Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எது நீதியுணர்வு?


பிரதீப்பை வைரல் கண்டெண்ட் ஆக்கியது எது? நீதியுணர்வு. அவர் அநீதிதாக வெளியேற்றப்பட்டார் எனத் தோன்ற வைக்கப்பட்டதால் வெர்ச்சுவல் வெகுஜனத்தின் நீதியுணர்வு தூண்டப்பட்டது. இந்த நீதியுணர்வு வெகுகாலமாக நம் இலக்கியவாதிகளின் கண்டெண்டாக இருந்து வந்து, பின்னர் சிலப்பதிகார மேடையுரை, திராவிட கழக மேடை உரை, அண்ணா, கலைஞர் என ஒரு சமூக சக்தியாக வளர்த்தெடுக்கப்பட்டது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் மக்கள் திரளின், சாதிய திரளின், மதவாத திரளின் நீதியுணர்வு இவ்வாறு திரட்டப்பட்டிருக்கிறது. நிர்பயாவுக்கான நீதியுணர்வு திரட்டப்பட்டதில் பாஜக ஆட்சிக்கு வந்தது. (நான் அண்ணாவையும் மோடியையும் சமப்படுத்தவில்லை.)
ஆனால் நீதியுணர்வில் இருந்து ஒன்று உருவாகும் போது அது மற்றொன்றாக உள்ளது. அது அப்படியே இருக்க முடியும். நடப்புலகில் எதுவும் நீதியின் படி நடப்பதில்லை. பொருளியல், அதிகாரத் தேவைகளின் படியே நடக்கிறது உலகம். ஆனால் அத்தேவைகளின் படி மக்களைத் திரட்டினால் முதலீட்டியத்தால், அதிகார வர்க்கத்தால் நம்மை ஆள முடியாது. எதையும் அதுவாக பார்க்க அனுமதிக்காததே தேர்தல் அரசியல். 

நீதியுணர்வின் பெரிய சிக்கல் அது அரூபமானது, காண இயலாதது, அது ஒரு நவீன மாற்றுக் கடவுள் என்பது. கடவுளுக்கான எல்லா ஏமாற்று சங்கதிகளும் வெகுஜனத் திரளைப் போய் சேரும் நீதியுணர்வுக்கும் உண்டு. இந்நீதி உணர்வின் மற்றொரு பெரிய சிக்கல் அது நம்மை அன்றாட உலகில் அநீதியை எதிர்க்க விடாமல் பண்ணுகிறது என்பது. நாம் இன்று காணும் நீதியுணர்வு மத்திய வர்க்கம் தன் அன்றாட உடனடி உலகில் உள்ள பல்வேறு அநீதிகளை கண்டும் காணாமல் கடந்துவிட செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அது ஒரு மாயக்களிம்பு. குழந்தை இல்லாத ஒருவர் பள்ளிக்கூடத்தின் முன் போய் நின்று குழந்தைகளை நோக்கி ஆறுதலாவதைப் போன்றது. அதுவே அவர்களை குழந்தையே இனி வேண்டாம் என நினைக்க வைத்தால்? ஆம் அதுதான் நவீன நீதியுணர்வின் விசயத்தில் நடக்கிறது. அது நம்மை அநீதியாளர்கள் ஆக்குகிறது. இதை நான் கருத்தளவில் அல்ல அனுபவ ரீதிதாக கண்டே மனிதர்களின் நடத்தையை கவனித்தே சொல்கிறேன். நாய் வளர்ப்பின் போதும் பார்த்திருக்கிறேன் - பிஸ்கட் எனும் சொல் ஒரு நாயை தன் பிஸ்கட்டை மறக்கச் செய்கிறது. சொற்கள் ஆபத்தானவை என அதனாலே நினைக்கிறேன். அதனாலே நீதி விவாதமே நம் ஊரின் பெரிய மோசடி என நினைக்கிறேன். ஒன்று டிராமாவாக, கருத்தாக, தர்க்கமாக சுருக்கியதும் அதை இழந்து அதன் தோற்றத்துடன் சமாதானமாகிறோம். அசல் உலகில் அதன் தோற்றத்திற்கும் கருத்தளவில், பேச்சில், சிந்தனையில் அதன் உருவத்துக்கும் தொடர்பே இல்லாதிருப்பதைக் காண்கிறோம். மிக அதிகமாக அறவுணர்வு பற்றி பேசுகிறவர்கள் தம் நடைமுறையில் எந்த அறவுணர்வும் இல்லாதிருப்பதைக் காண்கிறோம். இதன் உளவியலே அப்படித்தான் போல - பேசப் பேச நாம் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். சற்றும் கூச்சமற்றவர்களாக பொய் சொல்கிறோம், ஏமாற்றிப் பறிக்கிறோம், துன்புறுத்துகிறோம், ஆனால் பேச்செல்லாம், மனமெல்லாம் நீதியுணர்வு கமழ இருக்கிறோம்.

 இது ஒரு பிராமணியமும் தான். பிரம்மத்தின் இடத்தில் நீதி.

அசல் நீதியுணர்வைப் பெற நாம் புலனுலக வாழ்தலுக்குத் திரும்ப வேண்டும். சின்னச்சின்ன நீதிகளுக்கு, உடனடியாக நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன் தரும், நம்மால் அனுபவிக்க முடிகிற நீதிக்குத் திரும்ப வேண்டும். பெரும் நீதிகளை உதற வேண்டும். நம் நீதியான அனுபவங்களை உடனடியாக சொல்லுக்குத் திருப்பி மீண்டும் அரூபமாக்காதிருக்க வேண்டும். அநீதியின் குடியிருந்த கோயிலே மொழி தான். 

சரி, மொழி இல்லாவிடில் நமக்கு எது நீதியென எப்படித் தெரியும்? எது நம் புலனுலகில் போதாமையை ஏற்படுத்துகிறதோ அதுவே அநீதி. அதை பௌதீகமாக அறிய முடியும். பணம் போதவில்லையா? ஊதியம் கிடைக்கவில்லையா? தண்ணீர், சாப்பாடு, சூழல் மாசாதல், சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்படுதல், அவமதிக்கப்படுதல் இப்படி நம்மால் காண முடியும் எதுவும் அநீதியே. ஆனால் அதற்கு எதிர்வினையாற்றாமல் பக்கத்து தெருவில், ஊரில், நாட்டில், கிரகத்தில் நடப்பதற்கு கண்ணீர் வடிப்பது சுய-எமாற்று, சுயமோசடி. அவ்விதத்தில் நம் நாட்டில் மத்திய, மேல் வர்க்கத்தினர் நீதியுணர்வற்றவர்களாகவும், தண்ணீர் வரவில்லை, அநியாயமாகக் கொன்று விட்டார்கள் என்றால் குடத்துடன், பிணத்துடன் தெருவில் வந்து நிற்கிறார்களே அவர்களே அசல் நீதியாளர்கள். அவர்கள் பாலஸ்தீனம் பற்றி பேசிக்கொண்டு பொறுப்பை இன்னொருவர் தலையில் போட மாட்டார்கள். 

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...