Skip to main content

ஏன் கோயில்களில் செருப்புக்கு அனுமதி இல்லை?

 இந்து மதக் கோயில்களுக்குள் நீங்கள் ஒரு மாற்றுத்திறனாளியாகவோ வேறு கால் பிரச்சினைகள் உள்ள முதியவராகவோ இருந்து நடப்பதற்கோ நகரவோ செருப்பு உள்ளிட்ட உபகரணங்கள் தேவைப்பட்டால் அனுமதிக்க மாட்டார்கள். சரி செருப்பு  பயன்பாடு பற்றி இந்து மத புராணங்களிலோ வேதங்களிலோ எதையாவது சொல்லியிருக்கிறார்களா என்றால் இல்லை. பசுவதை ஒழிப்பு பற்றி சொல்லியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மாறாக மாடுகளை யாகத்தின் பெயரில் கொன்று தின்பதைப் பற்றி நிறைய இருக்கிறது. இப்படியான பூர்வ வைதீக இந்துக்கள் ஒரு கட்டத்தில் அகிம்சையை வலியுறுத்திய பௌத்தத்தின் புகழைக் கண்டு அந்தப் பழக்கத்தை வரித்துக்கொண்டனர். பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலால் உண்ணாமையை ஒரு முக்கிய கொள்கையாகவும், சாதிய ரீதியாக படிநிலையை உருவாக்கவும் பயன்படுத்தினார்கள். இதன் நீட்சியாகவே மாட்டின் தோல் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக செருப்புகளை இந்துகோயில்களில் தடை செய்கிறார்கள். கூடுதலாக புத்தர் தன் மரணத்திற்கு பின்பும் தம்முடன் இருக்கிறார் எனும் நம்பிக்கையின் படி அவரது பாதங்களை சிலையாக்கி வழிபடும் மரபை பூர்வ பௌத்தர்கள் உருவாக்கினார்கள். அந்த பாதங்களையும் பௌத்த வீழ்ச்சிக்குப் பின்னர் இந்துமதம் எடுத்துக்கொண்டது. காலைத் தொட்டு வணங்கும் வழக்கம் இந்துக்கள் இடையே உருவானது. பிக்பாஸில் பாருங்கள், தவறாமல் கமலின் காலில் விழுந்தே உள்ளே வருகிறார்கள், வெளியே போகிறார்கள். இந்த வைதீகப் பண்பாட்டுக்கு வெளியே உள்ளோர் மட்டுமே பரஸ்பரம் வணங்கி மரியாதையை வெளிப்படுத்துகிறார்கள். இப்படித் தன்னிச்சையாக உருவான வரலாற்றின் விளைவாகவே கால்கள் புனிதமாகி சுத்தமான கால் படைத்தவர்கள், அசுத்த கால் படைத்தவர்கள் எனும் எதிர்வு உருவானது. கால்களைப் பயன்படுத்த முடியாதவர்களை கோயிலுக்கு வெளியே நிற்க / உட்கார வைக்கும் ஒரு கொடிய வழக்கமும் ஏற்பட்டது. இன்று நீங்கள் போலி தோல் (faux leather) செருப்புகளையே அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது ஒரு குறியீடு. இந்துக்களுக்கு அந்த பூர்வ பௌத்த குறியீட்டைப் புரிந்துகொள்ளத் தெரியாது என்பதாலே அவர்கள் அதை விளக்கவோ மறுக்கவோ தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள், திகைக்கும் போது பயத்தில் நாம் இன்னும் இறுக்கமாக ஒரு குறியீட்டைப் பற்றிக் கொள்வோம்.

இதனாலே, இந்து மத சீர்திருத்தவாதிகள் கூட இப்பிழையைத் திருத்தி ஜனநாயகத் தன்மை கொண்டதாக கோயிலை ஆக்க முயலவில்லை. ஏனென்றால் இது திருப்பதி பிரகாரத்தினுள் வீற்றிருக்கும் தெய்வத்தின் அலங்காரங்களை அகற்றிக் காட்டுவதற்கு சமமாக ஆபத்தானது. எவ்வளவு விதிமுறை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் கணிசமானோர் மாற்றுத்திறனாளிகளை கோயிலுக்குள் சுலபமாக அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு ஒரு தீர்வு பௌத்தர்களின் குறியீடே அது எனப் புரிந்துகொண்டு, எந்த புனிதமும் இல்லை என்பதே புத்தரின் கால்களின் சிறப்பு என்றும், பூமியில் இந்த மண்ணில் கால் பதித்து வாழ்வதே மானுட இருப்பு என்றும், சொர்க்கமோ நரகமோ இல்லையெனவும் அவர் சொல்லியிருக்கிறார் என்றும், அந்நோக்கிலே புத்தரின் கால் வழிபடப்படுகிறது, அவரே தேவைப்படும் போது புலாலும் உண்ணலாம் என அனுமதித்தவர் எனவும் ஏற்றுக் கொள்வதே. இந்த கால்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறினால் கணிசமான மாற்றுத்திறனாளிகள் நிம்மதியடைவர். ஏனென்றால் அவர்கள் மத்தியிலும் பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தெய்வ தரிசனம் செய்ய ஆசையாக இருக்கும் இல்லையா? ஒரு பழைய பௌத்த நம்பிக்கையை, தொன்மத்தைக் காட்டி அவர்களை வெளியேற்றுவது என்ன ஒரு அபத்தம்!


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...