முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விதி

 எப்போதுமே எழுதுவதற்கு போதுமான நேரமில்லை எனும் உணர்வு எனக்கிருக்கிறது. ஒரு நாவலை எழுதி முடித்து அதைத் திருத்துவதற்குள் இன்னும் நான்கைந்து நாவல்கள் எழுதக் கேட்டு கதவைத் தட்டுகின்றன. அவற்றை முடிக்காது பாதியில் விட்டுவிடும் போது அவை பேய்களாகி என் உறக்கத்தைக் கெடுக்கின்றன. அதனாலே வார இறுதி நாளை நான் பயணத்தில் செலவழிப்பதில்லை. எழுத்துக்குள் மூழ்கி விடுகிறேன். எங்காவது போவதென்றால், நண்பர்களை சந்திக்க நினைப்பதென்றால் அதற்கு அரைநாள் ஓடிவிடும். இன்னொரு பக்கம் வீட்டிலேயே இருந்தாலும் மனம் ஓய்வுக்காக ஏங்கும். ஞாயிற்றுக் கிழமையை உறக்கமும் வேடிக்கையுமாக கழிக்காவிடில் திங்கள் அன்று பெரும் சோர்வு தோளில் சாய்கிறது. பத்து, இருபது நாட்கள் விடுமுறை கிடைத்தால் உடனடியாக ஒரு நாவல் காத்து நிற்கிறது. எனக்கென்னவோ என்னைப் பற்றி யோசிக்க பழைய படங்களில் வரும் ஐந்து பெண்களை கரை சேர்ப்பதற்காக போராடும் அப்பா / அண்ணன் தனக்கென எதை யோசித்தாலும் ஒவ்வொரு பெண் குழந்தையின் / தங்கையின் முகமாக நினைவுக்கு வரும் காட்சி தோன்றுகிறது. இவ்வளவு புத்தகங்களையும் ‘கரை சேர்க்கும்’ போது இன்னும் பத்து எழுத்துத் திட்டங்கள் புதிதாதக் தோன்றும் என நினைக்கிறேன். ஆனால் என்னுடைய நண்பர்கள் எப்படி ஜாலியாக ஊர் ஊராகப் பயணித்து விழாக்களை சிறப்பிகிறார்கள், நண்பர்களைத் தேடி சந்தித்து அளவளாவுகிறார்கள் எனப் புரியவில்லை. நாவலாசிரியர்கள் குடும்பஸ்தர்களாகவும் மற்ற எழுத்தாளர்கள் பேச்சிலர்களாகவும் இருப்பதுதான் விதியா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.