Skip to main content

பிறழ்வின் பாவக்கணக்கு


நான் குடும்பநல நீதிமன்ற அனுபவங்களை எழுதும் போது எப்போதும் ஆண்களின் தரப்பையே முன்னிலைப்படுத்துகிறேன் என் சில தோழிகள் வருத்தம் தெரிவித்ததால் நான் அண்மையில் சந்தித்த ஒரு தோழி சொன்ன கதையையும் பகிர்கிறேன். அவர் ஒரு பெண் என்பதால் கூச்சப்பட்டு என்னிடம் மொத்த கதையையும் சொல்லவில்லை என்பதால், நான் கற்பனை கிற்பனை எல்லாம் மிக்ஸ் செய்வது இல்லையென்பதால் இது சுருக்கமாகவே இருக்கும். இப்போது எழுத்தாளர்களின் ஆளுமைப்பிறழ்வு, சறுக்கல், பாலியல் குற்றம் பற்றின விவாதம் நடப்பதால், வக்கீல்களும் எழுத்தாளர்களே என சில நண்பர்கள் சொல்லுவதால் இக்கதை இங்கு பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்.
இத்தோழி அண்மையில் தன் கணவனை விட்டுப்பிரிந்தவர். குழந்தையையும் இவரே வளர்க்கிறார். படித்தவர். ஆனால் நல்ல வருமானமுள்ள வேலை இல்லை. ஏதோ ஒரு சிறிய தொகைக்கு ப்ரீலேன்ஸிங் பண்ணி அன்றாட செலவுகளை கவனிக்கிறார். காதல் திருமணம் என்பதால் பெற்றோருடன் ஆரம்பத்தில் இருந்தே மோதல். அவர்களிடம் திரும்ப சென்று உதவி கேட்கவும் இவருக்கு மனமில்லை. குடும்ப நல நீதிமன்றத்துக்கு வரும் இவர் ஒரு வக்கீலை நாடிப் போகிறார். வக்கீல் முதலில் நான் ஜெய்பீம் சூர்யாவைப் போல, எனக்கு எல்லாமே ஒடுக்கப்பட்டோரை காப்பாற்றுவது தான், உங்கள் கணவனை இழுத்து வந்து மண்டியிட வைக்கிறேன், நீதி பெற்றுத் தருகிறேன், மாதம் 30,000 ஆவது ஜீவனாம்சம் வாங்கித்தருகிறேன் என பில்ட் அப் கொடுத்து சில மாதங்கள் வழக்கை ஓட்டிவிட்டு “சரி நீங்க இன்னும் பீஸ் கொடுக்கலையேம்மா” என இழுத்திருக்கிறார். “நீங்க கேட்கவே இல்லையே சார், நானும் வாழ்க்கையை நடத்த ரொம்ப சிரமப்படுகிறேனே.” “அது எனக்குத் தெரியுமேம்மா. அதுக்காகத் தான் போராட வந்திருக்கேன். ஆனா எனக்கும் ஒரு பீஸ் இருக்குதே. அதை நீங்க கொடுத்துதான் ஆகணும்.” தோழி ஒரு கணம் ஜெய்பீமில் சூர்யா பீஸே கேட்கலையே என குழம்புகிறார். சுதாரித்துவிட்டு சரி எவ்வளவு தான் வேணும் எனக் கேட்கிறார். நம் ஜெய்பீம் சூர்யாவோ ஒரு லட்ச ரூபாய் எடுத்து வையுங்க என்கிறார். இவரிடம் அக்கவுண்டில் பத்தாயிரம் தான் இருக்கிறது. “சரி பரவாயில்ல, நான் ஹெல்ப் பண்றேன்” என்று சொல்லிட தோழி ‘ஹப்பாடா’ என மூச்சுவிடுகிறார். ஆனால் அடுத்தடுத்த மாதங்கள் நம் வக்கீல் கட்டணம் கேட்டு அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே போகிறார். ஒரு கட்டத்தில் என்னால் சத்தியமா முடியல, முடிஞ்ச தொகையை கொடுத்த்திர்ரேன் என்று தோழி ஜீபே பண்ணிவிடுகிறார். வக்கீல் அவரிடம் வந்து நீங்க எனக்குத் தர வேண்டிய ரெண்டு லட்சத்தில 10% கூட இன்னும் தரல. என்று முகத்தை பக்கத்தில் போய் காட்டி மிரட்டியிருக்கிறார். என்ன ஜெய்பீம் சூர்யா இப்படி பேசுகிறாரே என தோழி மீண்டும் நெஞ்சைப் பிடித்துக் கொள்ள வக்கீல் “சரி பரவாயில்லம்மா, என்னைத் தேடி ஹெல்ப்புன்னு வந்திட்டீங்க. உங்களை கைவிடவும் மனசில்ல. எனக்கும் பீஸ் வாங்காமல் அடுத்து வேலை பண்ண முடியாது. நீங்க ஒண்ணு பண்ணுங்க, என் கூட வந்திருங்க, நான் உங்களைப் பார்த்துக்கிறேன்” என்று ஒரே போடாக போட்டுவிட்டார். அவர் சொல்லியதன் பொருளென்ன என்று தோழிக்கு விளங்கவே பத்து நிமிடம் எடுத்திருக்கிறது. தோழி அதற்கு பதில் சொல்லாமல் வந்துவிட “நான் கேட்ட பீஸ் என்னாச்சு?” எனக் கேட்டு தினமும் போனில் தொந்தரவு. அவர் இப்படி ஒரு வக்கீலே வேண்டாம் என கடைசியில் தப்பித்து ஓடி வந்துவிட்டார்.
இந்த வக்கீல் ஏன் இப்படி நடந்து கொண்டார் என எனக்கு குழப்பமாக இருந்தது. இப்போது எழுத்தாளன் என்றால் அவனுக்குள் குற்றம் செய்யும் மனநிலை இருக்கும் தானே, அவன் அடிப்படையில் பிறழ்ந்தவன் தானே என்று சில நண்பர்கள் ஒரு பக்கமும், வக்கீலும் எழுத்தாளன் தானே என வேறு சில நண்பர்கள் இன்னொரு பக்கமும் வாதிடுவதைப் பார்க்கும் போது எனக்கு விடை கிடைத்து விட்டது: இந்த வக்கீல் ஒரு உன்னத படைப்பாளியாகவும் வக்கீலாகவும் ஒரே சமயம் இருந்திருக்கிறார்! உன்னத படைப்பாளி என்றால் கையைப் பிடித்து இழுப்பார், வக்கீல் என்றால் பீஸ் கேட்பார். இவர் ரெண்டுமே என்பதால் பீஸாக கையைப் பிடித்து இழுத்துவிட்டார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...