படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தில அந்த சூப்பரான பின்னணி இசை வந்துச்சா எனக்கு லேசா யாரோ மயிலிறகால முதுகை வருடுற பீலிங். அடுத்த பாட்டு வந்ததும் கண்ணசந்திட்டேன். திரும்பவும் எழுந்து படம் பார்ப்பேன், திரும்பவும் பி.ஜி.எம், திரும்பவும் ஜாலியாகி தூக்கம், அடுத்து பாட்டு, திரும்பவும் குஷியாகித் தூக்கம். டப்புன்னு எழுந்து பார்த்தா ப்ரியா பவானிசங்கர் நல்ல உயரமா எழுந்து நிக்கிறாங்க. என்னடா அதுக்குள்ள இந்த சீன் வந்திருச்சான்னு ஜெர்க் ஆனா அண்ணன் அனிருத் பி.ஜி.எம் போட்டு "நீ டென்சன் ஆகாதெடா" ன்னு தூங்க வெச்சிட்டார். நடுவில வீட்ல படத்தை நிறுத்தி வெச்சு ரிமோட்டை வேறெ தூக்கிட்டு போயிட்டாங்க. தூக்கம் கலைஞ்சு எழுந்து பார்த்தா உலகமே பளிச்சின்னு இருக்குது. சுத்தமா தூக்கம் வரல. எவ்வளவு கொடுமைக்காரங்க! சுருதி சேர்ந்து வரும் போதெல்லாம் படத்தை நிறுத்திட்டு போயிடுறாங்க. இதெல்லாம் ஒரே புளோவில பார்க்க வேண்டிய படம்!
அண்மையில கேட்க இவ்வளவு இதமான முடிவற்ற டோன் டொடேன்னே டோன் டொனேன் என ஒரு படம் வரல. ரெண்டரை மணிநேரமும் இப்படியே பி.ஜி.எம், பாட்டுன்னு கேட்டு குறட்டை விட்டு என்னை மறந்து தூங்கிறாப்ல ஒரு படம் வரனும் என்பதே என் அவா. அனிருத் தான் நம் காலகட்டத்தின் தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை "திருச்சிற்றம்பலத்தில்" நிரூபித்திருக்கிறார். நடுநடுவே இந்த ஹீரோயின்ஸ், புரோப்போஸல், புட் டெலிவரி எல்லாம் ஏன்னு தான் புரியல!
ஆனா படம் முடிஞ்சதும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்குதே அது எந்த படத்திலேயும் எனக்குக் கிடைச்சதில்ல!
நல்ல ஏஸி தியேட்டரில் பார்த்திருக்க வேண்டிய படம்! மிஸ் பண்ணிட்டேன். ச்சே!

Comments