ஜெ.எம் கூட்ஸியின், காப்காவின் நாவல்கள் இருவேறு விதங்களில் "நிழல் பொம்மையின்" படைப்பாக்கத்தில் தாக்கம் செலுத்தினர். ரகுவின் பாத்திர அமைப்பிற்கு கூட்ஸியின் நாயகர்கள் துவக்கப்புள்ளி. காப்காவின் “விசாரணை” இந்நாவலின் வடிவத்திற்கு தூண்டுதலாக அமைந்தது. ஆனால் எழுத்து என்னை எடுத்துச்சென்ற வேகத்திற்கு கூட்ஸி மெல்லமெல்ல என்னிடமிருந்து கழன்றுகொண்டார், காப்கா மட்டுமே நாவலின் பிற்பகுதிவரை வந்தார். முடிவில் இது என் கைக்கு ஒதுங்கிய நாவலாகிவிட்டது.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

Comments