Skip to main content

வக்கீலும் எழுத்தாளன் தானோ?



பாவேல் சக்தி தன் பதிவில் ஒரு வக்கீல் எழுதும் வழக்குரைகளும் எழுத்து தானே என்கிறார். வக்கீல்கள் எப்படி ஒரு கதையை படிப்படியாக உருவாக்குவார்கள் என்று நேரடியாகவே பார்த்திருக்கிறேன்; இந்த சம்பவம் வந்து நம்பத்தகுந்ததாக ஆவதற்கு அதற்கு முன்னால் வழக்குரையில் என்னென்ன காட்சிகளை புனைந்து சரியான கால ஒழுங்கில் அடுக்கி வைக்க வேண்டும் என அவர்கள் சொல்லும் போது என்னடா நமக்கே நாவலெழுதும் craft பற்றி பாடமெடுக்கிறார்களே என எனக்குத் தோன்றியிருக்கிறது. இந்த கேஸ்கட்டில் நீங்கள் ஒரு want, ஒரு crisis, சில திருப்பங்கள், ஒரு சில சிக்கல்கள், ஒரு தத்துவம் (values) சேர்த்து சரியான முடிவையும் அளித்தால் அது ஒரு நாவலாகி விடும் தான், நான் மறுக்கவில்லை. ஆனால் வக்கீல்கள் அதற்கு மெனெக்கெட மாட்டார்கள். ஏன் என்று சொல்கிறேன்.
அரைகுறையாக ஒரு வழக்குரையை எழுதியே (அதில் முக்கால்வாசியை நம்மை எழுத வைப்பார்கள்) அவர்கள் சில லட்சங்களை சம்பாதித்து விடுவார்கள். நாவல் எழுதி ராயல்டியாக பத்தாயிரம் வாங்குவதே பெரிய காரியம். பணம் அதில் இல்லையென்பதால், வக்கீல்கள் 99% நான் பார்த்தவரையில் தூங்கி எழுந்ததில் இருந்து உறங்கும் வரை யார் முன்னாலாவது தோன்றி பணம் கொடு, பணம் கொடு என மிரட்டும் பூதங்கள் என்பதால், பணம் வராத செயலொன்றில் ஈடுபட அவர்களுக்கு மன ஊக்கம் இருப்பதில்லை, அவர்கள் அத்திறனையும் வளர்த்துக் கொள்ள மாட்டார்கள், அதனாலே அவர்கள் கலைஞனும் ஆவதில்லை. ஒருவேளை நாளையே சென்னையை சேர்ந்த வக்கீல்கள் நாவலாசிரியர்கள் ஆனால் 500 பக்க நாவலுக்கு 10 லட்சத்துக்கு குறைவாக ஒரு பைசா ராயல்டியாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். என்னது 10 லட்சமா என வாயைப் பிளக்காதீர்கள். அந்த நாவல் ஒரு பிரதி கூட விற்கவில்லை என்றாலும் கேட்பார்கள்.
ஒரு வழக்குரைக்கு 80 பக்கங்களுக்கு ஒன்றரை லட்சம் என்பதே சென்னையில் உள்ள ரேட்டு. அதை நீங்கள் ஆறாகப் பெருக்கினால் நான் சொன்ன தொகை வந்துவிடும். (சில அப்பாவி வக்கீல்கள் மட்டுமே இதில் விதிவிலக்கு.) சில்லறை காசுக்கு புனைவெழுத்தாளர்கள் நாம் செய்யும் அதே வேலையை வக்கீல்கள் சற்று மோசமான அமைப்பில், மோசமான மொழியில் எழுதி பல லட்சங்களை வருடத்திற்கு சுலபத்தில் சம்பாதிக்கிறார்கள் என்பதே விசித்திரம் (அதில் ஆயிரெத்தெட்டு இலக்கணப் பிழைகள் வேறு). கடந்த மாதம் நான் வழக்காடு மன்றத்திற்கு சென்றிருந்த போது அங்கு பழுப்பு நிறத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கேஸ்கட்டுகளை ஒரு அரசு ஊழியர் எடுத்து தூசுதட்டி அங்க வகை பிரித்து ஒரு பெஞ்சில் அடுக்கி வைப்பதைப் பார்த்தேன். மதிப்பிழந்து போய் விட்ட இந்த தாள்களை வைத்து நம் வக்கீல்கள் மொத்தமாக எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார்கள் என்று நான் வியந்தேன். அவை ஒட்டுமொத்தமாக ஒரு அபத்தக் குவியல் என்றாலும் அவற்றுக்கு உள்ள பணமதிப்பு ஆச்சரியப்பட வைக்கக் கூடியது.

நம் வக்கீல்களிலும் நடைமுறை அறிவுகுறைவானவர்கள் இருப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பெரும்பாலான வக்கீல்கள் நம்மை விட அதிபுத்திசாலிகள். எழுதி சம்பாதிப்பதை விடுங்கள், காட்சி கொடுத்து சம்பாதிப்பதே வக்கீல் தொழிலில் தான் சாத்தியம். Appearance fees என ஒன்றிருக்கிறது. ஒரு சென்னை வக்கீல் பத்து நிமிடங்கள் நீதிபதி முன்னால் போய் நின்று சில வார்த்தைகள் சொல்லிவிட்டு கிளம்பினால் அதற்கு 2000 ரூ குறைந்தது வாங்கி விடுகிறார். வேறெந்த தொழிலில் இது சாத்தியப்படும் யோசியுங்கள். நானெல்லாம் ஒருநாள் முழுக்க வகுப்பில் நின்று நான்கு மணிநேரங்கள் கத்திப் பேசினால் மட்டுமே 2000 ரூ வாங்க முடியும். அதற்கு வேறு எட்டு மணிநேரங்கள் படிக்க வேண்டும். இங்கு யுவர் ஆனர், மை கிளயண்ட் என்று தப்புத்தப்பான ஆங்கிலத்தில், வரிக்கு ஐம்பத்தெட்டு இலக்கணப்பிழைகளுடன் பத்து வார்த்தைகள் பேசினால் போதும். கடந்த வாரம் ஒரு ஊடக நண்பர் ஒரு கதை சொன்னார். அவருக்கு ஒரு ஆவணம் தேவைப்பட்டிருக்கிறது. அதை நீதிமன்றத்தில் மனு போட்டு வாங்க வேண்டும். ஒரே ஒரு தாளில் எழுதி போட்டால் போதும். அவரது நண்பர் ஒருவர் வக்கீலாக இருக்கிறார் என்பதால் நாடியிருக்கிறார். அவர் இதை செய்துவிட்டு 30,000 ரூ கட்டணமாக வாங்கிவிட்டார். ஒரே ஒரு பக்கம் எழுதிக் கொடுத்ததற்கு இவ்வளவு பணமாடா என்று கேட்டால் “ஆமாடா இங்கேல்லாம் இதுதான் நடைமுறை, நீங்கிறதுனாலே 30,000. வேற யாராவதுன்னா 50,000” என்று ஒரு போடு போட்டிருக்கிறார். இந்த உலகிலேயே மிக காஸ்டிலியான எழுத்தாளர்கள் என்றால் அது நம்மூர் வக்கீல்கள் தாம். 

ஆனால் கேட்டால் பஞ்சப்பாட்டு பாடுவார்கள். பஞ்சப்பாட்டு பாடுவதில் நம் பதிப்பாளர்களை விட்டால் வக்கீல்கள் தான் முன்னோடிகள்.

அதனால் பாவேல் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். வக்கீல்களே சிறந்த எழுத்தாளர்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...