ஜெ.எம் கூட்ஸியின், காப்காவின் நாவல்கள் இருவேறு விதங்களில் "நிழல் பொம்மையின்" படைப்பாக்கத்தில் தாக்கம் செலுத்தினர். ரகுவின் பாத்திர அமைப்பிற்கு கூட்ஸியின் நாயகர்கள் துவக்கப்புள்ளி. காப்காவின் “விசாரணை” இந்நாவலின் வடிவத்திற்கு தூண்டுதலாக அமைந்தது. ஆனால் எழுத்து என்னை எடுத்துச்சென்ற வேகத்திற்கு கூட்ஸி மெல்லமெல்ல என்னிடமிருந்து கழன்றுகொண்டார், காப்கா மட்டுமே நாவலின் பிற்பகுதிவரை வந்தார். முடிவில் இது என் கைக்கு ஒதுங்கிய நாவலாகிவிட்டது.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments