திருத்தி சந்தேகத்தில் எழுத்தாணியால் மண்டையை குத்திக் கொள்வார்கள். ஆக, அந்த ‘குழந்தை’ நமக்கு மிகவும் அவசியம். எதைப் பற்றியும் அஞ்சாமல் கிடைத்த இடத்தில் எல்லாம் ஓடித் திரிந்து ஆபாயங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து காயம்பட்டு அழுது, பொருட்களை போட்டுடைத்து அடிவாங்கி அழுது, எதையாவது கண்டுபிடித்த பரவசத்தில் குதித்து கும்மாளமிட்டு, ஊரெல்லாம் தன் உற்சாகத்தை சரவெடியாக வெடிக்க வைக்கிற அந்த குழந்தை நமக்கு மிகவும் அவசியம். அக்குழந்தையை ஒரு கட்டுக்குள் வைக்கிற முதிர்ச்சியான மனமும் அவசியம். அக்குழந்தை இந்த முதிர்ச்சியும், சுயயோசனையும் மிக்க உலகில் நலிந்து காணாமல் போக விடாமல் தொடர்ந்து அதன் பேச்சுக்கு செவிகொடுப்பது, அதனுடன் விளையாடுவது, அதனுடன் இந்த உலகை மீளக் காண்பது முக்கியம். உண்மையை விளையாட்டுத்தனத்தால், சாகசத்தால் எதிர்கொள்ளும் அதன் இயல்பை நம் எழுத்துக்குள் கொண்டு வருவது ஆகியன நிச்சயமாக நமது எழுத்து ஒரு ஜெராக்ஸ் எந்திரமாக மாறாதிருக்க உதவும். அதே நேரம், நாம் ஒரேடியாக ஒரு குழந்தையாக மாறாதிருப்பது இளம்பெண்களே கிடைக்கவில்லை என்று ஆண்களின் மூஞ்சியில் வண்ணப்பொடியை பூசிக்கொண்டு ரோடெல்லாம் பைத்தியமாக அலைகிற ஹோலி விளையாட்டாக நமது நாவல்கள் மாறி விடாதிருக்க உதவும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...