War of the Roses படத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சி இது: நாயகனுக்கு உடல் நலமில்லாமல் போகிறது. சாகும் நிலை. ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போகிறார்கள். அவன் திரும்பத் திரும்ப என் மனைவிக்கு தெரிவித்து விட்டீர்களா எனக் கேட்கிறான். ஆஸ்பத்திரியில் நாங்கள் பலமுறை போன் செய்துவிட்டோம் என்கிறார்கள். சாகும் தறுவாயில் இருப்பதாக எண்ணும் அவன் அவளிடம் தன் காதலை, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஒரு குறிப்பை கடும் வலியின் இடையே எழுதுகிறான். ஆனால் அவள் வரவில்லை. அவன் தப்பித்து விடுகிறான். அவளோ கடைசி வரை அவனைப் பார்க்க வரவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின்னர் நீ ஏன் வரவில்லை எனக் கேட்கிறான். அவள் காரணம் சொல்லவில்லை. பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான்.
இது ஒரு கூர்மையான அவதானிப்பு. பெண்கள் நெடுங்காலம் ஒரு ஆணுடன் வாழும்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. ஒரு சில பத்தாண்டுகளிலோ சில ஆண்டுகளிலோ அவர்களுக்கு மூச்சுத்திணற ஆரம்பிக்கிறது. அவர்கள் விடுதலைக்காக தவிக்கிறார்கள். பிரச்சினை பல சமயங்களில் குடும்பத்தில் மட்டும் இருக்காது. அது இயற்கையின் விழைவு. நமது மரபான குடும்ப அமைப்பு அண்மைக்காலம் வரை அவர்கள் மீது கடும் சமூகப்பொருளாதார,பண்பாட்டு அழுத்தங்களை சுமத்தியதால் மட்டும் ஒரு ஆணுடன் தம் வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் இயற்கை பெண்ணுடலை அப்படி அமைக்கவில்லை. ஆண்களுக்கு உள்ளதைப் போல நீடித்த இளமையும் குழந்தை பெறும் வளமையும் பெண்களுக்கு இல்லை. நவீன சமூகத்தில் முப்பது வயதிற்கு மேல் midlife crisis இப்படியே தோன்றுகிறது. கூடுதலாக வேறு இணைகளை அடைந்து பிள்ளை பெற வேண்டும் என வனத்தில் வாழ்கையில் ஒரு ஆதிப்பெண்ணுக்குத் தோன்றியிருக்குமெனில் நவீன பெண்ணுக்கு தன் அடையாளத்தைக் கண்டடைய வேண்டும், அதன் வழி காலத்தில் அனந்தரமாக வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனாலே கணவனின் இருப்பு - குழந்தைகள் அல்ல - அவளுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது. ஒரு பெரும் பாரம் தம்மை அழுத்துவதாகத் தோன்றுகிறது. அவன் செத்து ஒழிய மாட்டானா என அவள் ஆழ்மனம் ஏங்குகிறது.
இந்த படக்காட்சியில் அதுதான் வருகிறது.
நேற்று ஒரு யுடியூப் காணொளியைப் பார்த்தேன். கவிஞரும் மருத்துவருமான பிரபு திலக்கை அவரது மனைவி பொதுவெளியில் தாக்கியது, அவருக்கு. விஷம் கொடுக்க திட்டமிட்டது (ஆர்ஸெனிக் கலந்த ஒரு மருந்து), மாமியாரும் எழுத்தாளருமான திலகவதிக்கு எதிராக ஐ.பி.ஸி 498A வில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்தது போன்ற கொடுமைகளைப் பற்றி பேசியிருந்தார்கள். அந்த பெண்ணின் பிரச்சினையும் இதில் வரும் பார்பராவின் பிரச்சினையும் ஒன்றும். எத்தனையோ மணமான பெண்களின் பிரச்சினையும் ஒன்று தான். அவர்கள் அடக்கிக் கொண்டு எப்படியோ வாழ்கிறார்கள்.
அதனாலே இந்த திருமண அமைப்பு செயற்கையானது, ஆபத்தானது என்கிறேன். பெண்கள் கூட நினைத்தால் தப்பித்து விடுவார்கள். அவர்கள் தமது சமிக்ஞைகளை நுட்பமாக வெளிப்படுத்துவார்கள். அது ஆணுக்கு சுலபத்தில் புரியாது. அப்போதே அவனை ஒன்று கொல்ல வேண்டுமென்றோ வேறுவழிகளில் அவனை வதைத்து நடுத்தெருவில் நிறுத்த வேண்டுமென்றோ நினைப்பார்கள்!புரிந்த ஆண்கள் ஆண்கள் தப்பிப்பார்கள்! அதிர்ஷடசாலி ஆண்களும் தப்பிப்பார்கள்.
மற்றவர்களின் கதி?
யுடியூப் லிங்க்: https://youtu.be/yNg2IJYt0mY
Comments