Skip to main content

கல்வியும் தனிமையும்


கல்வி மனித சமூகத்துக்கு கேடானதோ என்று கூடத் தோன்றுகிறது. ஆம் கல்வி நமக்கு பொருளதார தன்னிறைவைத் தருகிறது, ஆனால் அதே கல்விதான் நம்மை தனிமையும், சுயநலம், தந்திரமும் மிக்கவர்களாக ஆக்கிவிட்டது. கல்வி பெற்றவர்களிடம் துளி நன்மை கூட தென்படுவதில்லை. ஆனால் கல்வி பெறாதவர்கள் அவ்வளவு நெருக்கமாக இணக்கமாக வாழ்கிறார்கள். நான் ஒரு கல்வியாளனே - ஆனால் கல்வியானது நம்மை சுயமுன்னெடுப்பு மட்டும் கொண்டவர்களாக, சுயநலமிகளாக மாற்றுகிறது என்பதையும் மறுக்க முடியாது. கல்விக்கும் நமது குடும்பங்கள் இப்படி உடைந்து துண்டுதுண்டானதற்கும் ஒரு மறுக்க முடியாது தொடர்பு உள்ளது. அதாவது பொருளாதார முன்னேற்றமும் நகரமயமாக்கலும் மட்டுமல்ல கல்வி தரும் சுயமோகமும் சுயமுன்னெடுப்பும் தான் நம்மை இப்படி தனித்தனி தீவுகளாக வாழ்ந்து நான்கு சுவர்களுக்குள் பிணமாக வைக்கிறது. இன்னொருவரை கவனிக்காமல் தன் காரியமே முக்கியம் என வாழ்வது சரிதான், அதில் தப்பில்லை என்பது நமக்கு முதலில் பயிற்றுவிப்பது கல்வியமைப்பு தான். தேர்வு என்றால் என்ன பக்கத்தில் உள்ள நண்பன் தோற்றாலும் கவலையில்லாமல் நீ உன் மதிப்பெண்ணை அதிகப்படுத்து என குழந்தைக்கு போதிப்பது தானே. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது மாணவர்கள் சிலர் பிற அதிக மதிப்பெண் எடுக்கக் கூடாது என்று பாடப்புத்தகங்களை திருடி மறைத்து வைப்பதுண்டு. இன்றும் தேர்வு மதிப்பெண்ணை அறிவிக்கையில் அது மாணவர்களிடையே ஒரு பரஸ்பர வெறுப்பை, பதற்றத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கிறேன். இதை நாம் போட்டியுணர்வு என்கிறோம். ஆனால் இது போட்டியுணர்வு அல்ல தனிமையுணர்வே. இதுவே பின்னர் ஒரு சமூகமாக நாம் தனித்தனி துண்டுகளாக மாறி பரஸ்பரம் இணக்கமில்லாமல், ஆதரவில்லாமல் தன்முனைப்பு மட்டுமே முக்கியம் எனக் கருத வைக்கிறது. மேலும் கல்வி சமூக உணர்வை விட தனிமனித உணர்வை அதிக முக்கியம் என கருத வைக்கிறது. சமூகப் பொறுப்புணர்வு, அறவுணர்வு எல்லாம் அவசியமற்றவை என நவீன கல்வி கல்வி சொல்லுகிறது.

நமது பெற்றோரை நாம் தனித்து விடுவதற்கும், நமது பிள்ளைகள் நம்மிடம் இருந்து விலகி இருப்பதற்கும் இந்த நவீன கல்வி அளிக்கும் பயிற்சியே முக்கிய காரணம் என்று நான் சொன்னால் அதை நீங்கள் பெரும்பாலும் ஏற்க மாட்டீர்கள். ஏனென்றால் கல்வி நம் சமூகத்தில் மிக அதிகமாக கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட கடவுளாக வழிபடப்படுகிறது. ஆனால் நம் சமூகத்தில் இன்றுள்ள பல கேடுகெட்ட போக்குகளுக்கு வழிகோலுவதே நமது நவீன கல்வி தான் என உறுதியாக நம்புகிறேன்.

முழுக்க முழுக்க சுயமுன்னேற்றம் என்றில்லாமல் சமூக முன்னேற்றம், நிதியுணர்வு சார்ந்த கல்வி என மறுவரையறுத்தால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...