Skip to main content

நம்மூர் ஹக்கீமிக்கள்




மொரோக்காவில் ஒரு சட்டம் இருக்கிறது போலும் - விவாகரத்தின் போது கணவனின் சொத்தின் பாதி மனைவிக்கு போய் விடும். அதில் இருந்து தப்பிக்கும் நோக்கிலோ என்னவோ அந்நாட்டு கால்பந்தாட்ட வீரர் அச்ரப் ஹக்கீமி தன் சொத்துக்களை தம் அம்மா பெயரில் எழுதி வைத்துவிட்டார். அவரது மனைவி விவாகரத்து கோரிப் போனால் இந்த செய்தி தெரிய வர அதிர்ச்சியாகி விட்டார். இதைப் பல நண்பர்களும் என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்லிக்கொள்வது இந்தியாவில் இந்த சட்டத்தை கொண்டு வர காங்கிரஸ் அரசு 2010-11ஆம் கட்டத்தில் முயன்றது, ஆனால் பா.சிதம்பரம் உள்ளிட்டோர் முயன்றதால் கைவிட்டது என்பதே. 2015இல் மீண்டும் பெண்ணிய குழுவினர் மோடியை சந்தித்து இச்சட்டத்தின் 'பல பயன்களை' விளக்கி இதை கொண்டு வர தூண்டினர். ஆனால் அவர்களை அடித்து பத்தி விட்டார். மோடி செய்ததில் எனக்குப் பிடித்த ஒரே காரியம் இது தான். ஆனால் இந்த சட்டம் வராமல் போனது பெண்களை விட வக்கீல்களுக்கே பெருத்த நட்டம் - செட்டில்மெண்டிலே 10% வாங்குபவர்கள் சொத்தில் வாங்காமலா இருப்பார்கள்? 10 கோடி வரக்கூடிய சொத்தில் 10% எவ்வளவு வரும்? சரி அவ்வளவு தர மாட்டேன் என்றால் கூட 3-5% வாங்காமல் டீலிங்கை முடிப்பார்களா? ம்ஹும்! ஆனால் என்ன பிரச்சினை என்றால் இவர்களுடைய மகன்களும் பாதிக்கப்படும் போது இவர்களுக்கு டவுசர் கழன்று போகும். அப்போதுதான் வலி புரியும்.


ஆனால் இச்சட்டத்தை இப்போதுள்ள ஜீவனாம்ச சட்டத்தின் ஒரு கொடூரமான வடிவம் என்றே கருத வேண்டும் - ஜீவனாம்சம் என்பது படிப்பறிவில்லாத, வேலைக்கு போய் சம்பாதிக்க வழியில்லாத பெண்களுக்கு நியாயமாக தேவைப்படுவது. ஆனால் அதை அதிகமாக பெறுவது ஆண்களுக்கு சமமாக படித்து வேலைக்கும் செல்லும் பெண்களே என்பது எதார்த்தம். அதற்கு சட்டம் கூறும் நியாயம் விவாகரத்தின் பின்பும் அப்பெண்ணின் வாழ்க்கைத் தரம் குறைந்து விடக் கூடாது என்பது. ஏன் அதில் சட்டத்துக்கு அவ்வளவு அக்கறை? ஏன் ஆணின் வாழ்க்கைத் தரம் பற்றி அக்கவலை இல்லை? வேலை போனால் நம் வாழ்க்கைத்தரம் தவிடுபொடியாகிறதே? நிறைய பேர் தற்கொலை பண்ணுகிறார்களே. ஏன் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் இவர்களுக்கு அரசோ தொழில்நிறுவனமோ சம்பள இழப்பீட்டை மாதாமாதம் அளித்து வாழ்க்கைத்தரம் மாறாமல் பார்க்க வேண்டும் எனக் கோருவதில்லை? ஏன் மனைவியைப் பற்றி மட்டும் ஒரு குடும்ப நலச் சட்டம் கவலைப்படுகிறது? ஏனென்றால் எக்காரணம் கொண்டு அம்மனைவி குடும்ப உறவுக்குள் நீடிக்கும்நிலைவரக் கூடாதாம்இன்னும் நேரடியாக சொல்வதென்றால் மனைவிக்கு சிறு மனக்கசப்பு ஏற்பட்டாலும் அவர் குடும்பத்தை உடைத்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டுமாம். ‘வெளியே வந்து நாம் வேலை பார்த்து கஷ்டப்படணுமே, இப்போ கணவன் சம்பளத்தில் வசதியாக வாழ்கிறோமேஎனும் எண்ணத்தில் அவர்கள் மணவாழ்க்கைக்குள் நீடிக்கலாகாதாம்! ஏன் நீடித்தால் என்னவாம்? குறைந்த நஷ்டத்தை விடுத்து அதிக லாபத்தை நாடுவதும், சகிப்பதும் தானே மனித வாழ்க்கை? வேறொன்றுமில்லை, இப்பெண்கள் வெளியே வந்தாலே அதிகமாக துய்ப்பில், பண்ட நுகர்வில் ஈடுபடுவார்கள், தாராளவாத சந்தை வளரும். ஆக, இது முழுக்க முழுக்க ஒரு பொருளாதார சதித்திட்டம் மட்டுமே. பெண்ணுக்கு கணவனின் சொத்தில் பாதியைக் கொடுத்தாலும் அவள் அதை வைத்து கூடுதலாக செலவு பண்ணுவாள், எதாவது ஒரு வியாபாரத்தை கூட ஆரம்பிக்கலாம், இதுவும் சந்தைக்கு நல்லதே. ஆனால் சட்டம் இந்த சந்தைப் பொருளாதார வளர்ச்சி நோக்கத்தை ஒரு சமத்துவ, தர்மம், நியாயம் சார்ந்த ஒரு உயர்நோக்கமாக சித்தரித்து நாடகம் போடுகிறது. சில வக்கீல்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் இதில் பொருளாதார லாபம் உள்ளதால் அவர்கள் இச்சட்டத்தை ஆதரித்து ஜால்ரா அடிக்கிறார்கள். சோழியன் குடுமி சும்மாவா ஆடும் என்பது வேறு யாரையும் விட இவர்களுக்கே அதிகம் பொருத்ந்தும்.


 உலகம் முழுக்க இதுவே நடக்கிறது. நல்லவேளை இந்தியாவில் இச்சட்டம் இன்னும் வரவில்லை


முற்போக்கு எனும் பெயரில் இயற்றப்படும் இம்மாதிரி போலி 'சமத்துவ' அசமத்துவ சட்டங்கள் மக்களை பல அபத்தங்களை செய்ய வைக்கிறது: நியாயமாக சம்பாதிப்பதைக் கூட சொந்த பெயரில் வைத்துக்கொள்ள விடாமல் செய்கிறது. கறுப்பு பணப்பரிமாற்ற வளர்ச்சிக்கு காரணமாகிறது. எப்போதும் சொந்த மனைவியை சந்தேகிக்க செய்கிறது


கடந்த ஆண்டு வட இந்தியாவை, பெங்களூரில் வாழ்ந்துவந்த என் தோழி ஒருவர் வணிகரான தன் கணவரை விவாகரத்து பண்ணப் போவதாக சொன்னார். அதற்காக ஆவேசமாக மும்பைக்கு போனார். போனவர் அதன் பிறகு சட்டென முடிவை மாற்றிக்கொண்டார். என்ன காரணம்? கணவரின் சொத்துக்கள் வரி ஏய்ப்புக்காக உறவினர்கள் பெயரில் பதிவாகி உள்ளதாம். அவருடைய பணமும் வங்கிக்கணக்கில் இல்லை. அதனால் அவரிடம் இருந்து இப்போது விவாகரத்து வாங்கினால் அஞ்சு காசு பேறாது என்று அவர் தெளிவாகப் பேசினார். கணவனிடம் சமாதானமாக போய் விட்டார். மொரோக்கா கால்பந்தாட்ட வீரர்களை விட பெரிய கால்பந்தாட்டக்காரர்கள், பந்தை எதிரணி பக்கம் திரும்பி விடாமல் வளைத்து வளைத்து கொண்டு போகும் திறமைசாலி ஆண்கள் நம் ஊரில் நிறையவே இருக்கிறார்கள். என்ன அவர்கள் வணிகர்கள், மாத சம்பளக்காரர்கள் அல்ல!


ஓம் வேலூர் இப்ராஹிமாய நமஹ


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...