Skip to main content

தொப்பை ரகசியம்

 எப்படீங்க தொப்பையை குறைக்கிறது என ஒரு நண்பர் கேட்டார். எனக்கும் தெரியவில்லை. சொல்லப் போனால் யாருக்கும் தெரியாது. அறிவியல் என்ன சொல்லுகிறதென்றால் வயிற்றில் திரளும் கொழுப்பானது எடை குறைப்பின் போது கடைசியில் தான் போகும். அது உண்டியல் காசு, தங்கம் போல. ரொம்ப தேவைப்பட்டால் தான் உடைப்போம், அடகு வைப்போம் என்பது உடலின் முடிவு. அதனால் தனியாக வயிற்றுக்கு பயிற்சி செய்வது பெரிதாக உதவாது. எடை குறைய குறைய உடலின் வடிவம் மாறிக்கொண்டே வருவதைப் பார்ப்போம். எங்கு முதலில் கொழுப்பு சேர்ந்ததே அதுவே கடைசியாகப் போகும் என அறிஞர்கள் சொல்கிறார்கள். அதாவது எடையேற்றமும் எடைகுறைப்பும் ஒன்றுக்கு மற்றொன்று தலைகீழாக நடக்கும். அதனால் பொறுமை அவசியம் - ஹீரோ அடியாட்களில் ஒவ்வொருவராக அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் வருவதைப் போல நாம் கடைசியில் தொப்பையிடம் வந்து "வாடா இப்போ" என சொல்வோம். ஒரு விளையாட்டு என நினைத்தால் அது ஜாலியாக இருக்கும்.


நான் என்ன செய்தேன் என்று கேட்டால் இரண்டு விசயங்களை சொல்வேன். இது அனேகமாக எல்லாருக்கும் உதவும்:
1) ஒருவேளை தான் உணவு - 18 மணிநேர உண்ணாநோன்பு.
2) விரதத்தை இரண்டு ஸ்பூன் நெய் சாப்பிட்டு முடிப்பது. அடுத்து இரவுணவுக்கு காய்கறி - புரோட்டீன் + நல்ல கொழுப்பு - மாவுச்சத்து ஆகியவற்றை 60-30-10 எனும் விகிதப்படி சாப்பிட்டேன். ஒரு பெரிய குவளை நிறைய வேகவைத்த காய்கறி என்றால் சிறிய கிண்ணத்தில் வேக வைத்த சிக்கன் / மீன் / இரண்டு மூன்று முட்டைகள் போன்ற உணவு. கூடவே கொஞ்சம் சீஸ் அல்லது ஒரு ஸ்பூன் வெண்ணெய். அடுத்து மற்றொரு சிறிய கிண்ணத்தில் வேகவைத்து நொதிக்க வைக்கப்பட்ட சிறுதானிய உணவு. கூடவே தயிர். ஒருநாள் சிறுதானியம் வேண்டாம் என்றால் 150 கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கு. வாரம் மூன்று நாட்கள் இப்படி எனில் அடுத்த 3-4 நாட்கள் இந்த மாவுச்சத்தை தவிர்த்து விட்டு புரதத்தை அதிகமாக எடுத்துக் கொள்வது (150 கிராம் சிக்கன் / 200 கிராம் மீன் / ஐந்து முட்டைகள்). கூடவே தயிரையும் அதிகமாக்குவது. இது ஒரு சமச்சீரான உணவு. இதில் உடம்புக்கு தேவையான புரதம், காய்கறியில் இருந்து கிடைக்கும் சத்துக்கள், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, கொஞ்சம் மாவுச்சத்து, நொதித்த உணவில் இருந்து நல்ல கிருமிகள் என ஏராளமான பயன்கள் உள்ளன. முக்கியமாக சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏகத்துக்கு எகிறாது. இதற்கும் சர்க்கரை நோய்க்கும் சம்மந்தம் இல்லை. இயல்புடல் கொண்டவர்களுக்கும் 70% மாவுச்சத்து + 30% புரோட்டீன் என சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும். (பின் இன்சுலில் சுரந்து அடங்கும்). இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் பெருங்குடலில் உள்ள நல்ல கிருமிகளும் இறந்து போகின்றன. இதெல்லாம் சேர்ந்தே நம் உடலை காங்கிரஸ் கட்சியைப் போல ஆக்கி விடுகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...