Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இலக்கியமும் தீமையும் - ஜார்ஜ் பத்தாய்



கேள்வியாளர்: இலக்கியமும் தீமையும் பிரிக்க முடியாபடி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையா?


ஜார்ஜ் பத்தாய்: தீமையில் இருந்து இலக்கியத்தைப் பிரித்துவிட்டால் அது அலுப்பூட்டுவதாகும். இலக்கியம் அடிப்படையில் பரிதவிப்பைப் பேசுவது. பரிதவிப்பு ஒன்று நிச்சயமாக தவறாகவே போகும் எனும்போது தோன்றுவது. தவறாகப் போவது தீமையாகிறது. நான் இதை எளிமைப்படுத்திச் சொல்கிறேன் என்றாலும் இப்படிப் புரிந்துகொள்ளலாம்: நீங்கள் வாசகரிடம் எல்லாம் தீமையில் போய் முடியுமென்றோ அவர்கள் படிக்கும் கதையில் அவர்கள் அக்கறை கொள்ளும் பாத்திரங்கள் தீமையான முடிவை நோக்கிப் போகிறார்கள் என்றோ காட்டும்போது அவர்கள் இதமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவான நெருக்கடிதான் இலக்கியத்தை சுவாரஸ்யமாக்குகிறது.


கேள்வியாளர்: இலக்கியம் தீமையைப் பற்றியது என்றால் அதை எழுதும் எழுத்தாளர் தாம் செய்வது தவறு எனும் குற்றவுணர்வை அடைவதுண்டா? 


ஜார்ஜ் பத்தாய்: உண்டு. இலக்கியம் எழுதுவது ஒரு வேலையாக அதனால்தான் இருக்க முடியாது.


கேள்வியாளர்: அப்படிக் குற்றவுணர்வு கொண்ட படைப்பாளிகளின் பெயர்களைச் சொல்ல முடியுமா?


ஜார்ஜ் பத்தாய்: இருவரைச் சொல்லலாம். அவர்களைப் பற்றி என் நூலில் எழுதியிருக்கிறேன். ஒருவர் போத்ரிலியர். அவர் தனது கவிதைத் தொகுப்புக்கு "தீமையின் மலர்கள்" எனத் தலைப்பிட்டதே இதனால்தான். அடுத்து காப்கா. அவர் தான் எழுதுவதே தீமை எனும் உணர்வைக் கொண்டிருந்தார். ஏனென்றால் வாழ்க்கையை வியாபாரச் செயல்பாடுகளில் ஈடுபட்டு சம்பாதிக்க பயன்படுத்தாமல் எழுதச் செலவிடுது தீமையானது என்று அவரது குடும்பத்தினர் அவருக்கு உணர்த்தியபடியே இருந்தனர்.    


கேள்வியாளர்:  எழுதுவது குற்றமெனக் கருதப்பட்டால் போத்லியருக்கும் காப்காவுக்கும் எழுதுவதே பொறுப்பற்ற செயலாகிறதுதானே... 


ஜார்ஜ் பத்தாய் குறுக்கிட்டு: அவர்களது குடும்பத்தினர் தாம் அவ்வாறு கருதினர்.


கேள்வியாளர்: இந்த குற்றவுணர்வே குழந்தைத்தனமானது எனும்போது காப்காவும் போத்ரிலியரும் இலக்கியம் எழுதுவதை குழந்தைத்தனமானது எனக் கருதினார்களா?


ஜார்ஜ் பத்தாய்: அவர்கள் தமது பெற்றோர் முன்பு ஒரு குழந்தையைப் போல உணர்ந்தார்கள் என்பது இதைத் தெளிவாக்கும். அவர்கள் சேட்டைகள் செய்து அதனால் குற்றவுணர்வு கொள்ளும் குழந்தையைப் போல உணர்ந்தனர். ஏனென்றால் அக்குழந்தை தனது பெற்றோர், அவனுக்கு மிகவும் பிடித்தமான பெற்றோர், அவன் ஒருபோதும் செய்யக்கூடாது என்று சொன்னதையே அவன் செய்து வந்தான். இதுதான் அதன் ஆகத்தீவிரமான பொருளில் தீமையாக இருக்கிறது.


கேள்வியாளர்கள்: எழுத்தாளர்கள் எழுதும்போது குற்றவுணர்வு கொள்கிறார்கள் எனில், இலக்கியமே குழந்தைத்தனம் என்றாகிறது அல்லவா?


ஜார்ஜ் பத்தாய்: இலக்கியத்தின் அடிப்படையாக சிறுபிள்ளைத்தனம் உள்ளது. நமக்கு இலக்கியம் மீதுள்ள பெருமரியாதைக்கு, எனக்குள்ள பெருமதிப்புக்கு, இது முரணாக இருக்கலாம். ஆனால் இது மிக அடிப்படையான, ஆழமான உண்மையென்று கருதுகிறேன். இலக்கியம் உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்து பார்த்தாலே உங்களுக்கு விளங்கும் (கீழான பார்வையில் இருந்து என்று நான் குறிக்கவில்லை).  


கேள்வியாளர்: பாலின்ப எழுத்து பற்றி நூலொன்றை எழுதியிருக்கிறீர்கள். பாலின்ப இலக்கியமும் குழந்தைத்தனமானதுதானா?


ஜார்ஜ் பத்தாய்: இலக்கியம் பாலின்ப எழுத்தில் இருந்து அவ்விதத்தில் வேறுபடுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் பொதுவாக பாலின்ப எழுத்திலுள்ள குழந்தைமையைப் புரிந்துகொள்வது அவசியமானது என நினைக்கிறேன். பாலின்ப கிளர்ச்சியை அடைவது தடைசெய்யப்பட்ட விளையாட்டை ஆடுவதாக ஒரு குழந்தை கற்பனையில் திளைப்பதைப் போன்றது. பாலின்ப கிளர்ச்சியின்பால் பெரும் ஈர்ப்பு கொள்வது தன் பெற்றோர் முன் ஒரு குழந்தை இருப்பதைப் போன்றது. தனக்கு எதாவது நடந்துவிடுமோ என அவன் அஞ்சுகிறான். அஞ்சுவதற்கான காரணம் சரியாக கிடைக்கும்வரை அவன் நிறுத்தப் போவதும் இல்லை. இயல்பான வளர்ந்தவர்கள் செய்வதை செய்தால் மட்டும் அவனுக்குப் போதாது, அவனுக்கு பீதியடைய வேண்டும். ஒரு குழந்தையாக எப்போது வேண்டுமெனினும் சாடப்படலாம், தாள முடியாத அளவுக்குத் தண்டிக்கப்படலாம் எனும் தீவிர அச்சத்தை அவன் உணர வேண்டும். 


கேள்வியாளர்: நீங்களும் நானும் பேசுவதைப் பார்க்கும்போது குழந்தைத்தனத்தை நீங்கள் கண்டிப்பதாக உணர்வு ஏற்படலாம். அதனாலே நாம் உங்கள் நூலின் தலைப்புக்குப் போக வேண்டும் என நினைக்கிறேன்: "இலக்கியமும் தீமையும்". நீங்கள் அதில் இலக்கியத்தையோ தீமையையோ கண்டிக்கவில்லை. அதிலுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?


ஜார்ஜ் பத்தாய்: அது ஒரு எச்சரிக்கை. இலக்கியம் ஆபத்தானது என அது சொல்கிறது. ஆனால் அதை உணர்ந்தபின்னர் அதைத் துணிந்து எதிர்கொள்வதே சரியானது. இலக்கியமெனும் தீமையை நாம் துணிந்து நேர்கொள்வது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதை நீங்கள் சந்திக்கவில்லை எனில் நீங்கள் மனிதராகவே இருக்க முடியாது எனும்படியான மிகப் பெரிய, அசலான ஆபத்து அது. இலக்கியத்தில் மனிதனைக் குறித்த முழுமையான் பார்வையை நாம் பெறுகிறோம்.  மனித இயல்பின் பின்னுள்ள வன்முறையைக் காணாமல் வாழ்வதற்கு இலக்கியம் நம்மை அனுமதிக்காது. ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களும், அந்த வகைமையைச் சேர்ந்த பிற படைப்புகளும் இதற்கு உதாரணமாகும்.  

மிக மோசமான நிலையைக் காட்டி அதை எதிர்கொள்ள நமக்குக் கற்றுத் தருவது இலக்கியமாகும். சுருக்கமாக, இந்த விளையாட்டை ஆடுகிறவருக்கு அது ஏற்படுத்தும் திகிலை முறியடிக்கும் ஆற்றலை இவ்விளையாட்டே அளிக்கும்.


(1958இல் ஜார்ஜ் பத்தாய் அளித்த டிவி நேர்முகத்தின் தமிழாக்கம் - ஆர். அபிலாஷ்)

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...