முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூளையில் அதக்கிய கூழாங்கல்



"கூழாங்கல்" படத்தின் டிரைலர் பார்த்த போது ஏற்பட்ட எதிர்பார்ப்பு முழுப்படத்தில் நிறைவேறவில்லை. டிரைலரை நன்றாக தொகுத்திருந்தார்கள், ஆனால் படத்தில் சொதப்பி விட்டார்கள். கதையோட்டத்தில் ஒரு சலிப்பு வருகிறது - அது திரைக்கதையில் உள்ள பிரச்சினையால் தான். அந்த தகப்பன் பாத்திரம் கடைசி வரையில் மாறுவதில்லை. அதனாலே அவரும் சரி அவரது மகனின் பாத்திரமும் சரி ஒருவித கெட்டி அட்டையால் செய்யப்பட்ட மனிதர்களாக இருக்கிறார்கள். அது அப்படம் முழுக்க எல்லா பாத்திரங்களுக்கும் இருக்கிற பிரச்சினை.


இப்பிரச்சினை ஒரு அரசியலும் தான். ஆண்கள் அடிப்படையில் கொடியவர்கள் என்று சொல்வதில் ஒரு முற்போக்கு சிலிர்ப்பு உள்ளது. அது தன்னைக் குறித்து நவீன மனத்திற்கு உள்ள குற்றவுணர்வில் இருந்து வரும் சிலிர்ப்பு. அது ஒரு பாசாங்கு நாடகம். தானாகவே இருந்துகொண்டே தன்னை மறுத்து நவீன ஆண் ஆடும் போலி நாடகம். நீங்கள் இந்த நாடகத்தை 70, 80களில் எழுத ஆரம்பித்த முற்போக்கு படைப்பாளிகளிடமும் அவர்களின் வழித்தோன்றலாக தம்மைக் கருதும் இன்றைய ஆண் படைப்பாளிகளிடமும் பார்க்கலாம். அவர்களை வாசித்து ஏற்பட்ட செயற்கையான அரசியல் இந்த இயக்குநரிடமும் தெரிகிறது. ஏனென்றால் ஆண் பாத்திர அமைப்பில் ஒரு உள்முரண, மாற்றம் இல்லாமல் இறுகிப் போய் இருக்கிறது. பெண்கள் நிரந்தர இரைகளாக காட்டப்படுகிறார்கள். அந்த சூழலில் அப்படித்தான் இருக்க முடியும் எனக் கூற முடியாது. ஏனென்றால் எந்த சூழலிலும் மனிதர்கள் வேட்டையாளர்கள், வேட்டை இரைகள் என கராறான டப்பாக்களுக்குள் இருக்க மாட்டார்கள். மாறிக்கொண்டே, முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்போதே அது உண்மைக்கு பக்கத்தில் வரும். தமிழ் முற்போக்கு சிறுகதைகளில் உள்ள பாத்திர வார்ப்பில் உள்ள அதே பிரச்சினை இப்படத்திலும் உள்ளது. இதிலும் இருந்து கிடைக்கும் பாடம் இளம் இயக்குநர்கள் உத்தம முற்போக்கு தமிழ் படைப்பாளிகளைப் படிக்காமல் நடைமுறையில் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என கவனிக்க வேண்டும் என்பது.

அந்த குழந்தையின் பாத்திரம் இன்னும் கொடுமை - ரொம்ப நல்லத்தனமாக இருக்கிறது. குழந்தைகளிடமே நாம் உச்சபட்சமான தீமையின் வெளிப்பாட்டைக் காண்போம். அதுவே உளவியல் சொல்வது. அழிவு விழைவு குழந்தைகளின் அடிப்படை உந்துதல். ஆனால் இந்த குழந்தை ஷெல்லி, வெர்ட்ஸ்வொர்த்தின் பழைய கற்பனாவாத காலத்து குழந்தை உருவகம் போல இருக்கிறது. குழந்தை ஏசுவைப் போல இருக்கிறது. சற்று பயமாக கூட இருக்கிறது. இந்த முற்போக்காளர்கள் ஒரு புதிய உலகைப் படைத்தால் அது ரொம்ப பயங்கரமாக இருக்கும் போல.

சவால், அதை எதிர்கொள்ளும் முயற்சி, அதனால் கிடைக்கும் படிப்பினை, அதனால் வரும் மாற்றம் என பாத்திர அமைப்பில் சில சிறிய மாற்றங்களைப் பண்ணியிருந்தால் இப்படம் ஒரு கிளாஸிக் ஆகியிருக்கும். ஆனால் அவசர கதியில் கதையை எழுதி படமாக்கியதைப் போலிருக்கிறது. கதை மொழியில் வேலை செய்திருக்கிறார்கள், நிறைய உருவகங்களை இறைத்திருக்கிறார்கள், ஆனால் கதையுடன் பொருந்தி வர முடியாததால், கதையே முழுமையற்றது என்பதால், கதையே தட்டையாக உள்ளதால் இந்த உருவகங்கள் உயிரிழந்து விடுகின்றன.

ஏமாற்றம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...