Skip to main content

டிராபிக் சிக்னல்

நான் அடிக்கடி பார்க்கும் ஒன்று இது. இரண்டு கிறித்தவர்கள் சந்திக்கும் போது தற்செயலாக ஒரு விவிலிய மேற்கோளையோ கதையையோ குறிப்பிட்டு விட்டால் மற்றொருவர் அதன் பொருளை மறுத்தோ திருத்தியோ பேசுவார். தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். இன்னொரு கிறித்தவரும் அங்கு வந்துவிட்டால் அங்கு ஒரு பெரிய சர்ச்சையே எற்படும். சட்டென்று எனக்குள் இருக்கும் அவநம்பிக்கையாளன் விழித்துக் கொண்டாலும் அவர்களுடைய ஈடுபாட்டை நான் எப்போதுமே வியப்பேன். 

ஆனால் நான் ஒரு போதும் பார்க்காதது என்ன தெரியுமா? இரண்டு பேர் சந்திக்கும் போது திருக்குறளை குறிப்பிடுவார்கள். ஆனால் யாரும் அதன் பொருளை மறுத்து விவாதித்து என் வாழ்க்கையில் ஒருமுறை கூட நான் கண்டதில்லை. இத்தனைக்கும் உலகப் பொதுமறை என்கிறார்கள். குறளை சைவ, வைண, பௌத்த, ஜைன பார்வைகளில் மறுத்தும் ஏற்றும் யாரும் சர்ச்சித்து கேட்டதில்லை. என் பள்ளியிலும் எந்த ஆசிரியரும் கேட்டதில்லை. தமிழர்கள் விவிலியத்தை, குரானைக் கற்கும் ஆழத்துடன் குறளைக் கற்பதோ பேசுவதோ இல்லை என்பதே உண்மை. அதன் ஒலியழகைத் தாண்டி அதில் ஈடுபாடு கொள்வதில்லை.

எத்தனை நூறு நூறு உரைகள் வந்துவிட்டன. எத்தனை ஆயிரம் மாணவர்களை மனனம் செய்ய வைத்து அழகு காண்கிறோம், பரிசு கொடுக்கிறோம். ஆனால் ஏன் அதன் பொருள் பற்றின அக்கறை இல்லை? 

வெள்ளத்தனைய மலர்நீட்டம் என ஏன் கூறுகிறார்? ஒன்றை சார்ந்து மட்டுமே உயர்வு என ஏன் கூறுகிறார்? இது dependent co-orginationஆ என்று யாரும் கேட்டுப் பார்த்ததில்லை. ஏன் கல்வியை தகவலாக அன்றி நிலத்தடி நீராக, தொட்டனைத் தூறும் மணற்கேணியாகக் கூறுகிறார்? நவீன கல்வி அப்படி கூறவில்லையே? இப்படி நான் எதை சிந்தித்தாலும் நான் ஏற்கனவே கற்ற குறள்கள் என் மனதுக்குள் உழன்றுகொண்டே இருக்கின்றன. பௌத்தத்தை, நவீன பிரச்சினைகளை என்னால் குறளைத் தாண்டி பார்க்க முடிந்ததில்லை. ஆனால் இந்த கேள்விகளை நான் வெகுமக்களின் அன்றாட உரையாடலில் நான் கண்டதே இல்லை. சிவனடியாரைப் போலத் தோன்றும் வள்ளுவர் ஏன் சிவனைப் பற்றி பேசுவதில்லை எனக் கேட்பதில்லை. மோடியின் உச்சரிப்பை கிண்டல் பண்ணி சிரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.

இந்த உலகில் எந்த ஊரிலாவது மக்கள் தாம் மனனம் செய்த ஒன்றைப் பற்றி யோசிக்கவோ பேசாமலோ இருக்கிறார்களா? ஒரு சமாதானத்துக்காக இந்த விசயங்கள் நம் கூட்டு நனவிலியில், உபமனத்தில் உள்ளன என கூறிக்கொள்ளலாம். ஆனால் நிற்க அதற்குத் தக என்றால் என்னவென்று தெரியாமல் எப்படி நிற்க முடியும்? சிறுபான்மையினர் தன் மறைநூல்களை கற்கும் அளவில் பத்து சதவீதம் கூட ஏன் தமிழர்கள் தம் மறைநூலான குறளை பொருளுணர்ந்து கற்பதோ விவாதிப்பதோ இல்லை?

இசை, இலக்கியம் மட்டுமல்ல ஒரு மறைநூலையும் டிராபிக் சிக்னலைப் போலத் தான் டீல் பண்ணுகிறோம் போல!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...