Skip to main content

எவண்டா எனக்கு கஸ்டடி?

நான் பிறந்து நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. நான் என் சிறுவயது முதல் இன்று வரை என் நண்பர்கள் வட்டாரத்தில், உறவுகள் இடையே, வேலையிடங்களில், நான் வசித்த தெருக்களில், குடியிருப்புகளில் பார்க்காமல் தவறிய ஒரு சங்கதி இந்தநீதிஅல்லதுஅறத்தைதான். என் கண்களில் இதுவரை படாத அது தினமும் உங்கள் கண்களில் மட்டும் படுகிறது (என் கண்களையும் சோதித்துப் பார்த்துவிட்டேன்.) ஆனால் அதை இலக்கியம், சினிமா, நண்பர்களுடனான உரையாடல்களில் நான் அதிகமும் அதைப்பார்த்திருக்கிறேன்’. அவர்கள் எப்படி அதைப் பார்த்தார்கள் என்று கேட்டால் சில சம்பவங்களை சொல்வார்கள். ஆனால் அந்த சம்பவங்களில் நீதி / அறம் இருப்பதாக அவர்கள் அர்த்தப்படுத்தி இருக்கிறார்களே ஒழிய எந்த சான்றையும் கண்டதாக சொல்ல முடியாது

முதலில் எதிர்மறை நீதியைப் பார்ப்போம். உங்களை ஒருவர் அநியாயமாகத் திட்டிவிட்டு போகும் போது தடுக்கி விழுந்து அவர் பாட்டுக்கு எழுந்து குண்டியைத் தட்டிவிட்டுப் போகிறார் என்றால்பார்ரா என்னைத் திட்டினேல்லா அதனால் விழுந்து வாரினே…” என்று பொருள்படுத்துவதைப் போலத்தான். அவர் கவனிக்காமல் போனார், விழுந்தார். மிக மோசமாக நம்மிடம் நடந்து கொண்ட குரூரமான ஒருவருக்கு மாரடைப்பு வந்து இறந்து போனால், அல்லது வாழ்வில் பல தோல்விகளைக் கண்டு காணாமல் போனால்கடவுள் இருக்கிறான்யாஎன்றோ, ‘கொஞ்ச நஞ்சமா அநியாயம் செஞ்சான்என்றோ நண்பர்களோ சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். இந்த சம்பவங்களுக்கு என்று சில காரணிகள் (நாகார்ஜுனர் சொல்லும்நிபந்தனைகள்’) இருக்கும் - உடலில் அதுவரை ஏற்பட்டு வந்து மாற்றங்கள், வாழ்க்கைச்சூழலில் நேர்ந்த எதிர்பாரா சிக்கல்கள், அவர் எடுத்த சில தவறான முடிவுகள். இந்த காரணிகளே ஊழின் உருவங்கள் என்றால் இப்படியான பிரச்சினைகளையும், மாற்றங்களையும் சந்திக்கும் நல்லவர்கள் பலரை எப்படிப் புரிந்து கொள்வது? “நான் வாழ்க்கையில யாருக்கும் எந்த துரோகமும் பண்ணலையே, எனக்கு ஏன் இப்படி?” எனப் புலம்பும் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம். இவர்களை ஏன் கொடுங்கூற்று வந்து அள்ளையில் மிதிக்கிறது? இவர்களுக்கும்அறத்துக்கும்எதாவது தனிப்பட்ட பஞ்சாயத்தா


நான் என் மகனைப் பார்த்து ஆறாண்டுகள் ஆகின்றன. நான் அவனைக் கூட இருந்து வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் தொலைவில் இருந்து பார்க்கக் கூட கிடைக்கவில்லை. நான் செய்தபாவம்’, ‘அநியாயம்என்ன? நான் என்ன அடுத்தவர்களின் குழந்தைகளை பறித்துவிட்டேனா? நான் சட்டத்தின் கதவுகளை தொடர்ந்து தட்டிக்கொண்டிருந்தால் ஒருநாள் எனக்கு கதவு திறக்கும். அவனை மாதத்திற்கு சில மணிநேரங்கள் பார்க்க ஏற்பாடு செய்வார்கள் என அறிவேன். ஆனால் அது என் முயற்சி. அதன் பெயர் அறம் அல்ல. அறம் என்றால் வானத்தில் இருந்து குதித்தோ மானுட பிரவாகத்தில் இருந்துஜெய்பீம் சூர்யாவோ’ ‘அயோத்தி சசிகுமாரோவெளிப்பட்டோ என் குழந்தையை என்னிடம் தர வேண்டும்.


என்னுடைய உறவுகளில் அந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடவில்லை. இருபது சொச்சம் குழந்தைகளை வைத்துக் கொள்ளுங்கள். என் ஊரில் அந்த வருடத்தில் மட்டும் அப்படி ஊசி போடப்படாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் இருப்பார்கள். அவர்களில் யாருக்குமே வராத போலியோ எனக்கு மட்டும் வந்தது. எனக்கும் போலியோ கிருமிக்கும் எதாவது பஞ்சாயத்தா? அல்லது நான் பிறக்கும் முன்னர் நிறைய அநீதிகளை செய்தேனா? பிறக்காத ஒருவன் எப்படி செய்ய முடியும்? அல்லது பிறந்த முதல் ஆறுமாதங்களில் நானாக தவழ்ந்துபோய் பலருக்கும் தீமை செய்துவிட்டேனா?


சரி எனக்கு நடந்தது ஒரு விபத்து என்றால் மற்றவர்களுக்கு (அநீதியாளர்களுக்கு) நடக்கும் தீமைகள் மட்டும் ஏன் விபத்தல்லாமல் நீதிதேவனின் தண்டனையாக இருக்கின்றன? இல்ல, எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்குங்கள்


அடுத்து, நேர்மறையானஅறத்துக்குவருவோம். நான்  பிறந்து இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஒன்று என் பெற்றோரோ அல்லது நானாகவே தான் செய்துகொண்டிருக்கிறேன். சரி நான் தான் சனியன் பிடித்தவன், என் பக்கமேஅறம்வரவில்லை என்றால் என்னைப் போன்ற வேறு மாற்றுத்திறனாளிகள் பக்கமாவது அது அடியெடுத்து வைத்திருக்க வேண்டுமே. ம்ஹும். யார் பக்கமும் போனதாகத் தெரியவில்லை. ஆனாலும் நான் சிறுவயது முதலே மனிதர்கள் பரஸ்பரம் விழுந்துவிழுந்து உதவுவதாக, தியாகங்கள் செய்வதாக, கருணை ரோட்டில் நதியாக பெருகி ஓடுவதாக எழுதப்படும் கதைகளை, கவிதைகளை, சினிமாக்களை பார்க்கிறேன், மக்கள் அப்படி என்னைச் சுற்றி பேசுவதைக் கேட்கிறேன், உடனே நானும்எங்கே எங்கே?” எனத் தேடுகிறேன். காணவில்லை


சரி உதவுகிறவர்களே இல்லையா? இருக்கிறார்கள். ஆனால் உதவி என்பது நம்மூரில் ஒரு கொடுக்கல் வாங்கலாகவோ அல்லது நிபந்தனைக்குட்பட்ட செயலாகவோ இருக்கிறது. சிலர் நம்மிடம் பணம் வாங்கி ஒரு வேலையை செய்து தந்துவிட்டு தான் ஒரு சேவையை செய்ததாகப் பெருமைப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அல்லது நீங்கள் ரோட்டில் தவறி விழுந்தால் யாரோ தூக்கி விடுவார்கள். இதன் பெயர் தான் நீதியா? இதன் பெயர் உதவி. நீங்கள் மிருகங்களையும் பறவைகளையும் கவனித்தால் அவை பரஸ்பரம் உதவுவதைப் பார்க்கலாம். அது சமூகமாக்கலின், சமூக ஒத்திசைவின் பகுதி. அது ஒரு உளவியல். இந்த ஊரில் பசித்தவர்களுக்கு சோறிடுவோருக்குப் பின்னாலும் இப்படியான் ஒரு உளவியல் தேவை இருக்கிறது, பணம், சமூக நிலை போன்ற சங்கதிகள் இருக்கின்றன. ஆனால் அதை மறைத்துவிட்டு தம்மை சேவை செய்வோராக காட்டிக்கொள்ளவே பிரியப்படுகிறோம்


ஊரில் சிலருக்கு நேரமும் அடிப்படை வசதிகளும் இருக்கும் போது தேவைப்படுவோருக்கு உதவுவார்கள். அதை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களுடைய வாழ்க்கைச்சூழலில் சின்னஞ்சிறு மாற்றங்கள் வந்தால் தம் வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். சென்னை வெள்ளத்தின் போது சில நூறு பேர்கள் வீடுவீடாகப் போய் உதவியதையும் இப்படியே பார்க்கிறேன். நூறு நூறு நிபந்தனைகளுடன் தான் இங்கே சின்னச்சின்ன பூக்கள் பூக்கின்றன. நாம் அந்த பூக்களையே பார்த்துக்கொண்டு நின்று விடுகிறோம்.


அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஒருவர் பத்தாண்டுகளாக தினமும் இரவில் பிட்ஸா ஆர்டர் பண்ணி வாங்கி சாப்பிடுகிறார். ஒருநாள் திடீரென அவர் ஆர்டர் பண்ணவில்லை. அடுத்தடுத்த நாட்களும் அவரிடம் இருந்து சலனம் இல்லை. என்னடா நம்ம ரெகுலர் கஸ்டமர் ஆச்சே என பிட்ஸா கம்பெனிக்காரர்கள் அவரை அழைத்துப் பார்த்தால் அவர் வீட்டுக்குள்ளே செத்துக் கிடக்கிறார். இதை அக்கம்பெனியின் நீதியுணர்வு என்று சொன்னால் அவன் முட்டாள்.


அமெரிக்காவில் வீடற்றவர்கள் பற்றி ஒரு ஆவணப்படம். வீடற்ற ஒரு முதியவர் தினமும் மாலை ஒரு பீட்சா கடைக்கு சென்று அங்கு மீந்து போகும் பீட்ஸாவை அவர்கள் பேக் பண்ணித் தர வாங்கிக்கொண்டு வந்து தன்னைப் போன்ற வீடற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். உங்களுக்கு இது மனிதநேயமாகத் தெரிந்தால் நீங்கள் ஒரு வளர்ந்த குழந்தை. கம்பெனிக்கு இது விளம்பரம், இலவச சமூகசேவை, குப்பையை கிளியர் பண்ணுதல். அவருக்கு அது இலவச உணவு மற்றும் சமூகமாக்கல் (அதை அவர் தினமும் சற்று அவமானத்துடன் போய் நின்று வாங்க வேண்டும். அவருடன் அதைப் பகிர்ந்து கொள்வோர் ஏதோ ஒரு கூச்சத்துடன் சிரித்துக்கொண்டு உண்ண வேண்டும்.) 


நிபந்தனைக்கு உட்பட்ட நீதி என்றால் ஒரு வரைமுறை அமைத்துக்கொண்டு அறத்துடன் நடந்துகொள்வது - உதாரணத்துக்கு, ஒருவருக்கு குழந்தை இருக்காது, உறவுக்குள் ஒரு குழந்தை அனாதையாகி விடும், இவர் அக்குழந்தையை எடுத்து வளர்ப்பார். (கொடுக்கல் வாங்கல்) அவர் அதை ஒரு தியாகம் என்றும் கோரிக்கொள்வார். அல்லது நிறைய பணம் இருந்தால் தன்னுடைய பிற குழந்தைகளுடன் இக்குழந்தையையும் வளர்ப்பார். பணம் இல்லாவிட்டால் செய்ய மாட்டார். (நிபந்தனை) நீங்கள் எல்லாரும் அவ்வளவு பெரிய அறவாழிகள், நீதியாளர்கள் என்றால் ஏன் இத்தனை அனாதை இல்லங்கள் இருக்கின்றன? ஏன் இத்தனை பேர் பிச்சைக்காரர்களாக, கையேந்துவோராக இருக்கிறார்கள்? ஏன் நம் பொருளாதார அமைப்பே அசமத்துவத்தை ஏற்படுத்துவதாக இருந்தும் நாம் அதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம்? ஏனென்றால் நமக்கு நீதி / அறம் குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லை. ஆனால் நமக்கு அந்த முகமூடி தேவைப்படுகிறது


சரி வலதுகை கொடுத்ததை இடது கைக்குத் தெரியாமல் கொடுத்தவர்களும் உண்டே? ஆம் நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களும் சில நிபந்தனைகள் வைத்திருப்பார்கள். உதவி பெறுவதன் அவமான உணர்வை அதை அனுபவிப்பர்களே அறிவர். மேலும் கொடையாளர்களுக்கு அப்போது ஓரளவுக்கு பணவரவு இருக்கும், அல்லது தம் நண்பர்களிடம் கேட்டு வாங்கிகொடுப்பார்கள், அவர்களுக்கு அது ஒரு ஜிவ்வென்ற உணர்வைக் கொடுக்கும். தொடர்ச்சியாக கொடையளிப்பதன் பின் ஒரு தீவிரமான அகந்தையும் கழிவிரக்கமும் இருக்கிறது. சிலரிடம் பணமிருந்தாலும் கொடையளிக்காதது அவர்கள் ஒன்று சமூகமாக்கலில் விருப்பமில்லாத மூடுண்டவர்களாகவோ அதற்கான உளவியல் தேவை இல்லாதவர்கள் என்பதே.



என் நண்பர் ஒரு கதை சொன்னார். தமிழில் ரொம்பத் தீவிரமாக அறம், அறம், கருணை, அழகு, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என தழுதழுக்க எழுதும் ஒரு முக்கிய எழுத்தாளர். நண்பர் இன்னொரு நண்பரையும் அழைத்துக்கொண்டு இந்தஅன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழைஒருநாள் காலையில் அவரது வீட்டுக்குப் போய் பார்த்திருக்கிறார். அவரோஎப்படி என் அப்பாயின்மெண்ட் இல்லாம என்னைப் பார்க்க வரலாம்?” என்று கோபமாகக் கேட்டு வாசலோடே அனுப்பிவிட்டார். நண்பர் தான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே பல நாட்கள் ஆயின என்றார். ஆனால் அந்தஅன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்செய்ததும் சரிதானே? அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்க வேண்டா? அன்புக்கும் இல்லையோ அப்பாயின்மெண்ட்? அறத்துக்கும் இல்லையோ டைம் மேனேஜ்மெண்ட்? அவர் மனிதநேயமும் அழகும் பேரன்பும் ஒரு நீர்க்குமிழியில் பிரதிபலிக்கிற கதையையோ கவிதையையோ எழுதும் நேரத்தில் போய் வாசல் மணியை அடித்துநான் தான் மாது வந்திருக்கேன்என்றால் கடுப்பாக மாட்டாரா? அகத்தூண்டுதல் என்னவாவது? மனநிம்மதி என்னாவது? ஆனால் நீங்கள் என்னை அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் பார்க்க வந்தால் நான் உங்களை வாசலோடு திட்டி அனுப்ப மாட்டேன். என்னதான் பிஸியாக இருந்தாலும் உட்கார வைத்து அரைமணிநேரமாவது பேசி - வீட்டில் அப்போது அதற்கான வசதி இருந்தால் - தேநீர் அளித்து விட்டே அனுப்புவேன். ஏனென்றால் நான் மனிதநேயன் அல்ல. ஏனென்றால் நான் காருண்யத்தின் சமுத்திரம் அல்ல. ஏனென்றால் நான் அன்பின் பேராழி அல்ல. ஏனென்றால் நான் மனித சமூகத்தில் வாழும் ஒரு மிருகம். மிருகங்கள் பண்பானவை.ஒரு நாய் என் வீட்டுக்கு வந்தால் என்னுடைய நாய் அதை கண்ட இடத்தில் எல்லாம் முகர்ந்து பார்த்து சில குரைகள் குரைத்து, சில நேரங்கள் தன் பொம்மையை வைத்துக் கூட விளையாட அனுமதித்து வரவேற்றுஇந்த எல்லையைத் தாண்டி நீயும் வரக் கூடாதுஎன நிபந்தனைகள் போட்டு வரவேற்பதை பார்த்திருக்கிறேன். என்னுடைய நாய் அதுவே நீதி, மானுட அறம், அன்பின், அன்பின் பேரன்பு என்றெல்லாம் உரையாற்றி நான் பார்த்ததில்லை. அடிப்படையான சமூகமாக்கல் நெறி எனும் அளவிலே நாங்கள் இதை செய்கிறோம்.  


நீங்கள் மட்டுமே ஒரு குருவியைக் காப்பாற்றினாலோ அழும் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கித் தந்தாலோ அதை அறம் என்று சொல்கிறீர்கள். நானும் பிற விலங்குகளும் அதை எளிய சமூகமாக்கலாக, ஒத்திசைவாகவே பார்க்கிறோம்



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...