முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிந்தாமணியே வா


அண்மையில் “சீவக சிந்தாமணியைப்” படித்துக்கொண்டிருக்கும் போது சிந்தாமணி என்றால் என்ன பொருள் என யோசித்து அதைத் தேடினால் அது ஒரு பௌத்த சொல்லாடல் (money jewel symbol) என்றும் உலகம் முழுக்க பௌத்தம் சென்றுள்ள இடங்களில் “மணி” எனும் சொல் போயுள்ளது எனும் தகவல் கிடைத்தது. ஐந்து உலக அனுபவ திரட்சிகளான ஸ்கந்தங்களை மூன்று வித விடங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுவதே இந்த மணியின் / மாணிக்க கல்லின் பயன். இந்த கல்லை கலங்கிய நீரில் வைத்தால் நீர் தெளிவாகி குடிக்கத் தகுந்ததாகும், இருளில் அது உலகைத் துலக்கமாக்கி வழிகாட்டும் எனக் கூறப்படுகிறது. இது மேற்சொன்ன ஆன்மீகப் பயிற்சிக்கான குறியீடு மட்டுமே. இந்த ஸ்கந்தமே கந்தம் என பாலியிலும் அதில் இருந்து தமிழில் கந்தன் எனும் சொல்லும் வருகிறது. சரி “சிந்தா” என்றால் என்னவெனில் “சிந்தி”, “சிந்தனை” என்பதில் இருந்து வருகிறது. இதை பௌத்தத்தில் பருவுலகை நோக்கிய பிரக்ஞையின் உந்துதல், விசை, அக ஊக்கம் (will) என விளக்குகிறார்கள். அதாவது தன்னைத் தெளிவாக்கி துக்கத்தை அறுத்து வாழ்வதற்கான மனநிலை வாய்க்கப்பெற்றவரே ‘சிந்தாமணி’, சிந்திக்கும் மாணிக்கம். என்னவொரு அபாரமான கற்பனை. எந்த மந்திரமும் அற்புதமும் நமது அக விசையில் இருந்து மட்டுமே தோன்ற முடியும் என்கிறது பௌத்தம். ஜைனம் பௌத்தத்தில் இருந்து நிறைய கருத்துருவங்களை, உவமைகளை கடன்பெற்றுக்கொண்டது என்பதாலே இந்த சிந்தாமணி அவர்களிடம் சென்று சீவகனின் பெயருடனும் நூலில் சேர்ந்து கொள்கிறது என நினைக்கிறேன். இன்றும் சிந்தாமணி கோயில்கள் சில ஜைனர்களுக்கு உள்ளன. இந்த சிந்தாமணியின் மணி தான் “மணிமேகலையிலும்” வருகிறது என நினைக்கிறேன்.

என்னை வெகுவாகத் தூண்டியது சிந்தி, சிந்தனை செய் ஆகிய பிரயோகங்களின் பொருள் வெறுமனே ஒரு விசயத்தை கருத்தில் கொள்வதோ பகுத்தறிவை பயன்படுத்துவதோ மட்டுமல்ல, சிந்திப்பது இருத்தலுக்கு இணையான செயல்பாடு, அதுவே இருத்தலின் அடிப்படையாக இருக்கிறது என்பதே. நீங்கள் ஒரு பெண்ணை அணைக்கும் போது அவளை ‘சிந்திக்கிறீர்கள்’. நடக்கும் போது உலகை ‘சிந்திக்கிறீர்கள்’. என்ன வியப்பு எனில் ஹைடெக்கரும் அனேகமாக இப்போருளில் தான் சிந்தனையை விளக்குகிறார். அவர் சிந்திப்பதை எளிய பகுத்தறிவு சார்ந்த யோசனைக்கு எதிரான ஒன்றாக வைக்கிறார். Dwelling of the presence-of-what-is-present within myself என விளக்குகிறார். நீங்கள் இந்த பார்வையை நீட்சேயிடமும் பார்க்க முடியும். நல்லா சிந்திச்சுப் பாரு என ஒருவர் சொல்லும் போது முழுமையாக இவ்வுலகில் இருக்கப் பயில் என்றும் பொருள் வருகிறது. நமது மொழி அவ்வளவு ஆழமானது. ஒரு சொல்லுக்குப் பின்னால் அவ்வளவு ஆழமான தத்துவம், வாழ்க்கைப் பார்வை உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...