Skip to main content

செக் லிஸ்ட்




இன்று ஏராளமானோர் அரசியல் விவாதங்களை யுடியூப் சேனல்கள் வழியாக பின் தொடர்கிறார்கள் என்று அறிவேன். குறிப்பாக இளைஞர்கள். அவர்கள் செய்தி வாசிப்பதையோ செய்தி சானல்கள் வழி கேட்பதையோ விட ‘செய்தி விவாத சேனல்கள்’ வழி அறிவதையே விரும்புகிறார்கள். இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள நிலைதான் என்பதை ஒரு கல்வியாளனாக நன்கறிவேன். இந்த பின்னணியில் தான் ‘வார் ரூம்’ எனப்படும் போலி செய்தி பரப்பாளர்கள் கட்சிகளால் பணம் கொடுத்து அமர்த்தப்படுகிறார்கள். அவர்களைக் கையாளும் தரகர்களும் உருவாகி உள்ளார்கள். இவர்களுடைய இடுபணி ஒரு கதையாடலை உருவாக்குவது (திமுக ஊழல் கட்சி, பாஜக முன்னேறி வருகிறது, இந்த குற்றவாளி நிஜத்தில் நல்லவர், அவர் மீது பொய்ப் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன, இந்த கொலையே அடிப்படையில் ஒரு நாடகம், அவர் தானாகவே ….) எனக்கு மதன் மீதுள்ள ஆர்வம் அவர் இவர்களில் சிலரையாவது அம்பலப்படுத்தி உள்ளார், அவர் தானும் இத்தகைய வார் ரூம் ஒன்றில் இருந்தவரே என ஒப்புக்கொள்வதாலே (அவர் இப்போதும் யாரோ ஒருவரின் ஊதிய பட்டியலில் இருப்பதாகவே எண்ணுகிறேன்). சவுக்கு, மாதேஷ், பீலிக்ஸ், முக்தார், மணி என ஏராளமானோர் அம்பலப்பட்டு வந்துள்ள நிலையில் நான் இப்போது இந்த சேனல்களில் பேசுகிற யாரையும் நம்புவதில்லை என்பதால் ஒரு செக் லிஸ்டை உருவாக்கி உள்ளேன். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்:
1) ஒரு அரசியல் சேனலில் திரும்பத் திரும்ப ஒருவரே விருந்தாளராக அழைக்கப்பட்டால் அவரும் அந்த சேனல் நிர்வாகிகளும் கூட்டுக்களவாணிகள்.
2) ஒரு அரசியல் விமர்சகர் பயங்கரமாக கண்களை உருட்டி, குரலில் ஏற்றத்தாழ்வுகளுடன் நாடகீயமாக உணர்ச்சிப்பெருக்குடன் பேசினால் அவர் ஒரு போலி. விரலை உயர்த்தி எதையாவது சொன்னாலே ஒரு புன்னகையுடன் நகர்ந்துவிட வேண்டும்.
3) எந்த பின்னணியும் தெரியாத ஒருவர் ‘மூத்த பத்திரிகையாளர்’ எனும் அடையாளத்துடன் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டால் கவனம். ஏனென்றால் அவரது பின்னணியின்மை ஒரு களங்கமின்மையை கட்டுவிக்க உதவுகிறது. அதை வைத்து அவரை நம் மனத்தில் விதைத்து பின்னால் அறுவடை பண்ணப் பார்க்கிறார்கள்.
4) ஒருவர் தொடர்ந்து பல சேனல்களில் தோன்றி நேர்முகம் எனும் பெயரில் ஒரு அரசியல் தலைவரையோ அரசியல்வாதியையோ திரும்பத் திரும்ப விமர்சிக்கிறார் என்றால் அவர் சம்மந்தப்பட்டவரை ‘மிரட்டுகிறார்’ எனப் புரிந்து கொள்ள வேண்டும். மிரட்டப்படும் நபர் இவரைத் தொடர்பு கொண்டு ‘ப்ளீஸ் நிறுத்துங்க’ என கெஞ்சும் வரை மிரட்டுவார்கள். ஒரு தொகையை செட்டில்மெண்டாக வாங்கிய பின்னர் அவரைத் திட்டுவதை நிறுத்தி விட்டு இன்னொருவரை ‘மிரட்ட’ ஆரம்பிப்பார். அல்லது ஏற்கனவே கடுமையாக விமர்சித்த அந்த நபரைப் பற்றி பட்டும்படாமலோ பாராட்டியோ (“அண்ணாமலை செஞ்சது சரிதாங்க, ஆமா நானே தாங்க சொல்றேன், இந்த விசயத்தில சரிதான்!”) அவரது பிம்பத்தை விமர்சித்தபடியே மிகைப்படுத்தியோ (“அண்ணாமலைய குறைச்சு மதிப்பிடாதீங்க”) பேசினால் அவர் அந்த நபரின் ஊதிய பட்டியலுக்கு வந்துவிட்டரெனப் பொருள். நீங்கள் பின் தொடரும் ஒருவருடைய ஒரு வருட காணொளிகளின் பட்டியலை சும்மா பார்த்தாலே இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளலாம்.
5) பேட்டி எடுப்பவரின் பெயரை ஸ்வாதீனமான அழைத்து பேசினாலோ அவர் இவர் பேச எடுத்துக் கொடுப்பதாகத் தோன்றினாலோ இவர்கள் கூட்டுக்களவாணிகள் தாம்.
6] “என்னுடைய சோர்ஸ்படி”, “நான் என்னோட இத்தனை வருச பத்திரிகை அனுபவத்தில சொல்றேன்” என ஆரம்பித்தாலும் இவர்கள் மோசடிப் பேர்வழிகளே.
7) அறச்சீற்றத்தை நம்பாதீர்கள்.
8] ஒரு செய்தி சேனலில் வேலை பார்த்து பெயர் வாங்கிவிட்டு அந்த வேலையில் இருந்து வந்து ஒருவர் யுடியூப் சேனல் ஆரம்பித்து தன் தொடர்புகளை பயன்படுத்தி பேட்டி அது இதுவென பரபரப்பாக இயங்கினால் அவர் ஒரு மோசடிப் பேர்வழியே. ஒரு சேனலை சொந்தமாக நடத்த ஒரு நல்ல முதலீடு வேண்டும். சுலபத்தில் யாராலும் அப்படி பண்ணிட முடியாது.
9) ஒருவர் பகிங்கரமாக ஒரு கட்சியை ஆதரித்தோ (திமுகவோ தமிழ் தேசியவாத கட்சியோ) எதிர்த்தோ (பாஜக) தன் யுடியூப் சேனலில் களமாடினால் அவரும் மோசடிக்காரரே. ஏனென்றால் உங்கள் கட்சி அனுதாபத்தை / வெறுப்பை சுரண்டி ஒரு நடுநிலையாளர் பிம்பத்தை உருவாக்கி உங்கள் மனதுக்குள் நீங்கள் ஆதரிக்கிற கட்சிக்கு எதிரான கதையாடலை விதைப்பதே இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடுபணி. இவர்களும் பாஜகவின் ஊதியப் பட்டியலில் இருப்பவரே. திமுகவுக்கான ஊதியப்பட்டியலில் இருந்தவர்கள் தேர்தலுக்குப் பின்பு நீக்கப்பட்ட நிலையில் இப்போது அண்ணாமலையின் பட்டியலுக்கு போயிருக்கிறார்கள். நாளை இன்னொருவரின் பட்டியலுக்குப் போவார்கள். நம்முடைய மறதியும் அக்கறையின்மையுமே இவர்களுடைய முதலீடு.
10) இவர்களை ஆதரித்து யுடியூபிலும் பேஸ்புக், டிவிட்டரிலும் கள்மாடுபவர்கள் ஒன்று இவர்களால் தாம் ஆதரிக்கும் கட்சிக்கு லாபமிருக்கும் என அப்பாவித்தனமாக நம்பும் ரசிகர்கள். Passive supporters. இவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்.
எனக்கு எந்த சார்பும் இல்லை, நான் வெறுமனே ஆளுங்கட்சியின் ஆட்கள் பற்றி கசிய விடப்படும் ருசிகரமான தகவல்களுக்காகவே பார்க்கிறேன் என்றால் உங்களையும் அவர்கள் சில மாதங்களுக்குள்ளாகவே மூளைச்சலவை பண்ணிவிடுவார்கள். நீங்கள் மதத்தைப் பற்றி அறியும் அறிவார்ந்த நோக்கத்துக்காக ஒரு கார்ப்பரேட் சாமியார் / காஸ்பல் பேச்சாளரின் கூட்டங்களுக்கு தொடர்ந்து போனால் என்னவாகுமோ அதுவே இங்கும் நடக்கும். உங்கள் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதைத் தெரிந்து கொண்டு முன்னேறுங்கள். அரசியல் பற்றி கட்சிப் பேச்சாளர்கள் சொல்வதை கவனியுங்கள். மரபான செய்தித்தாள்களைப் படியுங்கள். செய்திச் சான்ல்களைப் பாருங்கள் (விவாத நிகழ்ச்சிக்குள் போகாதீர்கள்).
ஒருமுறை அண்ணாமலை தமிழக ஊடகங்களை வழிக்கு கொண்டு வரப்போகிறேன் என்று சொன்னார். அவர் ஊடக கட்டுப்பாடு, தடை எனப் போகப்போகிறார் என நினைத்தால் மாறாக முதலில் ஊடக முதலாளிகளை தில்லிக்கு அழைத்து சென்று ஒரு விருந்து அளித்து நிறைய கையூட்டை உத்தரவாதம் பண்ணினார். அதன் பிறகு ஊடக்காரர்களிடம் உங்கள் விலை என்ன என்று ஒரு சந்திப்பின் போது நேரடியாகக் கேட்டு அது பிரச்சினை ஆனது. ஆனால் அவர் நிஜமாகத் தான் கேட்டிருக்கிறார் போல. அவர் அடுத்து உள்ளூர் யுடியூபர்களை வளைத்துப் போடும் பொறுப்பை சில தரகர்களுக்கு அளித்தார். அவர் மட்டுமல்ல திமுக நிர்வாகமும் தான் இதை கடந்த தேர்தல் காலத்தில் செய்துள்ளது - என்ன கொடுமை என்றால் ஒரே தரகரே இரு கட்சிகளுக்காகவும் வேலை பார்த்திருக்கிறார். இப்போது திமுகவுக்கு இவர்களைத் தேவையில்லை, ஆனால் பாஜகவின் அண்ணாமலைக்கு தேவை உள்ளது. அவர் கட்சியை விட்டுப் போனதும் இவர்கள் மீண்டும் ஒவ்வொருவர் வீட்டுக்கதவாக மீண்டும் தட்டுவார்கள். ஏதாவது ஒரு தலைவரிடம் போய் அண்டிக்கொள்வார்கள், யாரையாவது மிரட்டி செட்டில்மெண்ட் வாங்குவார்கள். இவர்களுக்கு நாம் இரையாகி நம்மை மறைமுகமாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. நாம் பார்ப்பதால் உருவாகும் சில லட்சம் பார்வைகளே இவர்களுடைய பிம்பம்.
சனியன்கள்! மருந்தடித்தாலும் சாகாத கரப்பான்கள். இவர்கள் ஒழிய வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...