முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னது உனக்கு நான் இப்போ சாகணுமா?

War of the Roses படத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சி இது: நாயகனுக்கு உடல் நலமில்லாமல் போகிறது. சாகும் நிலை. ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போகிறார்கள். அவன் திரும்பத் திரும்ப என் மனைவிக்கு தெரிவித்து விட்டீர்களா எனக் கேட்கிறான். ஆஸ்பத்திரியில் நாங்கள் பலமுறை போன் செய்துவிட்டோம் என்கிறார்கள். சாகும் தறுவாயில் இருப்பதாக எண்ணும் அவன் அவளிடம் தன் காதலை, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஒரு குறிப்பை கடும் வலியின் இடையே எழுதுகிறான். ஆனால் அவள் வரவில்லை. அவன் தப்பித்து விடுகிறான். அவளோ கடைசி வரை அவனைப் பார்க்க வரவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின்னர் நீ ஏன் வரவில்லை எனக் கேட்கிறான். அவள் காரணம் சொல்லவில்லை. பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான்.

இது ஒரு கூர்மையான அவதானிப்பு. பெண்கள் நெடுங்காலம் ஒரு ஆணுடன் வாழும்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. ஒரு சில பத்தாண்டுகளிலோ சில ஆண்டுகளிலோ அவர்களுக்கு மூச்சுத்திணற ஆரம்பிக்கிறது. அவர்கள் விடுதலைக்காக தவிக்கிறார்கள். பிரச்சினை பல சமயங்களில் குடும்பத்தில் மட்டும் இருக்காது. அது இயற்கையின் விழைவு. நமது மரபான குடும்ப அமைப்பு அண்மைக்காலம் வரை அவர்கள் மீது கடும் சமூகப்பொருளாதார,பண்பாட்டு அழுத்தங்களை சுமத்தியதால் மட்டும் ஒரு ஆணுடன் தம் வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் இயற்கை பெண்ணுடலை அப்படி அமைக்கவில்லை. ஆண்களுக்கு உள்ளதைப் போல நீடித்த இளமையும் குழந்தை பெறும் வளமையும் பெண்களுக்கு இல்லை. நவீன சமூகத்தில் முப்பது வயதிற்கு மேல் midlife crisis இப்படியே தோன்றுகிறது. கூடுதலாக வேறு இணைகளை அடைந்து பிள்ளை பெற வேண்டும் என வனத்தில் வாழ்கையில் ஒரு ஆதிப்பெண்ணுக்குத் தோன்றியிருக்குமெனில் நவீன பெண்ணுக்கு தன் அடையாளத்தைக் கண்டடைய வேண்டும், அதன் வழி காலத்தில் அனந்தரமாக வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனாலே கணவனின் இருப்பு - குழந்தைகள் அல்ல - அவளுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது. ஒரு பெரும் பாரம் தம்மை அழுத்துவதாகத் தோன்றுகிறது. அவன் செத்து ஒழிய மாட்டானா என அவள் ஆழ்மனம் ஏங்குகிறது.
இந்த படக்காட்சியில் அதுதான் வருகிறது.
நேற்று ஒரு யுடியூப் காணொளியைப் பார்த்தேன். கவிஞரும் மருத்துவருமான பிரபு திலக்கை அவரது மனைவி பொதுவெளியில் தாக்கியது, அவருக்கு. விஷம் கொடுக்க திட்டமிட்டது (ஆர்ஸெனிக் கலந்த ஒரு மருந்து), மாமியாரும் எழுத்தாளருமான திலகவதிக்கு எதிராக ஐ.பி.ஸி 498A வில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்தது போன்ற கொடுமைகளைப் பற்றி பேசியிருந்தார்கள். அந்த பெண்ணின் பிரச்சினையும் இதில் வரும் பார்பராவின் பிரச்சினையும் ஒன்றும். எத்தனையோ மணமான பெண்களின் பிரச்சினையும் ஒன்று தான். அவர்கள் அடக்கிக் கொண்டு எப்படியோ வாழ்கிறார்கள். 

அதனாலே இந்த திருமண அமைப்பு செயற்கையானது, ஆபத்தானது என்கிறேன். பெண்கள் கூட நினைத்தால் தப்பித்து விடுவார்கள். அவர்கள் தமது சமிக்ஞைகளை நுட்பமாக வெளிப்படுத்துவார்கள். அது ஆணுக்கு சுலபத்தில் புரியாது. அப்போதே அவனை ஒன்று கொல்ல வேண்டுமென்றோ வேறுவழிகளில் அவனை வதைத்து நடுத்தெருவில் நிறுத்த வேண்டுமென்றோ நினைப்பார்கள்!புரிந்த ஆண்கள் ஆண்கள் தப்பிப்பார்கள்!  அதிர்ஷடசாலி ஆண்களும் தப்பிப்பார்கள்.
மற்றவர்களின் கதி?

யுடியூப் லிங்க்: https://youtu.be/yNg2IJYt0mY

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...