முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னது இலக்கிய கிளாசிக்கா?



இன்று இரு வேற்று மொழி நண்பர்கள் "பொன்னியின் செல்வன்" தமிழிலக்கியத்தின் கிளாசிக்கா என்று கேட்டார்கள். நான் "இல்லை, அது ஒரு பல்ப் நாவல்" என்று கூற அதிர்ந்தார்கள். "அப்போ அது இலக்கிய நாவல் இல்லையா?" என்று திரும்பத் திரும்பக் கேட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் இந்திய இலக்கியங்களில் இருந்து உலக இலக்கியம் வரை அலசி ஆராய்ந்து கற்றவர்கள். என் இலக்கிய வகுப்பிலும் என் மாணவர்கள் "சார் நீங்கள் பொன்னியின் செல்வன் படித்ததுண்டா?" என வியப்புடன் கேட்கிறார்கள். " நுட்பமான இடங்கள் உண்டெனினும் அது அடிப்படையில் ஒரு பொழுபோக்கு நாவல் மட்டுமே. என் 11வது வயதில் அதைப் படித்து விட்டேன்" என்றால் நம்ப மறுக்கிறார்கள். இதே நபர்கள் ஆங்கிலத்தில் காட்பாதரோ டாவின்ஸி கோடோ ஒரு இலக்கிய கிளாசிக்கா என்று கேட்க மாட்டார்கள். ஆனால் தமிழ் என்று வந்தால் நம்மை கரகாட்டக்காரன் சொப்பன சுந்தரியின் கார் ரேஞ்சுக்குத் தான் ஆளாளுக்கு சந்தேகம் கேட்கிறார்கள்.

மணிரத்னம் எனும் கலைநயம் மிக்க படைப்பாளி, அவருடன் பணிபுரிந்தவர்கள் படமாக்கும் நாவல் ஒரு இலக்கிய கிளாசிக்காகத் தான் இருக்க வேண்டும் என அவர்களுக்குள் அப்படி ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நமது ஊடகங்களே பொறுப்பேற்க வேண்டும் - முரட்டு புரொமோஷனுக்கு நடுவே அதை தமிழிலக்கியத்தின் தவிர்க்க முடியாத உன்னத படைப்பு எனும் அளவுக்கு ஏற்றி விட்டதுடன், அத்தனை தமிழர்களின் நெஞ்சத்திலும் இடம்பிடித்த படைப்பு, தமிழ் மொழியின் பெருமை எனும்படியாக பில்ட் அப்பும் கொடுத்ததில் தமிழறியாத மக்களும் கல்கி தான் தமிழின் தல்ஸ்தாய், தஸ்தாவஸ்கி என நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் நாம் அறுபதுகளுக்கே திரும்பி விட்டோம். புதுமைப்பித்தனில் இருந்து இன்றைய இலக்கியவாதிகள் வரை இவ்வளவு ஆயிரம் பக்கங்கள் இதைப் பற்றி பேசியும் நாம் "நடுவில கொஞ்சம்" வி.செ நிலைக்கு சென்று விட்டோம்.

மணிரத்னம் ஆண்ட் கோவையும் பழிக்க முடியாது. கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து புரொமோட் செய்வது அவர்களுடைய கடமை. செவ்வனே செய்தார்கள். ஊடகங்களுக்குத்தான் விவஸ்தை இல்லை. சினிமாவின் சக்தி அளப்பரியது. சினிமாவைக் கொண்டு எதை சொன்னாலும் மக்கள் நம்புவார்கள். சரியான விசயத்தை சொல்லுவது பொறுப்பில் உள்ளோரின் கடமை. இங்கு சினிமாவைக் கொண்டு வரலாற்றை மட்டுமல்ல இலக்கிய இடங்களையும் குழப்பி அடிக்கலாம். ஊடக புரோக்கர்களை வைத்து பெரும் புனைவுகளை உண்மையாக்கி ஒரு மகாநடிகரை நாட்டின் மன்னராக்கலாம்.

ஒரு நொடி எதுக்குடா இந்த மொழியில் உழைக்கிறோம் என்று தோன்றினாலும் இந்த அபத்தத்தைப் பார்த்து சிரித்து ஜாலியாக இருப்போமே என்றும் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...