Skip to main content

கருண் நாயரின் கதை


கருண் நாயர் நல்ல மனவெளியில் (mental space) இருக்கிறார் என்பதை இன்று நடந்து கொண்டிருக்கும் விஜய் ஹசாரே கோப்பை அரை இறுதியில் அவரது மட்டையாட்டத்தைப் பார்க்கையில் உணர்ந்தேன். அவர் விதர்பா அணிக்கு மாறியபின்னர் பாதுகாப்பாக, நிம்மதியாக உணர்கிறார். அந்த அணியில் வேக வீச்சாளர்களும் துவக்க மட்டையாளர்களும் நன்றாக ஆடி வருவதும், அணி அக நிறைவுடன் இருப்பதும் கூட கருண் நாயருக்கு உதவலாம். இப்போது அவர் தன்னை நிரூபிக்கும் அழுத்தத்தில் இல்லை, தான் யாரெனும் குழப்பங்கள் இல்லை. இந்திய அணியில் அவருக்கு இப்ப்படியான சாதக நிலை அவர் அறிமுகமானபோது இல்லை. அங்குள்ள அரசியலையும் நெருக்கடியையும் அவரால் சமாளிக்க முடியவில்லை. மேலும் அவரது காலாட்டத்திலும் குறைகள் உள்ளன - கொஞ்சம் சீம் அசைவு உள்ள ஆடுதளத்தில் தரமான வேகவீச்சுக்கு எதிராக அவரது காலாட்டம் ஸ்தம்பித்துப் போகும் என்பதை ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது கவனித்தேன். அதனால்தான் 62.3 சராசரி இருந்தும் அவர் டெஸ்ட் அணியில் தொடர்ந்து ஆடவில்லை, ஆனால் முப்பது சராசரி உள்ள கே.எல் ராகுல் ஆடுகிறார். கே.எல் ராகுலின் காலாட்டம் வேகவீச்சுக்கு எதிராக மேலானது. (சர்பராஸுக்கு நடப்பதுதான் முன்பு கருணுக்கு நடந்தது. அவர் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.)


இப்போதும் கருண் நாயரை டெஸ்டை விட ஒருநாள் போட்டியிலே எடுக்க வாய்ப்பதிகம். ஆனால் அதற்கு விராத் கோலி ஓய்வுபெற வேண்டும். கருண் அதுவரை இப்படியே ரன்களாக அடித்துக் குவிப்பாரா? தெரியவில்லை. ஆனால் மார்ச்சில் நடக்கப்போகும் ஐ.பி.எல்லில் இந்த ஆட்டநிலையை அவர் தொடர்ந்தால் அல்லது ஆட்டவாய்ப்பு கிடைத்தால் ஒருவேளை அவர் இவ்வாண்டே இந்திய அணிக்குள் வந்துவிடுவார்.


பிரேட் மேனுக்கு கிட்டத்தட்ட நிகராக சராசரியை ஒரு காலத்தில் வைத்திருந்தும் சர்பராஸ் கான் இந்திய அணிக்குள் இடம்பெற முடியாமல் போனது போலத்தான் கருணின் நிலையும். ரன் அடிப்பதை

விட இந்திய அணிக்குத் தேவையான ஒன்றை இவரால் தரமுடியுமா என்பதே கேள்வி - வித்தியாசமான ஸ்டைல், தரமான பந்துவீச்சை சமாளிக்கும் தடுப்பாட்டம் அல்லது அடித்தாடும் திறன், அதீதமான ஸ்டிரைக் ரேட், ஆல்ரவுண்ட் திறன் இப்படி எதாவது ஒன்று இருக்க வேண்டும்.


 கருண் நாயரைப் போலவே இருந்து ஒரே ஒருவர்தான் அதிக வாய்ப்புகளைத் தொடர்ந்து எல்லா வடிவங்களிலும் பெற்றார் - அவர் ஷுப்மன் கில். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டின் செல்லப்பிள்ளை. எல்லாருக்கும் அந்த கொடுப்பினை இராது. மற்றவர்கள் எல்லாம் கடுமையாகப் போராடித்தான் வந்தார்கள். 


கருண் தன் நம்பிக்கையை கைவிடக் கூடாது. தினேஷ் கார்த்திக் மீள்வருகை நிகழ்த்தி உலக்க்கோப்பை தன் 35வது வயதுக்கு மேல் இந்திய அணியில் இடம்பெறவில்லையா? நடக்கும். ஆனால் இதுவரை வாய்ப்பு மறுக்கப்படுவது சதித்திட்டத்தாலோ பாரபட்சத்தாலோ அல்ல எனும் தெளிவு அவருக்கு இருக்க வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...