Skip to main content

நம்மூர் ஹக்கீமிக்கள்




மொரோக்காவில் ஒரு சட்டம் இருக்கிறது போலும் - விவாகரத்தின் போது கணவனின் சொத்தின் பாதி மனைவிக்கு போய் விடும். அதில் இருந்து தப்பிக்கும் நோக்கிலோ என்னவோ அந்நாட்டு கால்பந்தாட்ட வீரர் அச்ரப் ஹக்கீமி தன் சொத்துக்களை தம் அம்மா பெயரில் எழுதி வைத்துவிட்டார். அவரது மனைவி விவாகரத்து கோரிப் போனால் இந்த செய்தி தெரிய வர அதிர்ச்சியாகி விட்டார். இதைப் பல நண்பர்களும் என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்லிக்கொள்வது இந்தியாவில் இந்த சட்டத்தை கொண்டு வர காங்கிரஸ் அரசு 2010-11ஆம் கட்டத்தில் முயன்றது, ஆனால் பா.சிதம்பரம் உள்ளிட்டோர் முயன்றதால் கைவிட்டது என்பதே. 2015இல் மீண்டும் பெண்ணிய குழுவினர் மோடியை சந்தித்து இச்சட்டத்தின் 'பல பயன்களை' விளக்கி இதை கொண்டு வர தூண்டினர். ஆனால் அவர்களை அடித்து பத்தி விட்டார். மோடி செய்ததில் எனக்குப் பிடித்த ஒரே காரியம் இது தான். ஆனால் இந்த சட்டம் வராமல் போனது பெண்களை விட வக்கீல்களுக்கே பெருத்த நட்டம் - செட்டில்மெண்டிலே 10% வாங்குபவர்கள் சொத்தில் வாங்காமலா இருப்பார்கள்? 10 கோடி வரக்கூடிய சொத்தில் 10% எவ்வளவு வரும்? சரி அவ்வளவு தர மாட்டேன் என்றால் கூட 3-5% வாங்காமல் டீலிங்கை முடிப்பார்களா? ம்ஹும்! ஆனால் என்ன பிரச்சினை என்றால் இவர்களுடைய மகன்களும் பாதிக்கப்படும் போது இவர்களுக்கு டவுசர் கழன்று போகும். அப்போதுதான் வலி புரியும்.


ஆனால் இச்சட்டத்தை இப்போதுள்ள ஜீவனாம்ச சட்டத்தின் ஒரு கொடூரமான வடிவம் என்றே கருத வேண்டும் - ஜீவனாம்சம் என்பது படிப்பறிவில்லாத, வேலைக்கு போய் சம்பாதிக்க வழியில்லாத பெண்களுக்கு நியாயமாக தேவைப்படுவது. ஆனால் அதை அதிகமாக பெறுவது ஆண்களுக்கு சமமாக படித்து வேலைக்கும் செல்லும் பெண்களே என்பது எதார்த்தம். அதற்கு சட்டம் கூறும் நியாயம் விவாகரத்தின் பின்பும் அப்பெண்ணின் வாழ்க்கைத் தரம் குறைந்து விடக் கூடாது என்பது. ஏன் அதில் சட்டத்துக்கு அவ்வளவு அக்கறை? ஏன் ஆணின் வாழ்க்கைத் தரம் பற்றி அக்கவலை இல்லை? வேலை போனால் நம் வாழ்க்கைத்தரம் தவிடுபொடியாகிறதே? நிறைய பேர் தற்கொலை பண்ணுகிறார்களே. ஏன் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் இவர்களுக்கு அரசோ தொழில்நிறுவனமோ சம்பள இழப்பீட்டை மாதாமாதம் அளித்து வாழ்க்கைத்தரம் மாறாமல் பார்க்க வேண்டும் எனக் கோருவதில்லை? ஏன் மனைவியைப் பற்றி மட்டும் ஒரு குடும்ப நலச் சட்டம் கவலைப்படுகிறது? ஏனென்றால் எக்காரணம் கொண்டு அம்மனைவி குடும்ப உறவுக்குள் நீடிக்கும்நிலைவரக் கூடாதாம்இன்னும் நேரடியாக சொல்வதென்றால் மனைவிக்கு சிறு மனக்கசப்பு ஏற்பட்டாலும் அவர் குடும்பத்தை உடைத்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டுமாம். ‘வெளியே வந்து நாம் வேலை பார்த்து கஷ்டப்படணுமே, இப்போ கணவன் சம்பளத்தில் வசதியாக வாழ்கிறோமேஎனும் எண்ணத்தில் அவர்கள் மணவாழ்க்கைக்குள் நீடிக்கலாகாதாம்! ஏன் நீடித்தால் என்னவாம்? குறைந்த நஷ்டத்தை விடுத்து அதிக லாபத்தை நாடுவதும், சகிப்பதும் தானே மனித வாழ்க்கை? வேறொன்றுமில்லை, இப்பெண்கள் வெளியே வந்தாலே அதிகமாக துய்ப்பில், பண்ட நுகர்வில் ஈடுபடுவார்கள், தாராளவாத சந்தை வளரும். ஆக, இது முழுக்க முழுக்க ஒரு பொருளாதார சதித்திட்டம் மட்டுமே. பெண்ணுக்கு கணவனின் சொத்தில் பாதியைக் கொடுத்தாலும் அவள் அதை வைத்து கூடுதலாக செலவு பண்ணுவாள், எதாவது ஒரு வியாபாரத்தை கூட ஆரம்பிக்கலாம், இதுவும் சந்தைக்கு நல்லதே. ஆனால் சட்டம் இந்த சந்தைப் பொருளாதார வளர்ச்சி நோக்கத்தை ஒரு சமத்துவ, தர்மம், நியாயம் சார்ந்த ஒரு உயர்நோக்கமாக சித்தரித்து நாடகம் போடுகிறது. சில வக்கீல்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் இதில் பொருளாதார லாபம் உள்ளதால் அவர்கள் இச்சட்டத்தை ஆதரித்து ஜால்ரா அடிக்கிறார்கள். சோழியன் குடுமி சும்மாவா ஆடும் என்பது வேறு யாரையும் விட இவர்களுக்கே அதிகம் பொருத்ந்தும்.


 உலகம் முழுக்க இதுவே நடக்கிறது. நல்லவேளை இந்தியாவில் இச்சட்டம் இன்னும் வரவில்லை


முற்போக்கு எனும் பெயரில் இயற்றப்படும் இம்மாதிரி போலி 'சமத்துவ' அசமத்துவ சட்டங்கள் மக்களை பல அபத்தங்களை செய்ய வைக்கிறது: நியாயமாக சம்பாதிப்பதைக் கூட சொந்த பெயரில் வைத்துக்கொள்ள விடாமல் செய்கிறது. கறுப்பு பணப்பரிமாற்ற வளர்ச்சிக்கு காரணமாகிறது. எப்போதும் சொந்த மனைவியை சந்தேகிக்க செய்கிறது


கடந்த ஆண்டு வட இந்தியாவை, பெங்களூரில் வாழ்ந்துவந்த என் தோழி ஒருவர் வணிகரான தன் கணவரை விவாகரத்து பண்ணப் போவதாக சொன்னார். அதற்காக ஆவேசமாக மும்பைக்கு போனார். போனவர் அதன் பிறகு சட்டென முடிவை மாற்றிக்கொண்டார். என்ன காரணம்? கணவரின் சொத்துக்கள் வரி ஏய்ப்புக்காக உறவினர்கள் பெயரில் பதிவாகி உள்ளதாம். அவருடைய பணமும் வங்கிக்கணக்கில் இல்லை. அதனால் அவரிடம் இருந்து இப்போது விவாகரத்து வாங்கினால் அஞ்சு காசு பேறாது என்று அவர் தெளிவாகப் பேசினார். கணவனிடம் சமாதானமாக போய் விட்டார். மொரோக்கா கால்பந்தாட்ட வீரர்களை விட பெரிய கால்பந்தாட்டக்காரர்கள், பந்தை எதிரணி பக்கம் திரும்பி விடாமல் வளைத்து வளைத்து கொண்டு போகும் திறமைசாலி ஆண்கள் நம் ஊரில் நிறையவே இருக்கிறார்கள். என்ன அவர்கள் வணிகர்கள், மாத சம்பளக்காரர்கள் அல்ல!


ஓம் வேலூர் இப்ராஹிமாய நமஹ


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...