Skip to main content

போலிகளால் ஆனது உலகம்

 மதன் - வெண்பா ஸ்டிங்கில் அம்பலமானவர்களைப் பார்க்கையில் அவர்களே நம் காலத்து நாயகர்கள் என்று தோன்றுகிறது.

 உள்ளீடில்லாதவர்களின் காலம் இது. இன்றைய யுகத்தில் இவர்களே வெற்றியாளர்கள், எழுதவும் சிந்திக்கவும் தெளிவாகப் பேசவும் தெரிந்தவர்கள் முட்டாள்கள். இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஒரு டீக்கடைப் போய்இந்தாப்பா நூறு கிராம் நேர்மை, ஐம்பது கிராம் அறிவு, வடைக்கு காசா? இந்தா நூறு கிராம் சித்தாந்தம்என்று சொன்னால் செருப்பால் அடிப்பார்கள். மேலும் மக்கள் இந்த நேர்மை, கீர்மை, அறம், முறத்தில் எல்லாம் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.


நான் பதினாறு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். நாற்பதுக்கு மேல் புத்தகங்கள் போட்டிருக்கிறேன். இருபதாண்டுகளுக்கு மேலாக பல இடங்களிலாக வேலை செய்து வருகிறேன். எனக்கு இந்த சமூகம் கொடுத்ததென்ன? அண்மையில் நடந்த சட்ட சோதனைகளில் நான் என் அம்மா எனக்குப் போட்ட நகைகளை மொத்தமாக  இழந்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளாக உழைத்தும் என்னால் சொந்தமாக ஒரு பைக் வாங்கக் கூட முடியவில்லை (அதுவும் வங்கிக்கடன் தான்). மாதாமாதம் வாங்க வேண்டிய இன்சுலினை வாங்கப் போனால் மொத்தமாக 4000 போய் விடுமே என எண்ணி மருந்தகம் போவதையே தவிர்க்கிறேன். சம்பளம் வந்ததும் பாதி (வழக்கை சமரசம் பண்ணி முடிக்க எடுத்த வங்கிக்கடனின்) .எம்.ஐயிலும் மீதியில் ஒரு பாதி வாடகையிலும் போய் விடுகிறது. ஏனென்றால் நான் இத்தனைக் காலமாக தவறாக வாழ்ந்திருக்கிறேன். திடீரென நோய்வாய்ப்பட்டாலும் நான் மருத்துவமனை செலவுக்கு கடன் தான் வாங்க வேண்டும். இது என் நிலைமை தான் என்றில்லை, என்னைப் போல பலரை இன்று எனக்குத் தெரியும்.


முன்பு மனிதர்கள் ஒரு முகதாட்சியத்துக்காக அன்பு காட்டினார்கள், நம்மைப் பாதுகாத்தார்கள், இன்று பணமில்லையென்றால் அவர்கள் நம்மைவிட்டு விலகி விடுவார்கள். அது மட்டுமல்ல ஒரு சட்டபிரச்சினை என்று வந்துவிட்டால் ஒட்டுமொத்த கூட்டமும் நம்மை விட்டு ஓடிவிடுவார்கள் என்பதையும் என் அனுபவத்தில் கண்டேன். ஆனால் பணம் இருந்தால் ஜெயிலுக்குப் போவது கூட ஒரு பிரச்சினை அல்ல, அலுங்காமல் குலுங்காமல் அதை சமாளிக்கலாம் என இந்த 2க் கிட்ஸ் யுடியூபர்கள் நமக்கு காட்டித் தந்தார்கள். இவ்வளவு வசதியாக இல்லாவிடில் இந்நேரம் இந்த கும்பல் ரோட்டில் நின்றுகொண்டிருக்கும், குழந்தை குட்டி எல்லாரும் பத்திவிடுவார்கள்.

 ரவீந்திரன் துரைசாமியைப் போல் இருந்தாலே குடும்பம், சுற்றம், நண்பர்கள் எல்லாரும் நம்மை மதிப்பார்கள். நாம் இத்தகையோரைக் பார்த்து கற்றுக்கொண்டு வளர வேண்டும்


ரவீந்திரன் துரைசாமி அந்த சின்ன நகை டப்பாவை ஒரு குழந்தையை ஏந்துவதைப் போல எடுத்து திறந்து பார்க்கையில் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டதே அதை மறக்க மாட்டேன். எனக்கு சற்று மகிழ்ச்சியும் தோன்றியது. மனிதர் நன்றாக வாழட்டும் என வாழ்த்தினேன்.


 ஐயப்பன் ராமசாமி, மாதேஷ், சவுக்கு போன்றோர் ஊரை ஏமாற்றினார்கள் தாம், ஆனால் யார் உங்களை ஏமாற சொன்னது? சும்மாவா சொன்னார்கள் இந்த உலகில் ஏமாற்றுகிறவன், ஏமாறுகிறவன் என ரெண்டே தரப்பு தான் என. இந்த யுகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும். ரவீந்திரன் துரைசாமி சொல்வதெல்லாம் அபத்தம் என்றாலும் அறிவு, சித்தாந்த உணர்வு எல்லாம் முக்கியம் அல்ல என்று அவர் நம்புவது சரி என்று இப்போது தோன்றுகிறது. ஐயப்பன் ராமசாமியைப் போன்றோர் பத்தாம் வகுப்பைத் தாண்டி படிக்காதவர்கள், நாலு வார்த்தை ஒழுங்காக பேசவோ எழுதவோ தெரியாதவர்கள். கிஷோர் கெ ஸ்வாமியை நான் ஒரு காலத்தில்என் வீட்டில் வந்து செல்ல நாயாக இருந்துக்கட்டும் அவர், அவரை சிறைக்கெல்லாம் அனுப்பாதீங்கஎன்று கலாய்த்திருக்கிறேன். அவரே இத்தனை ஊடகவியாளர்களை ஒருங்கிணைக்கும் டான் எனப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. யோவ், என்னை மன்னிச்சிக்கய்யா. என் வீட்டுக்கு வந்து என் குருநாதராக இருந்துக்கோ.



வேலூர் இப்ராஹிம் நாமம் வாழ்க!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...