Skip to main content

எதற்கு இப்படி ஒரு மொழி?



இலக்கியத்தில் எல்லாமே கரார்தான். ஒரு நாவல் (அல்லது சிறுகதை) சுமாராக இருந்தால் கூட அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால் சினிமா விசயத்தில் நம் ஆட்கள் அவ்வளவு கரார் இல்லை. ரொம்ப ரொம்ப சுமார் என்றாலே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஓரளவுக்கு சுமாராக ஓடின முற்போக்குப் படமென்றால் அதற்கு உலகமெங்கும் எதாவது விருதுகள், மட்டற்ற புகழ், ஏகப்பட்ட பணம். சிறந்த படமென்றால் சொல்லவே வேண்டாம், அந்த தாஜ்மஹால் என்ன விலை, அதானி சொத்தை விலைக்கு கேளு எனும் ரகத்தில் ரசிகர்கள் குதிப்பார்கள். உலகின் அத்தனை விருதுகளும் உடனே வேண்டும் என்பார்கள். இல்லாவிட்டாலும் கவலையில்லை, ஆயிரம் கோடி வசூல், ஆயிரம் லட்சம் கோடி வசூல் எனப் புளகாங்கிதம் அடைவார்கள், அதனால் தமக்கென்ன லாபம் எனக் கேட்க மாட்டார்கள். பிடிக்காத படத்தைக் கூட திரையரங்கில் கொண்டாடும் ரசிகர்களை நண்பர்களாகப் பெற்றிருக்கிறேன். ஏன் அப்படி செய்கிறார்கள் எனக் கேட்டால் அவர்களுக்கு சொல்லத் தெரியாது. மிக மிக மட்டமான இரண்டு மூன்று தோல்விப் படங்களை எடுக்கும் இயக்குநர்களைப் பார்க்கிறோம். ஒவ்வொரு படத்துக்கும் சம்பளம் என ஒன்றை வாங்கி விடுவார்கள். ரசிகர்கள் மட்டும் ரொம்ப மென்மையாக வலிக்காததைப் போல கலாய்த்து விட்டுப் போய்விடுவார்கள். ஏன் இவ்வளவு மட்டமாக எடுத்து வைத்து ஏமாற்றினீர்கள் என மனம் காயப்பட்டு எந்த பார்வையாளரும் கடுமையாகத் திட்டி நான் பார்த்ததில்லை.

இதுவே இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் ஒரு சிறந்த நாவலை / கதையை நீங்கள் எழுதி 10000 பேர்களுக்கு அது போனால், 50 விமர்சனங்கள் இணையத்தில் வந்தால் பெரிய விசயம். எங்காவது ஒரு சிறந்த நாவலுக்கு விருதுகள் கொடுத்ததுண்டா? தோல்வி அடைந்தால் யாராவது திட்டிக்கொண்டோ விமர்சித்துக் கொண்டோ இருப்பார்கள். ஏதோ அவர்களுடைய சொத்தை நீங்கள் மோசடி செய்து அபகரித்ததைப் போலத் திட்டுவார்கள்.

ஒரு லட்சம் பெறுமதியான விருதுக்கு, அதனால் கிடைக்கும் ஒரு கோடி மதிப்பிலான வீட்டுக்கு அல்லது தேசிய அங்கீகாரம் தரும் விருதுக்கு எவ்வளவு போட்டி, மோதல், அரசியல்! நாற்பதாண்டுகள் தொடர்ச்சியாக பங்காற்றும் படைப்பாளிகள் கூட இதற்காக வரிசையில் நின்றிருக்க வேண்டும். சினிமா இயக்குநர்களுக்கு, நடிகர்களுக்கு அட்டுப்படத்தில் கேவலமாக பங்காற்றினால் கூட இதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறையேனும் மிக சுலபமாக கிடைக்கிறது.

ஒரு சாதாரண மசாலா படத்தை எடுத்த இரண்டு தரப்புகளுக்கு இடையே படத்தயாரிப்பு சார்ந்த ஒரு பணப் பஞ்சாயத்து. அதைப் பற்றி ஒரு மாதம் மொத்த சமூகமும் மாய்ந்து மாய்ந்து யோசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், அதனால் தமக்கு கால் பைசா லாபமில்லை என்றாலும். ஆனால் ஒரு விருது வாங்கும் விசயத்தில் எவ்வளவு சதித்திட்டங்கள், சிக்கல்கள். சம்மந்தப்பட்ட எழுத்தாளர் இந்நேரம் அந்த விருது வந்தால் ஆறுதல் அடைந்து உடல் நலம் இன்னும் மேம்படக் கூடும் என்று ஜெயமோகன் எழுதுகிறார். இப்படியான அவல நிலை உலகில் எந்த மொழியிலும் எந்த எழுத்தாளனுக்கும் இராது.


ஒன்றை சீரியஸாக எடுக்காததால் சதா கொண்டாடுகிறார்கள், விமர்சிப்பதே இல்லை, மற்றொன்றை சீரியஸாக எடுப்பதால் மிக மிக அரிதாக மிகச்சிலரே கொண்டாடுகிறார்கள், கொஞ்சம் ஏமாற்றமானால் கத்தியைத் தூக்கிக் கொண்டு விரட்டுகிறார்கள் என்று விளக்கம் சொல்லலாம்.
ஆம் ஒன்று பொழுதுபோக்கு, வியாபாரம், இன்னொன்று கலையனுபவம், வியாபாரம் அல்லாத பண்பாட்டு இயக்கம். மறுக்கவில்லை, ஆனால் அதற்கு இவ்வளவு வித்தியாசம் வேண்டுமா?

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தால் நான் இதை எழுதவில்லை - இலக்கியத்தில் பெரும் படைப்பாளிகளே சறுக்கும் போது வாசகர்கள், விமர்சகர்களால் கடுமையாகத் துண்டாடப்படுவதைப் பார்க்கும் போது, சினிமாவால் நிலை நேர்மாறாக இருப்பதைக் காணும் போது, ஒரு இடத்தில் சில்லறை விழுந்தால் பிடிக்க ஆயிரம் பேர் புழுதியில் விழுந்து புரள, செத்தால் அது நாற்பது பேருக்கான சேதி என இருக்க, இன்னொரு இடத்தில் பணத்திலே விழுந்து புரண்டு, தும்மினாலே செய்தி எனும் நிலையில் மக்கள் இருப்பதைக் காணும் போது எழுந்த வினா இது.

என்ன கழிசடையான சமூகம் இது! சென்னைக்கு வந்த வெள்ளத்தை விட நூறு மடங்கு பெரிய வெள்ளம் மொத்த தமிழகத்துக்கும் வந்து ஒரு மாதம் மூழ்க வேண்டும்! இப்படி ஒரு மாநிலமே பூமி மீது இருக்கக் கூடாது. எதற்கு இப்படி ஒரு சமூகம், இப்படி ஒரு மொழி! ஆனால் அற்புதமான நெடிய பண்பாடு, மிகச்சிறந்த இலக்கியம் நமக்குள்ளது. நாம் அழிந்தால் அதுவும் அழிந்து போகும். அல்லாவிடில் மனம் உவந்து சபித்து விடலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...