ஜெ.எம் கூட்ஸியின், காப்காவின் நாவல்கள் இருவேறு விதங்களில் "நிழல் பொம்மையின்" படைப்பாக்கத்தில் தாக்கம் செலுத்தினர். ரகுவின் பாத்திர அமைப்பிற்கு கூட்ஸியின் நாயகர்கள் துவக்கப்புள்ளி. காப்காவின் “விசாரணை” இந்நாவலின் வடிவத்திற்கு தூண்டுதலாக அமைந்தது. ஆனால் எழுத்து என்னை எடுத்துச்சென்ற வேகத்திற்கு கூட்ஸி மெல்லமெல்ல என்னிடமிருந்து கழன்றுகொண்டார், காப்கா மட்டுமே நாவலின் பிற்பகுதிவரை வந்தார். முடிவில் இது என் கைக்கு ஒதுங்கிய நாவலாகிவிட்டது.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்