Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பெருத்த அவமானம்



பெருத்த அவமானம்

பெட்ரோ அல்மொதோவரின் 1989இல் வெளியான Time Me Up, Tie Me Down படத்தை காப்பி அடித்து “குணாவை” கமல் எடுத்தார் என்று சொல்வது கமலுக்கு அவமானம் அல்ல. அது அல்மொதோவருக்கே அவமானம். ஏனென்றால் அது “குணாவை” விட பலமடங்கு மேலான சமகாலத்தன்மை கொண்ட படம். “குணாவில்” அடிப்படையான தர்க்க ஒழுங்கே இல்லை. மிகையான கற்பனாவாதத்தைக் கொண்டு வந்து, மத நம்பிக்கைகளுடன் கலந்து, மிகையான காதலையும், அதன் பாலான தியாகத்தையும் காட்டியிருப்பார் கமல். அதனாலே அப்படம் வெல்லவில்லை. “குணாவில்” யாரும் இயல்பான உலகில் இல்லை. குணா எதற்காக காதலில் விழுகிறான் என்பதும் தெளிவாக நிறுவப்படவில்லை. மோசமான திரைக்கதையை வைத்து நல்ல படம் எடுக்க முடியாது. அது திருடப்பப்பட்ட கதையோ இல்லையோ.
அல்மொதோவரின் படத்திலோ ரிக்கி எனும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கை வெறுமையிலே துவங்குகிறது. இறுதிக் காட்சியில் அவன் தன் குடும்ப வீட்டின் இடிபாடுகளை நோக்கிக் கொண்டு நின்றிருப்பான். அப்போது தான் அவனைத் தேடி அவன் காதலி திரும்பி வருவாள். அதுதான் அவன் பிரச்சினை. அதுதான் அவளின் பிரச்சினையும். இருவரும் வாழ்க்கையின் அடித்தளமும் இடிபாடுகள் தாம்.


அவனுடைய வாழ்க்கை அந்த இடிபாடிகளில் இருந்தே துவங்குகிறது. அங்கிருந்து அவன் பார்ப்பதெல்லாம் அபத்தங்களைத் தான். அப்படத்தில் யாருமே இயல்பாக நடந்துகொள்வதில்லை. மனநல மருத்துவமனையின் பிரதான மருத்துவரில் இருந்து சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள், ரோட்டில் வண்டியை பார்க் பண்ணியிருப்பவர்கள், கடையில் பொருள் விற்பவர்கள், தெருவில் போதை மருந்து விற்கும் குற்றவாளிகள் வரை எல்லாருமே அரைப்பைத்தியமாகவே திரிவார்கள். ஏனென்றால் வாழ்க்கை மிகப்பெரிய வெறுமையின் மீது கட்டப்பட்டிருக்கிறது. எதைக் கொண்டு அதை நிரப்பி அர்த்தத்தை காண்பது என்பதே பெரும் சவாலாக இருக்கிறது. நாயகியான போர்ன் நடிகை மெரினாவும் அப்படித்தான். அவளால் செக்ஸிலோ தொழிலிலோ நிம்மதியும் நிறைவும் காண முடியவில்லை. அதனால் தான் தன்னைக் கடத்தும் ரிக்கியிடம் வாழ்வின் பொருளைத் தேடும் அளவுக்கு அவள் இறுதியில் போகிறது. இப்படம் முழுக்க நகைமுரண் மின்சாரம் போல ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு மெரினாவின் பாத்திரத்தைப் பார்க்கும் போது ஓஷோ, ஜக்கி வாசுதேவ், நித்தி போன்றோரின் ஆசிரமங்களில் தம்மை அடிமையாக மாற்றிக்கொண்ட பெண்களே நினைவுக்கு வந்தார்கள். அரசியல் கட்சிக்காக அடித்துக் கொள்கிறவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். தமக்கு அடிப்படையில் நம்பிக்கையில்லாத மதவாதத்தின், தேசியத்தின் பெயரில் கலவரத்தில் ஈடுபடுகிறவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இப்படி எவ்வளவோ சிந்தனைகளை அப்படம் தூண்டுகிறது. ஆனால் இதை நீங்கள் “குணாவுக்கு” சொல்ல முடியுமா? “குணா” இன்று இல்லாத ஒரு பழங்காலத்தின் விழுமியத்தை பேச முயல்கிறது. அப்படம் மட்டுமல்ல கமலின் பல படங்களுக்கும் இது பொருந்தும். அவர் மிக கவனமாக தன் காலத்தின் மனநிலையை, சிக்கல்களை விவாதிக்காமல் வேறெதையோ பேசி ஜல்லியடிப்பார். அதற்குள்ளும் போனால் ஒன்றுமே இருக்காது. கமலை விட வி. சேகர் எவ்வளவோ மேலான இயக்குநர் என்று சொல்வேன் - அவருடைய படங்களில் தன் காலத்தின் சமூக மாற்றங்கள், குடும்ப சிதைவுகள், விழுமியங்களின் நசிவு குறித்த விமர்சனங்கள் இருக்கும். இ.எம்.ஐ, குடி, ஊழல், சுதந்திரத்தின் பெயரிலான பொறுப்பின்மை என நாம் இப்போது நீங்கள் பார்த்தாலும் அட இது சமகாலம் போல இருக்கிறதே எனத் தோன்றும். கமலின் எந்த படத்துக்காக இதை நீங்கள் சொல்ல முடியுமா? “தேவர் மகன்” திரைக்கதை அளவில் நல்ல படம், ஆனால் அது பேசும் சமகாலப் பிரச்சினை என்ன? ஒன்றுமில்லை. “ஹே ராமில்” இருந்து நாம் சமகாலத்திற்கு எதையாவது எடுத்துக்கொள்ள முடியுமா? இஸ்லாமியர் கொடூரமான கொலைகாரர்கள், பலாத்காரம் செய்து துரோகமிழைக்கும் ஆபத்தானவர்கள் என்பதையா? இருந்தும் இந்துக்கள் அவர்களை எதிர்த்து கலவரம் செய்யாமல் மன்னித்து சகித்து போக வேண்டும் என்பதையா? ஏன் பாபர் மசூதி இடிப்பில் இருந்து கமலால் ஒரு படத்தை எடுக்க முடியவில்லை? கமலுக்கு தான் வாழும் காலத்தின் அரசியலைப் பேச மிகுந்த தயக்கம் உள்ளது. அது அவரது இயல்பிலேயே உள்ள பிரச்சினை. அதை அவர் பழைய விழுமியங்களையும் பழைய வரலாற்றையும் கொண்டு மூடி விடுவார். அது அவரது அரசியல் கட்சியின் செயல்பாடுகளிலும் உள்ளது. அதுவே அவரது சினிமாவின் அரசியல் தெளிவின்மையாக நமக்குத் தெரிகிறது. தொழில்நுட்ப சமத்காரங்களைக் கொண்டு அதை அவரால் மறைக்கவும் முடியாது. 


அல்மொதோவரிடம் இம்மாதிரியான குழப்பங்கள் இல்லை. அவர் தான் காணும் உலகின் பிரச்சினைகளை பகடி பண்ணி மரண அடி அடிக்கிறார். அல்மொதோவருக்கு தன் காலம் பற்றி தெளிவான தரிசனம் உண்டு. கமலுக்கு அப்படியான ஒரு தரிசனம் சுத்தமாக இல்லை.

அவரிடம் இருந்து கதையை இவர் திருடி விட்டார் என சொல்வதைப் போல அல்மொதோவருக்கு பெரிய அவமானம் ஒன்றில்லை. விட்டு விடுவோம்!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...