Skip to main content

இலக்கிய விழா - அறிவுரைகள்

இலக்கிய விழா அழைப்புகளுக்கு போவதற்கு விருதுகளை ஏற்பதற்கு முன் அறிய வேண்டியவை:

நமக்கு பயனில்லாத நாம் எதையும் செய்யக் கூடாது - இது இலக்கியத் திருவிழாக்களுக்கும் பொருந்தும். பயன் என்றால் கவனம், புகழ், புதிய வாசகர்கள்,  முக்கியமாக சன்மானம். 

வெறுமனே பள்ளி மாணவர்கள் அமர வைக்கப்படும் அரங்குகளில் பேசுவதை விட யுடியூப் சேனலிலோ ரியாலிட்டி ஷோவிலோ பேசலாம். ஆள் வராத பொதுக்கூட்டங்களில் பேசுவது "சின்ன கவுண்டரில்" கவுண்டர் கழுதைகளிடம் உரையாற்றுவதற்கு நிகர். அங்கெல்ல்லாம் போய் தலையைக் கொடுக்கதீர்கள்.

உங்களை எங்காவது பேசக் கூப்பிட்டால் புதிய வாசகர்கள், பணம், பரவலான சமூக கவனம் கிடைக்காத இடங்களைத் தவிருங்கள். மெனெக்கெட்டு தயாரித்து போய் கதறிக் கதறிப் பேசி செலவிடும் ஆற்றலை, நேரத்தை உங்கள் படைப்புகளை எழுத பயன்படுத்துங்கள். 

அதே நேரம் சிறுபத்திரிகை கூட்டங்களில் தாராளமாகப் பேசலாம். திருப்தி, அறிவுப் பகிர்தல், தொடர்புகள், கொஞ்சம் அடிதடி, வயிற்றெரிச்சல், அரசியல் என ஜாலியாக இருக்கும். 

பணம் தர இயலாதவர்கள், ஒரு லட்சியத்துக்காக இலக்கிய பணி ஆற்றுபவர்களை நாம் மதிக்க வேண்டும். சன்மானம் கேட்கலாகாது. ஆனால் பந்தாவுக்காக கூட்டம் நடத்துபவர்களை மதிக்கக் கூடாது, சன்மானம் கேட்டுப் பெற வேண்டும்.

மேடையேறும் குறியீட்டு மதிப்புக்காக இப்படி கரடியாக அலைய வேண்டியதில்லை. கூப்பிடாவிட்டால் அதை ஒரு அவமதிப்பெனக் கருதி மருகாதீர்கள். உங்கள் நேரம் காப்பாற்றப்பட்டது என மகிழுங்கள்.

என்னை நெல்லைத் திருவிழாவில் பேச அந்த பகுதி துணை தாசில்தார் கூப்பிட்டார். ரயில் டிக்கெட்டும் மூவாயிரம் ரூ பணமும். தலைப்பு திராவிட இலக்கியம். அது என்னுடைய ஆர்வத்திற்குள் வரும் தலைப்பு அல்ல. மூவாயிரம் ரூபாய்க்காக கடுமையாக உழைத்து தயாரித்து அவ்வளவு தூரம் போய் பேச வேண்டுமா என யோசித்தேன். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எனக்கு நட்டமே எனத் தோன்றியது. வேண்டாம் என்றேன். அதன் பிறகு அங்கு நடந்த ஏற்பாடுகளைப் பற்றி நண்பர்கள் எழுதியதைப் படித்தால் நான் எடுத்தது ஆகச்சிறந்த முடிவு எனத் தோன்றியது.

நான் யுவ புரஸ்கார் விருது வாங்கியதை அடுத்த ஒரு வருடத்திற்கு என்னை சில கல்லூரிகளில் தொடர்ச்சியாக பேச அழைத்தார்கள். ஒரு தொகையை தீர்மானித்து வைத்து கேட்டு வாங்கிய பின்னரே பேசினேன். அப்போது நான் முழுநேர முனைவர் பட்ட மாணவன். எனக்கு அப்போது அந்த வருமானம் பயன்பட்டது. தேவையில்லாத கூட்டங்களைத் தவிர்ப்பதற்கும் உதவியது. முக்கியமாக, நம் நேரத்தை, நம் உழைப்பை, நம் திறனை நாமே மதிக்காவிடில் உலகம் மதிக்காது. உலகத்துக்கு மதிப்பென்றால் பணம் கேட்பதே. பணம் வேண்டாமல் எவ்வளவு சிறப்பான பணியை செய்தாலும் உங்களை மதிக்க மாட்டார்கள். இதுவே நான் மேடையில் பேசத் துவங்கிய போது கற்றுக்கொண்ட பாடம்.

இது விருதுகளுக்கும் பொருந்தும். சன்மானமில்லாத விருதுகளை பக்கத்துத் தெருவில் நம் நண்பர்கள் கொடுத்தால் பேஸ்புக்கில் படம் போடுவதற்காக போய் வாங்கலாம். உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது, கார் இருக்கிறதென்றால் ஒவ்வொரு ஊராட்சியாகப் போய் விருதுகளை வாங்கி வரலாம். இல்லாவிட்டால் சன்மானமில்லா விருதுகளைத் தவிர்ப்பதே நலம். விருதென்று வந்துவிட்டால் 25,000 கூடத் தர முடியாவிட்டால் என்ன மரியாதை அது? தருபவர்கள் மட்டும் புகழை அடைய முயற்சிக்கும், எழுத்தாளனை சுரண்டுகிற முயற்சி அல்லவா அது?

சன்மானமே இல்லையென்றாலும் கூட டிவி சேனல், யுடியூப் சேனல், விகடன் போன்ற பத்திரிகைகளின், நல்ல பெயர் பெற்ற இலக்கிய அமைப்புகளின் விருதுகள் விதிவிலக்குகள். ஒரு வாரம் இதை வைத்து உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடலாம். 

இதைப் பற்றி இம்மாதம் வெளியாக உள்ள என்னுடைய "எழுத்தாளனாக வாழ்வது எப்படி?" எனும் நூலில் பேசியிருக்கிறேன் - விருதுகளை வாங்குவதற்கு எல்லாரிடமும் பணிவாக இருக்க வேண்டும். கொஞ்சமே கொஞ்சம் திமிரைக் காட்டினால் கூட விருதுகள் கிடைக்க்காது. ஆசானைப் பாருங்கள். அவருடைய திமிருக்கு சின்ன சொப்பு சாமான் விருதைக் கொடுக்க மாட்டார்கள். அவர் இளைஞராக இருந்த போது கிடைத்த சம்ஸ்கிருத சம்மான் விருதுக்கு அடுத்து அவர் ஒன்றுமே வாங்கவில்லை என நினைக்கிறேன். மேலும் அவருக்கு கொடுத்தால் திட்டுவிடுவாரோ எனும் பயமும் எல்லாருக்கும் உள்ளது. ஆனால் தலை எவ்வளவு கெத்தாக இருக்கிறார்!

அதே போல பெயர் பெற்று உயர்ந்த அந்த்ஸ்துடன் இருக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகளைக் கொடுக்க மாட்டார்கள். இவரெல்லாம் நம்ம விருது வாங்கும் தகுதிக்கு அப்பாலானவர்கள் என அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள். ஆக நிறைய விருதுகள் உங்களுக்கு வரவில்லை என்றால் இலக்கிய படிநிலையில் உயர்ந்து விட்டீர்கள் எனப் பொருள். மாதம் ஒரு விருதாக வந்து கொண்டே இருக்கிறது என்றால் இந்த உலகம் உங்களை ஒரு டுபாக்கூர் எனக் கருதுகிறது எனப் பொருள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...