முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாவு வீட்டுப் படங்கள்


அரிஸ்டாட்டில் தனது கவிதையியல் நூலில் முக்கியமான விசயம் ஒன்றைக் கூறுகிறார் - கடைசிக் காட்சியில் யாரையாவது சாகவைத்து மக்களின் அழுகையைத் தூண்டுவது ஒரு பலவீனமான நாடகத்தின் (கதையின்) அறிகுறியாகும். செயலே கதையே தவிர நிகழ்வல்ல. மக்களின் உணர்ச்சியை வெறுமனே தூண்டுவதைத் தவிர இக்கதைகளால் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் பிரதான பாத்திரம் செயலில் ஈடுபடும்போது, தன் இலக்கை அடைய முயலும்போது அது கதையாகிறது. அதன்வழியாக பார்வையாளருக்கும் முகமை கிடைக்கிறது. நிகழ்வில் ஒருவர் தற்செயலாகப் (கதைக்கு அவசியமின்றி) பலியாகும்போது அங்கு கதையே இல்லை. இல்லாத கதையை இருப்பதாகக் காட்ட நாடக ஆசிரியர்கள் யாரையாவது சாகடித்துக்கொண்டே இருக்கிறார்கள் என அரிஸ்டாட்டில் தன் காலத்தைய மோசமான நாடகங்களைச் சுட்டி விமர்சிக்கிறார்.

அண்மையில் வெளியான வாழை, அமரன் உள்ளிட்டப் படங்களில் இந்த சாவை வைத்து இல்லாத கதையை இருப்பதாகக் காட்டும், காசு சம்பாதிக்கும் போக்கு வலுவாகத் தோன்றுகிறது. Money shotsஇன் அடிப்படையில் உருவாக்கப்படும் போர்னோகிராபி படங்களுக்கும் இப்படங்களும் வித்தியாசம் இல்லை. அப்படங்களில் பெண்ணுடலும் விந்தும் எனில் இப்படங்களில் பிணமும் கண்ணீரும். இரண்டிலும் உடலார்ந்த உணர்ச்சிகளே தூண்டப்படுகின்றன - இச்சையும் அச்சமும். உணர்ச்சி அடங்கியதும் இக்கதையில் ஒன்றுமில்லை எனும் உணர்வை பார்வையாளருக்கு ஏற்படுத்தும்.

இப்படியான படங்களை எடுப்பது சுலபம் - ஏழை, பாதிக்கப்பட்டவர், தியாகி என யாரையாவது காட்டி அவர்களைக் கொன்றுவிட்டு அப்பிணத்தைக் குறித்து புரமோஷனில் அதிகமாகப் பேசி சாவு குறித்த எதிர்பார்ப்பைக் கிளறுவது. மக்கள் எப்போது சாவு விழும் எதிர்பார்ப்புடன், பரபரப்புடன், பதற்றத்துடன் ஆரம்பம் முதலே ஏதோ சாவு வீட்டுக்குள் நுழைந்ததைப்போல உணர்வார்கள். காதல் காட்சி வந்தாலும், நகைச்சுவை தோன்றினாலும் அழத்தயாராகவே இருப்பார்கள். இவை அதனாலே மோசமான சினிமாவாக மட்டுமல்லாமல் மனித முகமையை அழிக்கிற படங்களாக இருக்கின்றன. மக்களில் வாழ்வதில் ஆர்வத்தை இழக்கும் காலத்தில் இத்தகையே படங்களே அதிகம் வரும்போல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...