Skip to main content

எது நீதியுணர்வு?


பிரதீப்பை வைரல் கண்டெண்ட் ஆக்கியது எது? நீதியுணர்வு. அவர் அநீதிதாக வெளியேற்றப்பட்டார் எனத் தோன்ற வைக்கப்பட்டதால் வெர்ச்சுவல் வெகுஜனத்தின் நீதியுணர்வு தூண்டப்பட்டது. இந்த நீதியுணர்வு வெகுகாலமாக நம் இலக்கியவாதிகளின் கண்டெண்டாக இருந்து வந்து, பின்னர் சிலப்பதிகார மேடையுரை, திராவிட கழக மேடை உரை, அண்ணா, கலைஞர் என ஒரு சமூக சக்தியாக வளர்த்தெடுக்கப்பட்டது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் மக்கள் திரளின், சாதிய திரளின், மதவாத திரளின் நீதியுணர்வு இவ்வாறு திரட்டப்பட்டிருக்கிறது. நிர்பயாவுக்கான நீதியுணர்வு திரட்டப்பட்டதில் பாஜக ஆட்சிக்கு வந்தது. (நான் அண்ணாவையும் மோடியையும் சமப்படுத்தவில்லை.)
ஆனால் நீதியுணர்வில் இருந்து ஒன்று உருவாகும் போது அது மற்றொன்றாக உள்ளது. அது அப்படியே இருக்க முடியும். நடப்புலகில் எதுவும் நீதியின் படி நடப்பதில்லை. பொருளியல், அதிகாரத் தேவைகளின் படியே நடக்கிறது உலகம். ஆனால் அத்தேவைகளின் படி மக்களைத் திரட்டினால் முதலீட்டியத்தால், அதிகார வர்க்கத்தால் நம்மை ஆள முடியாது. எதையும் அதுவாக பார்க்க அனுமதிக்காததே தேர்தல் அரசியல். 

நீதியுணர்வின் பெரிய சிக்கல் அது அரூபமானது, காண இயலாதது, அது ஒரு நவீன மாற்றுக் கடவுள் என்பது. கடவுளுக்கான எல்லா ஏமாற்று சங்கதிகளும் வெகுஜனத் திரளைப் போய் சேரும் நீதியுணர்வுக்கும் உண்டு. இந்நீதி உணர்வின் மற்றொரு பெரிய சிக்கல் அது நம்மை அன்றாட உலகில் அநீதியை எதிர்க்க விடாமல் பண்ணுகிறது என்பது. நாம் இன்று காணும் நீதியுணர்வு மத்திய வர்க்கம் தன் அன்றாட உடனடி உலகில் உள்ள பல்வேறு அநீதிகளை கண்டும் காணாமல் கடந்துவிட செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அது ஒரு மாயக்களிம்பு. குழந்தை இல்லாத ஒருவர் பள்ளிக்கூடத்தின் முன் போய் நின்று குழந்தைகளை நோக்கி ஆறுதலாவதைப் போன்றது. அதுவே அவர்களை குழந்தையே இனி வேண்டாம் என நினைக்க வைத்தால்? ஆம் அதுதான் நவீன நீதியுணர்வின் விசயத்தில் நடக்கிறது. அது நம்மை அநீதியாளர்கள் ஆக்குகிறது. இதை நான் கருத்தளவில் அல்ல அனுபவ ரீதிதாக கண்டே மனிதர்களின் நடத்தையை கவனித்தே சொல்கிறேன். நாய் வளர்ப்பின் போதும் பார்த்திருக்கிறேன் - பிஸ்கட் எனும் சொல் ஒரு நாயை தன் பிஸ்கட்டை மறக்கச் செய்கிறது. சொற்கள் ஆபத்தானவை என அதனாலே நினைக்கிறேன். அதனாலே நீதி விவாதமே நம் ஊரின் பெரிய மோசடி என நினைக்கிறேன். ஒன்று டிராமாவாக, கருத்தாக, தர்க்கமாக சுருக்கியதும் அதை இழந்து அதன் தோற்றத்துடன் சமாதானமாகிறோம். அசல் உலகில் அதன் தோற்றத்திற்கும் கருத்தளவில், பேச்சில், சிந்தனையில் அதன் உருவத்துக்கும் தொடர்பே இல்லாதிருப்பதைக் காண்கிறோம். மிக அதிகமாக அறவுணர்வு பற்றி பேசுகிறவர்கள் தம் நடைமுறையில் எந்த அறவுணர்வும் இல்லாதிருப்பதைக் காண்கிறோம். இதன் உளவியலே அப்படித்தான் போல - பேசப் பேச நாம் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். சற்றும் கூச்சமற்றவர்களாக பொய் சொல்கிறோம், ஏமாற்றிப் பறிக்கிறோம், துன்புறுத்துகிறோம், ஆனால் பேச்செல்லாம், மனமெல்லாம் நீதியுணர்வு கமழ இருக்கிறோம்.

 இது ஒரு பிராமணியமும் தான். பிரம்மத்தின் இடத்தில் நீதி.

அசல் நீதியுணர்வைப் பெற நாம் புலனுலக வாழ்தலுக்குத் திரும்ப வேண்டும். சின்னச்சின்ன நீதிகளுக்கு, உடனடியாக நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன் தரும், நம்மால் அனுபவிக்க முடிகிற நீதிக்குத் திரும்ப வேண்டும். பெரும் நீதிகளை உதற வேண்டும். நம் நீதியான அனுபவங்களை உடனடியாக சொல்லுக்குத் திருப்பி மீண்டும் அரூபமாக்காதிருக்க வேண்டும். அநீதியின் குடியிருந்த கோயிலே மொழி தான். 

சரி, மொழி இல்லாவிடில் நமக்கு எது நீதியென எப்படித் தெரியும்? எது நம் புலனுலகில் போதாமையை ஏற்படுத்துகிறதோ அதுவே அநீதி. அதை பௌதீகமாக அறிய முடியும். பணம் போதவில்லையா? ஊதியம் கிடைக்கவில்லையா? தண்ணீர், சாப்பாடு, சூழல் மாசாதல், சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்படுதல், அவமதிக்கப்படுதல் இப்படி நம்மால் காண முடியும் எதுவும் அநீதியே. ஆனால் அதற்கு எதிர்வினையாற்றாமல் பக்கத்து தெருவில், ஊரில், நாட்டில், கிரகத்தில் நடப்பதற்கு கண்ணீர் வடிப்பது சுய-எமாற்று, சுயமோசடி. அவ்விதத்தில் நம் நாட்டில் மத்திய, மேல் வர்க்கத்தினர் நீதியுணர்வற்றவர்களாகவும், தண்ணீர் வரவில்லை, அநியாயமாகக் கொன்று விட்டார்கள் என்றால் குடத்துடன், பிணத்துடன் தெருவில் வந்து நிற்கிறார்களே அவர்களே அசல் நீதியாளர்கள். அவர்கள் பாலஸ்தீனம் பற்றி பேசிக்கொண்டு பொறுப்பை இன்னொருவர் தலையில் போட மாட்டார்கள். 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...