Skip to main content

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

கடந்த ஓராண்டு காலம் இந்திய கிரிக்கெட்டில் நடப்பன சில விசயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறது:

1) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி பொம்மை அணுகுமுறை, கோலியின் பொறுமையின்மை மட்டும் காரணமல்ல. அவர்களையும் தாண்டி இந்த இந்திய அணியின் மூத்த வீரர்கள், தேர்வுக்குழு அல்லது வேறெங்கோ ஒரு பிரச்சினை உள்ளது. அணித்தலைவரும், பயிற்சியாளரும் மாறினாலும் அடிப்படையான தவறுகள் மாறவில்லை.

2) இப்போதைக்கு உலகில் இந்தளவுக்கு நிலையற்ற குழப்பமான அணி வேறில்லை. உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு பண்ணின பிறகும் யார் முதற் போட்டியில் பந்து வீசப் போகிறார்கள், யார் உடற்தகுதியுடன் இருப்பார்கள் என்பதில் தெளிவில்லை. இதற்கு துரதிஷ்டம் மட்டும் காரணமில்லை - நிலையற்ற முடிவுகள், குழப்பமான சிந்தனை, பதற்றமான அணுகுமுறை ஆகியவனவே காரணம். அவ்விதத்தில் ரவி சாஸ்திரியை விட மோசமான பயிற்சியாளர் ராகுல் திராவிட் தான் என நினைக்கிறேன். சாஸ்திரி குடிகாரராக இருக்கலாம், ஆனால் திராவிட் குடிக்காமலே பயங்கர போதையில் தடுமாறுகிறவரைப் போன்று தான் அணியை நிர்வகிக்கிறார்.

3) கோலி அளவுக்கு இல்லையென்றாலும் நெருக்கடியை சமாளிக்கும் நிதானம், மனவலிமை ரோஹித்திடமும் இல்லை. கள அமைப்பில் அவர் ஒரு நல்ல தலைவர் தான். அதாவது எல்லாமே கச்சிதமாக இருக்கையில். ஆனால் அணியில் சிக்கல்கள் வந்தால், யாராவது காயம்பட்டால், வீரர்கள் தொடர்ந்து தவறுகளை இழைத்தால் ரோஹித் பத்தாவது மாடியின் படிக்கட்டில் தவறி உருண்டு போகும் மூதாட்டியைப் போல ஆகி விடுகிறார். இதை மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் வழிநடத்துகையில் கண்டோம். இப்போது இந்திய அணியிலும் காண்கிறோம்.

சுருக்கமாக இந்த அணியின் பிரச்சினையின் வேர் என்னவென எனக்குத் தெரியவில்லை. யார் வந்தாலும் போனாலும் ஒரே தவறுகளை மீள மீள நிகழ்கின்றன. ஒருவேளை 2011க்குப் பின்னர் வந்தவர்கள் அனைவரும் போய் ஒரு புத்தம் புதிய அணி வந்தால், இந்திய அணி தன் திறமையை முழுமையாக பயன்படுத்தி உலகக்கோப்பை ஒன்றை மீண்டும் வெல்லலாம். ஆனால் இந்த அணி தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடும் இயல்பு கொண்டது. இந்த டி20 உலகக்கோப்பை மட்டுமல்ல அடுத்தாண்டு இந்தியாவில் நடக்கிற 50 ஓவர் உலகக்கோப்பையிலும் இந்த அணி ஆட்டத்தின் கடைசி நாள் வரை பல குழப்படிகளை செய்து chokeஆகி தோல்வியை தேடித் தழுவப் போகிறது.

 நான் இன்றைய போட்டியை வைத்து சொல்லவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நடப்பவற்றை கவனித்தே சொல்கிறேன். ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் பிம்பத்தை நம்பாதீர்கள். நடக்கப் போகும் உலகக் கோப்பையில் முக்கியமான போட்டிகளில் சொதப்பப் போகிறார்கள். அடுத்தாண்டு உலகக்கோப்பையிலும் அதுவே நடக்கும். அதன் பிறகு புதிய அணித்தலைவர் வருவார், ஆனால் இந்த கோளாறுகளின் போக்கு மட்டும் தொடரும். ஆனால் நமது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் வருமானத்திற்காக பில்ட் அப் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நம்பாதீர்கள்! ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளில் ஒன்றே அடுத்தடுத்த உலகக்கோப்பைகளை அடிக்கப் போகிறார்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...