Skip to main content

பெயரொட்டு

 என்னுடைய முழுப்பெயர் அபிலாஷ் சந்திரன். அந்த பெயரொட்டு என் அப்பாவின் பெயரொட்டும் தான். அப்படியே எனக்கு கையளித்துவிட்டார்கள். என்னுடைய தாத்தாவின் காலத்தில் அது பிரசித்தமாக இருந்திருக்க வேண்டும். என்னுடைய சித்தப்பாவுக்கும் அந்த பெயரொட்டு உண்டு. என்னுடைய அப்பாவின் பெயரின் பின்னுள்ள சாதிப் பெயரொட்டு எனக்கு என் அப்பா அளிக்கவில்லை. சொல்லப்போனால் என்னுடைய ஊரில் என் தலைமுறையில் யாருக்கும் சாதிப் பின்னொட்டை அவர்களுடைய பெற்றோர் அளிக்கவில்லை. அவ்விதத்தில் நாங்கள் குமரி மாவட்டத்தினர் என்றாலும், என்னதான் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ் தாக்கம் அதிகமாக இருந்தாலும் நல்லவேளையாக திராவிட அரசியலின் நீட்சியாகவே எங்கள் பண்பாடும் இருந்தது. இன்னொரு விசயம், சாதியைப் பின்னொட்டாக வைப்பது நவீன விழுமியம் அல்ல, அது நவீன வாழ்க்கையை வாழப் போகும் பிள்ளைகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என ஒரு நம்பிக்கை அன்று இருந்திருக்கலாம். ஆனால் 90களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, ரெண்டாயிரத்தில் நிகழ்ந்த அடுத்த பொருளாதார அலையினால் சாதிப்பெருமை, மதப்பெருமை என் தலைமுறையினரிடம் மேலெடுத்தது. ஒருவித பதற்றம், அடையாளக் குழப்பம், அவர்கள் சாதி, மதத்தின் பின்னால் போய் ஒளிந்துகொண்டனர் என நினைக்கிறேன். என்னுடைய சமகாலத்தவர்களில் சிலர் சாதிப்பின்னொட்டை புதிதாக வைத்துக் கொண்டதை கவனித்தேன். தமிழகம் முழுக்கவும் கடந்த பத்தாண்டுகளில் இது ஒரு தனி அலையாக உருவாகியது - சாதிப் பின்னொட்டை சமூகவலைதளங்களிலும், சாதியின் பின் திரளும் முயற்சிகளையும் முன்னெடுத்தனர் என்னுடைய மற்றும் அடுத்த தலைமுறையினர்.

இந்த அலைகளால் நனைக்கப்படாதவனாகவே நான் இருந்தேன். ஆனால் எனக்கு மற்றொரு பிரச்சினை இருந்தது. பெயரின் பொருள் - இந்த 'சந்திரன்'. 'அபிலாஷ்' என்றால் அபிலாஷை. அது என் அடிப்படையான குணத்திற்கு ஒத்துப் போனது. ஆனால் சந்திரன் எதற்காக என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் எனப் புரியவில்லை. அதற்காக என் அப்பாவை மனதுக்குள் நான் வையாத நாளில்லை. அதனாலேயே நான் பிரசுரிக்கத் துவங்கியதும் 'ஆர். அபிலாஷ்' என்று மட்டுமே வைத்துக் கொண்டேன். வேலையிடங்களில் சான்றிதழ் காரணமாக முழுப்பெயருடன் விளங்கினேன். அங்கு இப்பெயர் காரணமாக உள்ளுக்குள் நான் என்னை மற்றொருவனாகவே உணர்ந்தேன். பேஸ்புக்கிலும் இரண்டாம் பெயராக யோசிக்காமல் 'சந்திரனை' அளித்துவிட்டதால், அதை இப்போது மாற்றினால் குழப்பம் வரும் என்பதாலும் இங்கு சிலர் என்னை 'அபிலாஷ் சந்திரன்' என்று அழைக்கும் போது அட இந்த கொசுத்தொல்லை விடாது போல என கடுப்பாகும்.

இந்த பெயர் பற்றி பேச்செழும் போது என் அம்மா 'உனக்கு நாங்க அஜய் கோஷ் எனப் பெயரிடலாம் என நினைத்திருந்தோம்' என்பார். அதென்ன கோஷ் என்றால் அப்போது அது பேஷனாகத் தோன்றியது என்றார். ஒருவேளை அப்பெயரை இட்டிருந்தால் என்னைப் பலரும் வங்காளி என நினைத்து உள்ளூரில் நான் இந்திக்காரன் என்றும், வெளியூரில் நான் வங்காளி என்றும் நினைக்கப்பட்டிருப்பேன். அதற்கு சந்திரனோடே குடும்பம் நடத்தித் தொலைக்கலாம்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...