Skip to main content

மனைவிக்கு ஊதியம் கொடுக்கலாமா?


கேள்வி: தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கூட unpaid work என்று பெண்கள் சொல்கிறார்களே. இது ஏன்? நீங்கள் இதை ஏற்கிறீர்களா? இந்த unpaid என்கிற வார்த்தை ஆண்களை வம்புக்கு இழுக்கிறது.


பதில்: ஆம், பெண்ணியவாதிகள் சொல்வது சரி தான். குடும்பம் என்பது ஒரு தொழிற்சாலை, அங்கு பெண்கள் உழைக்கிறார்கள், அதற்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மனைவியாக இருப்பதற்கான ஊதியம் கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கை அரசின் முன் இருக்கிறது. ஆனால் அரசு இதை சட்டமாக்காமல் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் நான் அதை முழுமையாக ஆதரிப்பேன்.


அதே நேரம் எனக்கு சில நிபந்தனைகள் உண்டு:


  1. இதை ஒரு உழைப்பாக அன்றி கடமையாகவும், புனிதமான சேவையாகவும் கண்டு, இதற்கு ஆண்கள் தம் மனசாட்சிக்கு உகந்து ஊதியம் அளிக்க வேண்டும் என்று அரசு கூறக் கூடாது. இதை ஒரு பணியாக வரையறுக்க வேண்டும். இது மிக முக்கியம்.
  2. வீட்டிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு, மனைவியின் உழைப்பால் யாரெல்லாம் பயனடைவார்கள், என்னென்ன பணிகள் குடும்பத்தை நடத்துவதில் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும், அவற்றில் எவையெல்லாம் செய்ய ஒரு மனைவி தயாராக உள்ளார் என்பதைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். இந்த பட்டியலை ஒரு ஆவணமாக அரசு நிறுவனம் ஒன்றிற்கு மனைவி சமர்ப்பித்து தன் ஊதியத்தை கோரும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். நியாயமாக கணவனின் ஊதியம் அல்லது வியாபாரம் என்றால் மாத வருமானத்தில் இருந்து 30-35% இருக்க வேண்டும்.
  3. உணவை சமைக்க, உணவை விளம்ப, துணி துவைத்து காயப்போட, வீட்டை சுத்தம் பண்ண, குழந்தையை பார்த்துக்கொள்ள, குழந்தைக்கு உணவளிக்க, ஆடை அணிவிக்க, குளிப்பாட்ட ஒரு மனைவி தயாரா என்பதை அறிந்து அதற்கு ஏற்ப ஊதியத்தை தீர்மானிக்க வேண்டும். இன்னின்ன பணிக்கு இவ்வளவு சம்பளம் என வரையறுக்க வேண்டும்
  4. நியாயமாக செக்ஸையும் இந்த பட்டியலில் கொண்டு வர வேண்டும் - ஆனால் நம்முடையது ஒரு ஒழுக்கவாத சமூகம், இதைப் படிக்கிறவர்கள் என்னை செருப்பால் அடிப்பார்கள் என்பதால் வேண்டாம்.
  5. ஆனால் கணவனிடம் பிரியமாக இருப்பதை நிச்சயமாக உழைப்பாக வகைப்படுத்த வேண்டும். ஏனென்றால் () எல்லா கணவர்களுக்கும் இது இன்று கிடைப்பதில்லை; ஏனென்றால் () பிரியம் இன்று taken for granted ஆக இருப்பதனால், சட்டமும் இதைப் பொருட்படுத்தாதாலே விவாகரத்தின் போது கூட பிரியமின்மையை காரணமாகக் காட்ட முடிவதில்லை. கத்துவது, மிரட்டுவது உள்ளிட்டு மனரீதியாக கொடுமைப்படுத்துவது என போலி காரணங்களை நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டி இருக்கிறது. இன்னொரு விசயம் () இன்றைய கடுமையான வேலைச் சூழலில், நேர நெருக்கடியில் அன்பு காட்டுவதற்கு தனியாக நேரம் ஒதுக்கி அக்கறை காட்டாவிட்டால் உழைக்காவிட்டால் அது நடக்காது. அன்பு இல்லாமல் போவதும் ஒரு துயரம், ஒரு இழப்பு தானே? ஆக, அன்பு செலுத்த ஒரு மனைவி தயாரா இல்லையா என்பதை அறிந்து அதற்கு எவ்வளவு ஊதியம் என்பதையும் வரையறுக்க வேண்டும்.
  6. அடுத்து முக்கியமாக குழந்தைப் பேறு. () ஒரு பெண் குழந்தைப் பேறில், வளர்ப்பில் பங்கேற்றால் அதையும் உழைப்பாக கருதி ஊதியத்தை தீர்மானிக்க வேண்டும். பின்னர் மணவிலக்கின் போது ஒரு ஆண் தன் குழந்தையை வளர்ப்பதற்கான உரிமையை இதை வைத்து கோர வேண்டும், அதை சட்டம் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் அவன் ஊதியம் செலுத்தாவிடில் அவள் குழந்தையைப் பெற்றிருக்கவோ வளர்த்திருக்கவோ மாட்டாள் தானே? அவ்விடத்தில் சட்டம் தாய்மையை மிகைப்படுத்தி புனிதப்படுத்தாமல் அதை ஒரு உழைப்பாக கருதுவதே நியாயமாகவும் இருக்கும், ஆணுக்கும் தன் தந்தைமையை ஒரு உரிமையாக முன்வைக்க உதவும். () பத்து மாசம் சுமந்து பெறுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்றெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணுவதை நிறுத்த உதவும். அதற்கு ஒரு கட்டணத்தை கொடுத்து விட வேண்டும்.
  7. அடுத்து மிக முக்கியமாக, குழந்தை வளர்ப்பு: குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும், உணவளித்து குளிப்பாட்டி வளர்க்கவும் வேறு ஆட்கள் இருந்தால் இதற்கு ஊதியம் இல்லை.
  8. இப்போது மிக முக்கியமான நிபந்தனை வருகிறது - சம்பளம் கொடுப்பதால் இது ஒரு வேலை என்பதால் கணவன் ஒரு வேலை கொடுக்கிற முதலாளி ஆகிறான். இதை சட்டம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நடைமுறையில் உள்ள விதிகள் குடும்பத்துக்கும் பொருந்த வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை performance review meeting நடத்தி மனைவியால் தன் பணியை கணவனுக்கு திருப்தியளிக்கும் விதம் பண்ண முடிந்திருக்கிறதா என விசாரித்தறிய, உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் தன் பணியையும் ஊதியத்தையும் இழக்கிறார் (ஆனால் மனைவியின் அந்தஸ்து போவதில்லை.) குறைகள் இருந்தால் அவற்றை களைவதாக அவர் உத்தரவாதம் அளித்து வேலையில் தொடரலாம். கணவன் தன் எதிர்கால எதிர்பார்ப்புகளை முன்வைக்கலாம். இதை ஆவணப்படுத்தி அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  9. எந்த வேலையிலும் உள்ளதைப் போல மனைவிக்கு விடுப்பெடுக்க உரிமை உண்டு. இத்தனை நாட்களுக்கு இன்னின்ன விடுப்புகள் என்பதை ஆவணப்படுத்தி மனைவியின் ஒப்புதல் பெற வேண்டும். விடுப்பை முன்கூடியே சொல்லி கணவனின் ஒப்புதலுடன் பெற வேண்டும். எந்த வேலையிலும் உள்ளதைப் போல வேலை நீக்கம் செய்யும் ஒரு மாதத்திற்கு முன் கணவன்  அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
  10. இதில் பாலின பாகுபாடு கூடாது - மனைவி வேலைக்கு செல்கிறவர் எனும் பட்சத்தில், கணவன் வேலைக்கு சென்றாலும் இல்லாவிடினும் இந்த பணிகளை அவன் எடுத்து நடத்த முன்வந்தால் அதையும் மேற்சொன்ன நடைமுறைகளின் படி ஆவணப்படுத்தி, அவனுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அங்கு மனைவி முதலாளியாகவும், கணவன் ஊழியனும் ஆவான்


இப்படி ஊதியத்தை அரசு முறைப்படுத்தி ஆவணப்படுத்தாமல் பொத்தாம் பொதுவாக ஒரு தொகையை சொல்லி அதை ஊதியமாக கொடுக்க சொன்னால் அது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். முக்கியமாக இன்று தமிழில் ஆண் பெண்ணியவாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்பவர்கள் பெண் பெண்ணியவாதிகளை விட அதிகம். இவர்கள் கதி அதோகதியாகும். அது மட்டுமல்ல ஆண்கள் திருமண அமைப்பில் இருந்தே தப்பி ஓடிவிடுவார்கள். அல்லது சம்பளத்தில் இருந்து 25% என குறைந்த பட்ச தொகையை ஊதியமாக அறிவித்தால் அது வீட்டு செலவிக்கான பணத்தில் ஒரு முக்கியமான பகுதியை எடுத்துவிடும் என்பதால் அப்பணமும் மனைவியிடம் இருந்து பறிக்கப்படும். மனைவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கணவர்களுக்கு அது பெரும் தொந்தரவாகும், அவர்கள் கொடுக்க மறுப்பார்கள், மனைவி நீதிமன்றத்துக்கு சென்றால் அது குடும்பத்தை உடைக்கும். ஆக மனைவிகள் தமக்கு அளிக்கப்படும் பணத்தை திரும்பக் கொடுப்பார்கள். இப்படி இந்த சம்பளம் ஒரு சடங்காக மட்டும் சுருங்கும். 10% என்றால் அது இப்பெண்களுக்கு நியாயமான ஊதியமாக இருக்காது. வங்கிக்கடன் போன்ற சிக்கல்களில் உள்ள குடும்பங்களில் 10% கூட பெரிய ஓட்டையை ஏற்படுத்தும். மனைவி மீது கசப்பு அதிகமாகும். ஆனால் இதற்கு ஒரு விருப்பத்தேர்வை தந்து, அதை ஒழுங்காக ஆவணப்படுத்தினால் அது கணவனுக்கோ மனைவிக்கோ நெருக்கடியாக மாறாது. அதனாலே மேற்சொன்ன முறைமையை பரிந்துரைக்கிறேன்.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...