Skip to main content

யாருக்காக அழுதான்?


எனக்கு முன்பு விவாதிக்கும் சுவாரஸ்யத்துக்காகவே எதையாவது விவாதிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் விவாதப் பொருளில் ஆர்வம் இழந்து தர்க்க பிரயோகத்தில் மட்டும் ஆர்வம் வந்தது. எதிர்த்தரப்பை எந்த இடத்தில் தர்க்கரீதியாக வீழ்த்துவது என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். அண்மையில் என்னுடைய வாழ்க்கைப் பார்வையே 360 பாகையில் திரும்பி விட்டது - மனிதர்களின் பிரச்சினையேஇல்லாதவிசயங்களில் மூக்கை நுழைப்பது எனத் தோன்றுகிறது. .தா., வரலாற்றை எடுத்துக் கொள்வோம். வரலாறு அதனடிப்படையில் ஒரு சுவாரஸ்யமான கதையாடல். அதில் ஒரு திகைப்பும் கிளர்ச்சியும் உண்டு, ஆனால் சோழர்கள் ஒடுக்குமுறையாளர்களா தமிழர் புகழை நிலைநாட்டியவர்களா எனும் கேள்வியில் எந்த பொருளும் இல்லை. ஏனெனில் சோழர்கள் நம் முன் இல்லை. நம் முன் என்றல்ல, யார் முன்னும் இல்லை. அவ்விதத்தில் பார்த்தால் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன செய்தார்கள் என்பது ஒரு சிறுகதையில், நாவலில் என்னவுள்ளது என்பதற்களவே முக்கியமானது. எப்படி கதைகள் நம் கண்முன் இல்லையோ, அதைப் போன்றே வரலாறும் இல்லை. நம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் உள்ளதைப் போல சந்திராயன் நம்மிடம் இல்லை (நம்மிடம் என்றல்ல யாரிடமும் இல்லை). இதையே நம்மைக் கடந்து நிகழும் அரசியலுக்கும் சொல்வேன் - மோடியோ நாடாளுமன்ற விவாதங்களோ இல்லை. இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்பது, விவாதிப்பது போர்னோகிரபி பார்த்து கிளர்ச்சியடைவதற்கு சமானமானது


நாகரிக சமூகத்தின் இன்னொரு பிரச்சினை தம் இருத்தலை பருவுலகில் இருந்து மொழியின் உலகுக்கு மாற்றிவிட்டார்கள் என்பது. இருத்தலை நாம் வெளியிலும் காலத்திலும் அறிகிறோம். ஆனால் மொழிக்குள் சென்றுவிட்ட பின்னர் இரண்டுமே அருவங்கள் ஆகின்றன. ஒரு உதாரணத்திற்கு என்னுடைய நாயிடம் நான் ஒரு தட்டில் சிக்கன், ஒரு தட்டில் சிக்கனின் வரலாறு பற்றின புத்தகம், இன்னொரு தட்டில் சிக்கன் சாப்பிடும் நாய்களின் உலகம் பற்றின ஒரு அதிரிபுதிரியான மிகவும் பிரசித்தமான படமொன்றை வைத்தால் என்னுடைய நாய் ஒரு கணம் கூட யோசிக்காமல் சிக்கனையே எடுக்கும். ஆனால் மனிதர்களிடம் நீங்கள் ஒரு தட்டில் பிரியாணியும், மற்றொரு தட்டில் பிரியாணி பற்றின சினிமாவையும், இன்னொன்றில் பிரியாணி பற்றின சமூகவலைதள பதிவுள்ள போனையும், இன்னொரு பக்கம் பிரியாணி சிலாகித்துப் பற்றி பேசுகிற அழகியையும், கடைசியாக அடுத்து வரும் நாட்களில் அவர்கள் எங்கெங்கு போய் என்னென்ன பிரியாணிகளை ருசிக்கப் போகிறார்கள் என ஒரு கால அட்டவணையையும் ஒரே சமயம் காட்டினால் குழம்பி விடுவார்கள். ஆனால் பிரியாணியைத் தவிர பிரியாணியைப் பற்றின எதுவும் நிஜத்தில் இல்லை என அவர்களுக்கு உடனடியாகப் புரியாது. இதனாலே நாம் விலங்குகள் நம்மை விட புத்திசாலிகள், தெளிவான உயிர்கள் எனத் தோன்றுகிறது. சில அடிப்படையான விசயங்களில் அவை தம் பருவுலகைத் தாண்டி எதையும் தேடி இருந்து வாழ்க்கையை வீணடிப்பதில்லை


இன்று காலை ஒரு நண்பர் நீட்சேயின் ஒரு மேற்கோளைக் காட்டினார். அதில் நீட்சே மேற்கத்திய கலாச்சாரங்கள் போலியாக துயரப்படும் கலாச்சாரங்கள் என்கிறார்கள். எப்படி என்றால் கர்த்தர் மனிதகுலத்துக்காக துயரப்பட்டார். அவர் போன பிறகு மனித குலம் (அதாவது கிறித்தவர்கள்) கர்த்தருக்காக துயரப்பட்டார்கள். ‘துன்புறுகிறவர்களுக்காக மனம் கசிவதே உங்களை பாவத்தில் இருந்து விடுவிக்கும், அதுவே உங்களை என்னை நோக்கி செலுத்தும், கடைசியில் சொர்க்கத்தை அடைய வைக்கும்என்று அவர் போதித்தார். இப்போது மக்கள் கர்த்தருக்காக துயரப்படவில்லை, அவர்கள் சொர்க்கத்தை அடைவதற்காக துயரப்பட்டார்கள். இதையெல்லாம் செய்யும் போது கர்த்தர் முன்னாலும் மனிதகுலம் இல்லை, மனிதகுலம் முன்னால் கர்த்தரும் இல்லை, சொர்க்கமும் இல்லை. இல்லாத ஒன்றுக்காக துக்கப்பட சொல்லித் தந்து பல ஆயிரம் ஆண்டுகளாக மொத்த ஐரோப்பிய சமூகமும் ஏமாளிகளாகி விட்டது என்கிறார் நீட்சே


இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல இன்று உலகில் வாழும் அனைத்து (படித்த, பண்பட்ட) மக்களுக்கும் பொருந்தும். நமக்கு நம்மைப் பார்க்க, நம்மைச் சுற்றியுள்ள பருவுலகைப் பார்க்க, இது மட்டுமே நாம், இதைத்தாண்டி ஒன்றுமில்லை என்று ஏற்றுக்கொள்ள அதிர்ச்சியாக இருக்கிறது. இது மேஜைப் பந்தை சுவருக்கு எதிராக அடித்து ஆடுவதைப் போன்றது. பந்து உங்களுடன் இருக்க வேண்டுமெனில் அதை எதற்கு சுவர் மீது அடிக்க வேண்டும்? ஆனால் அதை நிறுத்தினால் பந்து எங்கும் போகாது, நாம் ஏமாளியாகி விடுவோம் என்பதாலே அடித்துக்கொண்டே இருப்போம். அது திரும்பத் திரும்ப வர வர நமக்கு மகிழ்ச்சி அதிகமாகிக் கொண்டே வரும். ஆட்டம் முடியும் போது எதையோ சாதித்ததாக திருப்தி கொள்வோம். இந்த சுவரை நீங்கள் உலகம், கடவுள், வரலாறு, அரசியல், சமூகம், உறவுகள் என்று எதுவாகவும் வைத்துக் கொள்ளலாம். நம்மை சிறுவயதில் இருந்தே இப்படி வாழ்க்கையை வீணடிக்கப் பழக்குவதால் மொத்த வாழ்க்கையையும் மொழியிலே வீணடித்துவிடுகிறோம்.


அதற்காக அவரவர் தத்தமது அறைக்குள், வீட்டுக்குள் முடங்க வேண்டும் என நான் கூறவில்லை. அண்மையில் கர்நாடக ஊபர், ஓலா ஓட்டுநர்கள் சேர்ந்து ஒரு சங்கம் உருவாக்கி அதன் மூலம் முதல்வருக்கு ஒரு சில வேண்டுகோள்களை வைத்ததாக செய்தியைப் படித்தேன். அவற்றில் சில மிகவும் தெளிவாக, அவர்களுடைய வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புள்ளவையாக இருந்தன. அவற்றில் ஒன்று ரேப்பிடோவை தடை செய்ய வேண்டும் என்பது. ஏனெனில் அது அவர்களுடைய வாழ்க்கைப்பாட்டை நேரடியாக பாதிக்கிறது. இப்போது இப்பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ளாத ஒரு அறிவுஜீவியிடம் கேளுங்கள். அவருக்கு இரண்டு பக்கமும் நியாயம் உள்ளதாகத் தோன்றும். இதைப் படிக்கிற உங்களில் பலருக்கும் கூட அப்படித்தான் மேளத்தின் ரெண்டு பக்கமும் நல்லாத்தான் சத்தம் வருது எனத் தொன்றும். ஒரு ரேப்பிடோ வாடிக்கையாளரிடம் கேளுங்கள். அவர் அந்த கோரிக்கையே தப்பானது என்பார். இதில் அந்த ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் அரசியல் மிகவும் சரியானது. அறிவுத்தரப்பு மற்றும் இந்த பிரச்சினையால் நேரடியாக பாதிக்கப்படாத மற்ற எல்லாருடைய அரசியலும் மிகவும் தவறானது. ஏனென்றால் உங்கள் கண்முன்னால் இல்லாத ஒன்றுக்காக யோசிப்பதே அபத்தமானது. என்னை மிகவும் கவர்ந்தது இந்த ஓட்டுநர்கள் இமாச்சல பிரதேச வெள்ளத்துக்காக இரங்கியோ நிலவில் இன்னொரு முறை நாம் சந்திராயனை அனுப்ப வேண்டும் எனக் கேட்டோ முதல்வரை சந்திக்கவில்லை என்பது. நீங்கள் எங்காவது பொறியியல் மாணவர்களோ, .டி ஊழியர்களோ இப்படி தம் பிரச்சினைகளைப் பற்றி ஒன்றுகூடி யோசித்து அவற்றை சரிபண்ண நடவடிக்கை எடுத்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ம்ஹும், அதைத் தவிர உலகில் உள்ள எல்லாவற்றைப் பற்றியும் யோசிப்பார்கள். உட்கார்ந்து பணி செய்கிற எல்லாருக்கும் இல்லாதவற்றைப் பற்றி சிந்திக்கும் நோய் உள்ளது. .தா., இடதுசாரிகள், வலதுசாரிகளின் வரலாற்றில், நடைமுறையில் பிரச்சினை உள்ளது என பேஸ்புக்கில் மோதிக்கொள்கிறவர்களைப் பாருங்கள். இவர்களும் கர்த்தருக்காக துயரப்படுங்கள் கோஷ்டிதான். இவர்களுக்கு ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் ஆயிரம் மடங்கு மேல்.


எனக்குப் பிரியமான நண்பர் என்னிடம் வந்து எது முதலில் வந்தது, பௌத்தமா, வைதீகமா என விவாதிக்கத் தொடங்கினார். நான் அவரிடம் கேட்டேன், “நம் முன் இல்லாத விசயங்களுக்காக ஏன் நேரத்தை வீணடிக்கிறோம் நண்பா?” “என்னது நம் முன் இல்லையா? இது இப்போதும் நம்மை பாதிக்கும் பிரச்சினையாகும்.” நான் சொன்னேன், “பாதிக்கிறதெனில் அதை எங்கே என்னிடம் காட்டேன். முடியாது எனில் அது இல்லை எனப் பொருள். நான் இந்த மேஜை, இந்த செல்பேசி பற்றி விவாதிக்கத் தயார். கரப்பான்பூச்சியைப் பற்றி பேசத் தயார். அவை என் முன் உள்ளன. இல்லாதவற்றைப் பற்றி நான் எப்படிப் பேச முடியும்?” அவருக்கு அதற்கு மேல் என்னிடம் விவாதிக்கவே முடியவில்லை. ஏனெனில் இருப்பவற்றைப் பற்றி விவாதிக்கவே முடியாது. ஒரு அருமையான நடனத்தைப் பார்த்துவிட்டு சிலாகிக்கலாம், விவாதிக்கலாம், ஏனெனில் அது நிகழ்வதை நிறுத்திவிட்டது. அது நிகழ்கையில் நம அதைப் பற்றி பேசவே முடியாது. பேசினால் அதை கவனிக்க முடியாது. காலத்தில் இல்லாமல் போகும் ஒன்றைப் பற்றி பேசி காலத்தை வீணடிப்பதற்கே மொழி எனும் டில்டோவை நாம் பயன்படுத்துகிறோம்.


ஆனால் ஒரு சிக்கல் உள்ளது - இந்த மொழியே ஒரு முடிவுறாத சறுக்குப்பாதை. இதில் சறுக்காமல் எப்படி நடப்பது எனத் தெரியவில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...