Skip to main content

என்னது உனக்கு நான் இப்போ சாகணுமா?

War of the Roses படத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சி இது: நாயகனுக்கு உடல் நலமில்லாமல் போகிறது. சாகும் நிலை. ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போகிறார்கள். அவன் திரும்பத் திரும்ப என் மனைவிக்கு தெரிவித்து விட்டீர்களா எனக் கேட்கிறான். ஆஸ்பத்திரியில் நாங்கள் பலமுறை போன் செய்துவிட்டோம் என்கிறார்கள். சாகும் தறுவாயில் இருப்பதாக எண்ணும் அவன் அவளிடம் தன் காதலை, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஒரு குறிப்பை கடும் வலியின் இடையே எழுதுகிறான். ஆனால் அவள் வரவில்லை. அவன் தப்பித்து விடுகிறான். அவளோ கடைசி வரை அவனைப் பார்க்க வரவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின்னர் நீ ஏன் வரவில்லை எனக் கேட்கிறான். அவள் காரணம் சொல்லவில்லை. பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான்.

இது ஒரு கூர்மையான அவதானிப்பு. பெண்கள் நெடுங்காலம் ஒரு ஆணுடன் வாழும்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. ஒரு சில பத்தாண்டுகளிலோ சில ஆண்டுகளிலோ அவர்களுக்கு மூச்சுத்திணற ஆரம்பிக்கிறது. அவர்கள் விடுதலைக்காக தவிக்கிறார்கள். பிரச்சினை பல சமயங்களில் குடும்பத்தில் மட்டும் இருக்காது. அது இயற்கையின் விழைவு. நமது மரபான குடும்ப அமைப்பு அண்மைக்காலம் வரை அவர்கள் மீது கடும் சமூகப்பொருளாதார,பண்பாட்டு அழுத்தங்களை சுமத்தியதால் மட்டும் ஒரு ஆணுடன் தம் வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் இயற்கை பெண்ணுடலை அப்படி அமைக்கவில்லை. ஆண்களுக்கு உள்ளதைப் போல நீடித்த இளமையும் குழந்தை பெறும் வளமையும் பெண்களுக்கு இல்லை. நவீன சமூகத்தில் முப்பது வயதிற்கு மேல் midlife crisis இப்படியே தோன்றுகிறது. கூடுதலாக வேறு இணைகளை அடைந்து பிள்ளை பெற வேண்டும் என வனத்தில் வாழ்கையில் ஒரு ஆதிப்பெண்ணுக்குத் தோன்றியிருக்குமெனில் நவீன பெண்ணுக்கு தன் அடையாளத்தைக் கண்டடைய வேண்டும், அதன் வழி காலத்தில் அனந்தரமாக வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனாலே கணவனின் இருப்பு - குழந்தைகள் அல்ல - அவளுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது. ஒரு பெரும் பாரம் தம்மை அழுத்துவதாகத் தோன்றுகிறது. அவன் செத்து ஒழிய மாட்டானா என அவள் ஆழ்மனம் ஏங்குகிறது.
இந்த படக்காட்சியில் அதுதான் வருகிறது.
நேற்று ஒரு யுடியூப் காணொளியைப் பார்த்தேன். கவிஞரும் மருத்துவருமான பிரபு திலக்கை அவரது மனைவி பொதுவெளியில் தாக்கியது, அவருக்கு. விஷம் கொடுக்க திட்டமிட்டது (ஆர்ஸெனிக் கலந்த ஒரு மருந்து), மாமியாரும் எழுத்தாளருமான திலகவதிக்கு எதிராக ஐ.பி.ஸி 498A வில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்தது போன்ற கொடுமைகளைப் பற்றி பேசியிருந்தார்கள். அந்த பெண்ணின் பிரச்சினையும் இதில் வரும் பார்பராவின் பிரச்சினையும் ஒன்றும். எத்தனையோ மணமான பெண்களின் பிரச்சினையும் ஒன்று தான். அவர்கள் அடக்கிக் கொண்டு எப்படியோ வாழ்கிறார்கள். 

அதனாலே இந்த திருமண அமைப்பு செயற்கையானது, ஆபத்தானது என்கிறேன். பெண்கள் கூட நினைத்தால் தப்பித்து விடுவார்கள். அவர்கள் தமது சமிக்ஞைகளை நுட்பமாக வெளிப்படுத்துவார்கள். அது ஆணுக்கு சுலபத்தில் புரியாது. அப்போதே அவனை ஒன்று கொல்ல வேண்டுமென்றோ வேறுவழிகளில் அவனை வதைத்து நடுத்தெருவில் நிறுத்த வேண்டுமென்றோ நினைப்பார்கள்!புரிந்த ஆண்கள் ஆண்கள் தப்பிப்பார்கள்!  அதிர்ஷடசாலி ஆண்களும் தப்பிப்பார்கள்.
மற்றவர்களின் கதி?

யுடியூப் லிங்க்: https://youtu.be/yNg2IJYt0mY

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...