Skip to main content

எழுத்து நம் வாழ்க்கையை விட மேலானது

 கடுமையான மன அழுத்தத்தில், வேலைப் பளுவின் இடையில் கூட நான் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறேன். எப்போதாவது அமையும் ஓய்வு நாட்களில் தான் என்னால் எழுத முடியாமல், கொம்புகளுடன் ஒரு சோம்பல் வந்து தோளில் அமர்ந்துதூங்கு, வெட்டியாய் இரு, ஒன்றும் செய்யாதேஎன நடத்துகிறது. நீதிமன்றம், வக்கீல் அலுவலகம், பணத்துக்கான தேடல், கடுமையான உடல் வலியைத் தரும் பேருந்து பயணம், புதுப்புது நண்பர்களின் வீடுகளில் சில மணிநேரத் தங்கல் என இருந்த மணமுறிவு கொடுமை நாட்களில் கூட நான் தினமும் எழுதியிருக்கிறேன். இதற்கான காரணத்தைப் பற்றி ஏற்கனவேஎழுதியிருக்கிறேன்’ - எழுத்தில் ஒரு பிரத்யேக இன்பம் உண்டு. எழுத்தின் வழி சிந்திக்கும், அறிவைப் பரவலாக்கும் மகிழ்ச்சி. புனைவின் வழி மற்றொருவராக மாறி இன்னொரு அகமொழியில் செயல்படும் சாத்தியம் தரும் திளைப்பு, இதற்கும் போதை மருந்து பயன்பாட்டில் கிடைக்கும் டிரிப்பாகும் அனுபவத்துக்கும் சில தொடர்புகள் உள்ளதாகத் தோன்றுகிறது. நம்முடைய அனுபவ, உணர்வு, சிந்தனை சார்ந்த உள் உலகம முழுக்க மாற்றியமைக்கப்படும் போது நாம் பருவுலகில் ஒரு பக்கமும், அதற்கு சம்மந்தமில்லாத இன்னொரு உலகில் மற்றொரு பக்கமும் வாழ்ந்துகொண்டிருப்போம். அங்கு நடப்பதை எதுவும் இங்கு இருக்கும் உங்களை அசைக்காது. இதற்காகவே நான் தினமும் என் நாவலைத் திறந்து அதனுள் புகுந்து கொள்வேன்


எனக்கு வேலை, குடும்ப உறவுகள், நட்புறவுகள், சடங்குகள், சமூக அரசியல் செயல்பாடுகள், பயணம், உணவு, கேளிக்கை சார்ந்து பெரிய மகிழ்ச்சி எதையும் இந்த வாழ்க்கை அளிப்பதில்லை. என்ன இன்பம் கிடைத்தாலும் அது மிக மிக சொற்பமே. மேலும் இந்த வாழ்க்கை மீதான ஒரு ஆழமான கசப்பு சிறுவயது முதலே எனக்குள் உள்ளது - சும்மா இருப்பது சுகமே என்பதைக் கடந்து நான் கண்ட வரையில் எல்லாருடைய உலகமும் கடும் வெறுமையிலே உழல்கிறது. அதிருப்தி மட்டுமே மக்களுக்கு எஞ்சுகிறது. இந்த வாழ்வில் தேடும் ஒவ்வொன்றும் நம்மை ஏமாற்றுகிறது. வரலாற்றை வாசிக்கும் போதும் எல்லா காலத்திலும் மக்கள் இதே போல அல்லது இதை விட கொடுமையான நிலையில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். மானுடவாதிகளும் கற்பனாவாதிகளும் ஒரு கிளுகிளுப்புக்காக மானுட சகோதர திரளல், பேரன்பு, பெருங்கருணை, இயற்கையுடன் ஒன்றுதல் என போலியாக டிரிப் ஆகிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் சொல்லும் எதுவும் இயல்பாக இங்கு இல்லை. மானுட மேன்மையை உருவாக்கும் முயற்சிகள் கடும் துன்பத்தையே அளித்து வந்துள்ளது என்பதே வரலாறு. இயற்கை என நான் காண்பது எங்கும் உடைபடும் மலைகளும், அழியும் வனங்களுமே தான். ஒருவர் கண்ணீர் விட்டு அழுதால் கூட இன்று அத்துளிகள் மண்ணில் விழாது, காங்கிரீட்டில் தான் விழும். தரையில் கூட அரை அங்குலம் மண்ணைக் காணோம். கடைசியாக அறம். அதுவும் ஒரு பித்தலாட்டமே என என் அனுபவங்கள் கற்றுக் கொடுத்தன. நீங்கள் காதலியுடன் இருக்கையில் அவளை மறக்கவும், நண்பர்களுடன் பேசும் போது அவர்களுடைய சொற்களை, எண்ணங்களைக் கடந்து வேறெங்கோ செல்லவே விரும்புகிறீர்கள். வேலை செய்யும் போது, உணவருந்தும் கூட அப்படித்தான். நீங்கள் சட்டம் கற்றவர்களைப் பாருங்கள் அவர்களுக்கு நீதியிலும் சட்டத்தின் மேன்மையிலும் உள்ள நம்பிக்கை முதலில் போய்விடும், அதன் பிறகே அவர்களால் தொழில் செய்ய முடியும். மருத்துவர்களும் கல்வியாளர்களும் கூட அப்படித்தான். மக்களுக்காக செயல்படும் அதிகாரிகள் மக்களிடம் இருந்துவிலகினால்மட்டுமே அதிகாரம் செலுத்த முடியும். எல்லாமே தான் நம்பும் ஒன்றை பரிகசிக்கும் முயற்சியாக முடிகிறது. வெற்றுச் சடங்காகிறது. ஆனால் எழுத்தில் மட்டுமே முழுமையான மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கிறது. எழுத்தில் மட்டுமே எழுதும் விசயங்களை மறக்கும் தேவை எழுவதில்லை.

 எழுத ஒன்றுமே இல்லை எனும் நிலையும் வந்ததில்லை - எனக்கு இந்த வாழ்க்கை மீது அவ்வளவு கோபமும் கேள்விகளும் உண்டு. வாழ்க்கையுடன் மோதவும், அதிருப்தி கொண்டு அதை மாற்றவும் முயலும் வரை எழுத ஏராளமான விசயங்கள் எனக்கு இருக்கும் என நினைக்கிறேன்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...