Skip to main content

இலக்கியமும் தீமையும் - ஜார்ஜ் பத்தாய்



கேள்வியாளர்: இலக்கியமும் தீமையும் பிரிக்க முடியாபடி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையா?


ஜார்ஜ் பத்தாய்: தீமையில் இருந்து இலக்கியத்தைப் பிரித்துவிட்டால் அது அலுப்பூட்டுவதாகும். இலக்கியம் அடிப்படையில் பரிதவிப்பைப் பேசுவது. பரிதவிப்பு ஒன்று நிச்சயமாக தவறாகவே போகும் எனும்போது தோன்றுவது. தவறாகப் போவது தீமையாகிறது. நான் இதை எளிமைப்படுத்திச் சொல்கிறேன் என்றாலும் இப்படிப் புரிந்துகொள்ளலாம்: நீங்கள் வாசகரிடம் எல்லாம் தீமையில் போய் முடியுமென்றோ அவர்கள் படிக்கும் கதையில் அவர்கள் அக்கறை கொள்ளும் பாத்திரங்கள் தீமையான முடிவை நோக்கிப் போகிறார்கள் என்றோ காட்டும்போது அவர்கள் இதமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவான நெருக்கடிதான் இலக்கியத்தை சுவாரஸ்யமாக்குகிறது.


கேள்வியாளர்: இலக்கியம் தீமையைப் பற்றியது என்றால் அதை எழுதும் எழுத்தாளர் தாம் செய்வது தவறு எனும் குற்றவுணர்வை அடைவதுண்டா? 


ஜார்ஜ் பத்தாய்: உண்டு. இலக்கியம் எழுதுவது ஒரு வேலையாக அதனால்தான் இருக்க முடியாது.


கேள்வியாளர்: அப்படிக் குற்றவுணர்வு கொண்ட படைப்பாளிகளின் பெயர்களைச் சொல்ல முடியுமா?


ஜார்ஜ் பத்தாய்: இருவரைச் சொல்லலாம். அவர்களைப் பற்றி என் நூலில் எழுதியிருக்கிறேன். ஒருவர் போத்ரிலியர். அவர் தனது கவிதைத் தொகுப்புக்கு "தீமையின் மலர்கள்" எனத் தலைப்பிட்டதே இதனால்தான். அடுத்து காப்கா. அவர் தான் எழுதுவதே தீமை எனும் உணர்வைக் கொண்டிருந்தார். ஏனென்றால் வாழ்க்கையை வியாபாரச் செயல்பாடுகளில் ஈடுபட்டு சம்பாதிக்க பயன்படுத்தாமல் எழுதச் செலவிடுது தீமையானது என்று அவரது குடும்பத்தினர் அவருக்கு உணர்த்தியபடியே இருந்தனர்.    


கேள்வியாளர்:  எழுதுவது குற்றமெனக் கருதப்பட்டால் போத்லியருக்கும் காப்காவுக்கும் எழுதுவதே பொறுப்பற்ற செயலாகிறதுதானே... 


ஜார்ஜ் பத்தாய் குறுக்கிட்டு: அவர்களது குடும்பத்தினர் தாம் அவ்வாறு கருதினர்.


கேள்வியாளர்: இந்த குற்றவுணர்வே குழந்தைத்தனமானது எனும்போது காப்காவும் போத்ரிலியரும் இலக்கியம் எழுதுவதை குழந்தைத்தனமானது எனக் கருதினார்களா?


ஜார்ஜ் பத்தாய்: அவர்கள் தமது பெற்றோர் முன்பு ஒரு குழந்தையைப் போல உணர்ந்தார்கள் என்பது இதைத் தெளிவாக்கும். அவர்கள் சேட்டைகள் செய்து அதனால் குற்றவுணர்வு கொள்ளும் குழந்தையைப் போல உணர்ந்தனர். ஏனென்றால் அக்குழந்தை தனது பெற்றோர், அவனுக்கு மிகவும் பிடித்தமான பெற்றோர், அவன் ஒருபோதும் செய்யக்கூடாது என்று சொன்னதையே அவன் செய்து வந்தான். இதுதான் அதன் ஆகத்தீவிரமான பொருளில் தீமையாக இருக்கிறது.


கேள்வியாளர்கள்: எழுத்தாளர்கள் எழுதும்போது குற்றவுணர்வு கொள்கிறார்கள் எனில், இலக்கியமே குழந்தைத்தனம் என்றாகிறது அல்லவா?


ஜார்ஜ் பத்தாய்: இலக்கியத்தின் அடிப்படையாக சிறுபிள்ளைத்தனம் உள்ளது. நமக்கு இலக்கியம் மீதுள்ள பெருமரியாதைக்கு, எனக்குள்ள பெருமதிப்புக்கு, இது முரணாக இருக்கலாம். ஆனால் இது மிக அடிப்படையான, ஆழமான உண்மையென்று கருதுகிறேன். இலக்கியம் உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்து பார்த்தாலே உங்களுக்கு விளங்கும் (கீழான பார்வையில் இருந்து என்று நான் குறிக்கவில்லை).  


கேள்வியாளர்: பாலின்ப எழுத்து பற்றி நூலொன்றை எழுதியிருக்கிறீர்கள். பாலின்ப இலக்கியமும் குழந்தைத்தனமானதுதானா?


ஜார்ஜ் பத்தாய்: இலக்கியம் பாலின்ப எழுத்தில் இருந்து அவ்விதத்தில் வேறுபடுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் பொதுவாக பாலின்ப எழுத்திலுள்ள குழந்தைமையைப் புரிந்துகொள்வது அவசியமானது என நினைக்கிறேன். பாலின்ப கிளர்ச்சியை அடைவது தடைசெய்யப்பட்ட விளையாட்டை ஆடுவதாக ஒரு குழந்தை கற்பனையில் திளைப்பதைப் போன்றது. பாலின்ப கிளர்ச்சியின்பால் பெரும் ஈர்ப்பு கொள்வது தன் பெற்றோர் முன் ஒரு குழந்தை இருப்பதைப் போன்றது. தனக்கு எதாவது நடந்துவிடுமோ என அவன் அஞ்சுகிறான். அஞ்சுவதற்கான காரணம் சரியாக கிடைக்கும்வரை அவன் நிறுத்தப் போவதும் இல்லை. இயல்பான வளர்ந்தவர்கள் செய்வதை செய்தால் மட்டும் அவனுக்குப் போதாது, அவனுக்கு பீதியடைய வேண்டும். ஒரு குழந்தையாக எப்போது வேண்டுமெனினும் சாடப்படலாம், தாள முடியாத அளவுக்குத் தண்டிக்கப்படலாம் எனும் தீவிர அச்சத்தை அவன் உணர வேண்டும். 


கேள்வியாளர்: நீங்களும் நானும் பேசுவதைப் பார்க்கும்போது குழந்தைத்தனத்தை நீங்கள் கண்டிப்பதாக உணர்வு ஏற்படலாம். அதனாலே நாம் உங்கள் நூலின் தலைப்புக்குப் போக வேண்டும் என நினைக்கிறேன்: "இலக்கியமும் தீமையும்". நீங்கள் அதில் இலக்கியத்தையோ தீமையையோ கண்டிக்கவில்லை. அதிலுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?


ஜார்ஜ் பத்தாய்: அது ஒரு எச்சரிக்கை. இலக்கியம் ஆபத்தானது என அது சொல்கிறது. ஆனால் அதை உணர்ந்தபின்னர் அதைத் துணிந்து எதிர்கொள்வதே சரியானது. இலக்கியமெனும் தீமையை நாம் துணிந்து நேர்கொள்வது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதை நீங்கள் சந்திக்கவில்லை எனில் நீங்கள் மனிதராகவே இருக்க முடியாது எனும்படியான மிகப் பெரிய, அசலான ஆபத்து அது. இலக்கியத்தில் மனிதனைக் குறித்த முழுமையான் பார்வையை நாம் பெறுகிறோம்.  மனித இயல்பின் பின்னுள்ள வன்முறையைக் காணாமல் வாழ்வதற்கு இலக்கியம் நம்மை அனுமதிக்காது. ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களும், அந்த வகைமையைச் சேர்ந்த பிற படைப்புகளும் இதற்கு உதாரணமாகும்.  

மிக மோசமான நிலையைக் காட்டி அதை எதிர்கொள்ள நமக்குக் கற்றுத் தருவது இலக்கியமாகும். சுருக்கமாக, இந்த விளையாட்டை ஆடுகிறவருக்கு அது ஏற்படுத்தும் திகிலை முறியடிக்கும் ஆற்றலை இவ்விளையாட்டே அளிக்கும்.


(1958இல் ஜார்ஜ் பத்தாய் அளித்த டிவி நேர்முகத்தின் தமிழாக்கம் - ஆர். அபிலாஷ்)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...