Skip to main content

மதகஜராஜா எனும் பேய்ப்படம்

 


அப்படி என்னதான் இருக்கிறது, 13 ஆண்டுகள் தாமதமாக வந்த ஒரு படம் எப்படி பிரம்மாண்ட வெற்றி பெற்றதெனத் தெரிந்துகொள்ளவே பார்க்க சென்றேன். முதல் அரைமணி நேரத்தில் புரிந்துபோனது. நகைச்சுவை மட்டுமல்ல, இப்போது வெளிவரும் அரசியல் சரித்தன்மை மிக்க, முற்போக்கு பாவனை, woke படங்களின் மீதான வெறுப்பையே இப்படத்தின் வெற்றி மூலமாக மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய படங்களில் நீங்கள் வறட்டுத்தனமான உணர்ச்சிகளையும் போலியான பரபரப்பையுமே காணமுடிகிறது, அவை பெரும்பாலும் நகரமயமான சூழலில் ஆண்மையற்ற நாயகர்களையும், பெண்மையற்ற நாயகியரையுமே காட்டுகின்றன. கதையில் எந்த உணர்ச்சி ஒன்றுதலும் இருப்பதில்லை, காமம் துளியும் இல்லை, அப்படி வந்தாலும் அக்காமம் துய்க்கக் கூடியதாக அல்லாமல் பிளாஸ்டிக்காக உள்ளது. போலியான சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்டவர் அரசியல் என உணர்ச்சிப்பெருக்கான ஒன்றை உருவாக்கி அதை வைத்து கதை வெறுமையாக உள்ளதை மறைக்கிறார்கள். நாயகன் ஆயிரம் பேர்களை பீரங்கியால் சுடுவது, எந்திரத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேதிரிவது என வன்முறையிலும் பிளாஸ்டிக் தன்மை அதிகமாகிவிட்டது. கொல்பவர்களும் கொல்லப்படுபவர்களும் மனிதர்கள் அல்ல எனும் பிம்பத்தை மக்கள் மனத்தில் விதைக்கும்போது இந்த வீடியோ கேம் தன்மையைத் தாண்டி அசலான படமொன்றை மனிதர்கள் சண்டையிடும், பெண்ணுடலுக்கு ஆசைப்படும், அற்ப ஜோக் அடிக்கும் படமொன்றைப் பார்க்க மக்கள் தவிக்கிறார்கள் அதனாலே தற்செயலாக மிகமிகத் தாமதமாக வெளியான, டிரெண்டுக்கு வெளியே இருக்கும் இப்படத்தை ரசித்துக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக திரையரங்கில் சந்தானத்தின் ஆபாச ஜோக்குகளுக்கு ஆண்களும் பெண்களும் சிரிப்பதைக் கண்டபோது எனக்கு அவர்களுடைய ரசனை குறித்து கோபம் வரவில்லை. தமிழிலுள்ள வறட்சியை நினைத்து வருத்தமே ஏற்பட்டது


கடந்த 8 ஆண்டுகளில் குறிப்பாக தமிழ் சினிமாவின் போக்கு வெகுவாக மாறி வெகுஜன மக்களின் ரசனையில் இருந்து விலகிவிட்டது. மொபைலில் இன்ஸ்டா பார்க்கிற, கேம் விளையாடுகிற இளைஞர்களைத் தவிர யாரும் படம்பார்க்க மாட்டார்கள் எனும் மனநிலை தோன்றியதில் சமூகவலைதளத் தாக்கத்தால் 'அர்பன் ரசனைப்' படங்கள் பரவலாகிவிட்டன. அப்படங்களில் எல்லாரும் சும்மா பப்பில் நடனமாடுவார்கள், அல்லாவிட்டால் அரசியல் சரித்தன்மையுடன் வசனம் பேசுவார்கள், அல்லது புரட்சி செய்வார்கள். காதல், சண்டை, சாகசம், நகைச்சுவை எல்லாம் பின்னுக்குப் போய்விட்டன. பல வயதுகளில் இருக்கும் மக்களை திரையரங்குக்கு கொண்டு வரலாம் எனும் நம்பிக்கை இயக்குநர்களுக்குப் போய்விட்டதால் சிறுமி கற்பழிக்கப்படுவதை விகாரமாக மிகையாகச் சித்தரித்து உணர்ச்சிகளைத் தூண்டி படங்களை ஓடவைக்கும் நிலைக்குப் போனார்கள். நகரத்தைத் தாண்டி, 'ஒடுக்கப்பட்டவர்களைத்' தாண்டி, விக்டிம்களைத் தாண்டி, வேறற்றுப் போகாத, சிறுநகர, கிராமத்து மக்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மறந்துவிட்டார்கள். காதலோ, சண்டையோ சாகசமோ மண்டையை சுவரில் மோதி ரத்தத்தை சிதறடிப்பது, தொடர்ந்து கத்திக்கொண்டே இருப்பது, அண்ணன் தங்கையின் கழுத்தை அறுப்பது, தம்பி அண்ணனைக் கத்தியால் குத்துவது, மகன் அம்மாவைக் கல்லைப் போட்டுக் கொல்லுவது, காட்சிக்கு காட்சி யாரையாவது கொன்று புதைத்துக்கொண்டே கூலாக ஓட்டலில் வேலையும் செய்வது போன்ற விசயங்கள் இன்றி கதைசொன்னால் கவனிக்க மாட்டார்கள் என நம்பினார்கள். ஆனால் இயல்பாக மக்களிடம் உள்ள நட்பு, உறவுகளிடத்துள்ள பிடிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்ஞ்ம்மல் பாய்ஸ் போன்ற படம் இங்கே சக்கை போடுபோட்டது. இம்மாதிரியான போக்கை நீங்கள் பேய்ப்படங்கள் விசயத்தில் பார்க்க முடியும். அதாவது சனடைப்படம், குடும்பப்படம், காதல் படம் எனப் பார்த்து மக்கள் அலுத்துப் போகும்போது ஒரு பேய்ப்படம் வந்து மக்களை அசரடிக்கும், பெரிய ஹிட்டடிக்கும். இப்போதுள்ளுள்ள அலுப்பான செயற்கையான சூழலைப் பயன்படுத்தி அவ்வாறு ஹிட்டடித்த 'பேய்ப்படம்' தான் "மதகஜராஜா" (அதன் பழமையே அதன் பேய்.)


பேயென்றால் என்ன? இல்லாத ஒன்று இருப்பது. அது நிச்சயமாக இல்லையெனத் தோன்றும்போது நமக்கு பயம் அதிகமாவது. அந்த பயத்தில் இன்பம் தோன்றுவது. அந்த இன்பமே பீதியை அதிகப்படுத்துவது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பான பழைய டிரெண்டுகள், பாலியல் இரட்டை வசனங்கள், மாமியார் ஜோக், மச்சினிச்சி ஜோக், பொறுப்பின்மை, விக்டிம்மாகவோ பாதிக்கப்பட்ட குழுவைச் சேராமலோ இருக்கும், எந்த அடையாளமும் இல்லாமல் காட்டப்படும் நாயகன், தன் உடலை போகிக்கும் படி பார்வையால் அழைக்கும் பெண்கள், அவர்களைப்பொறுப்பற்றுரசிக்கும் ஆண், நாயகனே பாதிக்கப்படுபவனாக அல்லாமல் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுபவனாக இருப்பது, நண்பனைக் காப்பாற்ற போராடுவது, பிரியவிருக்கும் மனைவியை கணவனுடன் சேர்த்து வைப்பது, பிரிந்து போன காதலியை பொறாமையைத் தூண்டி ஈர்ப்பது என ரொம்ப காலாவதியான உணர்ச்சிகள், நம்பிக்கைகள், போக்குகள் இப்படத்தில் வரும்போது நமக்கு இல்லாத ஒன்று மீண்டெழுந்து வருவதைக் காணும் திகைப்பும் மகிழ்ச்சியும் வருகிறது. இதே படத்தை சுந்தர் சியோ வேறு இயக்குநரோ இன்று எடுத்திருந்தால் நாயகி நாயனைடேய் வாடா போடாஎன்று அழைப்பதாகவும் நாயகன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவள் பின்னாலே அலைவதாகவும், அதை எண்ணி நண்பனிடம் புலம்புவதாகவும் எடுப்பார்கள். ஆனால் இப்படத்தில்மனைவியை வாடிபோடின்னு கூப்பிடாமஎன்று ஆரம்பித்து ஒரு வசனம் வருகிறது. இன்று அப்படி நகைச்சுவை வைத்தால் சமூகவலைதளத்தில் பேயாக முடியை விரித்துப் போட்டுக்கொண்டு திட்டுவார்கள் என்று பயந்து இயக்குநர்கள் தவிர்ப்பார்கள். ஆனால் திரையரங்கில் மக்கள் அதை ரசித்து சிரிக்கிறார்கள். (சமூகவலைதளப் பூச்சாண்டிகளை, அரசியல் சரிநிலைப் போலிப் போராளிகளைப் பூச்சிமருந்தடித்துக் கொல்வது எவ்வளவு அவசியம் என எனக்கு அப்போது தோன்றியது.)  அஞ்சலியும், வரலட்சுமியும் இன்றைய நாயகியரைப் போல ஒல்லிக்குச்சியாக இல்லாமல் தொப்பை காட்டினாலும் அவர்களுடைய உணர்ச்சிகளும், அவர்களிடம் விஷால் காட்டும் உடல்மொழியும் நமக்கு ரொம்ப இயல்பாகத் தெரியும் அளவுக்கு இன்றைய நாயக, நாயகியர் ஏதோ அண்ணன், தங்கையைப் போல காமமின்றி நடிக்கிறார்கள்.


 அதேபோல, கைத்தறித் தொழிலாளர்கள் சார்ந்த காட்சியொன்று போகிற போக்கில் இப்படத்தில் வருகிறது. அதுவே இன்றைய படத்தில் வந்தால் அரைமணிநேரம் ஆவணப் படம் போல சாயத்தொழில், கைத்தறித்தொழிலின் அவலம் பற்றிக் காட்சியமைத்து பத்து நிமிடம் சமூகநீதி வசனம் பேசி நம்மைச் சாகடித்திருப்பார்கள். இப்படத்தில் அது தேவையான அளவுக்கு காரச் சட்னி அளவுக்கே வருகிறது. இயக்குநர் போராளி வேடம் போடவில்லை. இதெல்லாம் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.


அதுதான்மதகஜராஜாவின்வெற்றி. மிக மிக பலவீனமான (தூள் படத்தை நினைவுபடுத்தும்) கதையமைப்புகளும் காட்சிகளும் அபத்தமான லாஜிக்கும் இருந்தாலும் அதன் அப்பட்டமான புத்திசாலித்தனமில்லாத எளிமை மக்களை ஈர்க்கிறது. ஆனால் இதுபேய்தான்”. நாம் இனி இப்படியான படங்களைப் பார்க்க வாய்ப்பே இல்லை. புத்திசாலித்தனமான, மிகையான, போராளித்தனமான நாயகர்களும் நாயகியரும், கிராபிக்ஸ் சண்டைக் காட்சிகள் மிகுந்த, லாரி நிறைய மக்களை கவிழ்த்துப் போட்டுக் கொன்று ஒப்பாரி வைத்து உணர்ச்சியைச் சுரண்டி அதை அறம், முறம் எனப் பேசும் படங்கள் திரும்ப வரும். இயல்புக்கு மீள்வோம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...