முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலியின் தடுமாற்றம்

விராத் கோலி தில்லிக்காக ரஞ்சி ஆட்டத்தில் 6 ஓட்டங்களில் அவுட் ஆன காணொளியைப் பார்த்தேன். நியுசிலாந்து டெஸ்ட் தொடர் முதலே அவரிடம் ஒரு பிரச்சினையை கவனிக்கிறேன் - அவர் பந்தின் நீளத்தை சரியாகப் பார்ப்பதில்லை. சில நேரங்களில் பந்தின் திசையையும் கணிப்பதில்லை. இந்த பந்து ஆறாவது குச்சியில் விழுந்து உள்ளே வருகிறது. அதை கோலி கவர் டிரைவ் செய்யும் நோக்கில் மட்டையைத் தூக்கிக் கொண்டு லெக் ஆண்ட் மிடிலில் நிற்பதைப் பாருங்கள். உள்ளே வரும் பந்தை யாரும் அப்படி விரட்ட மாட்டார்கள். அதுவும் பந்துவீச்சாளர் குச்சிகளுக்கு நேராக வரும்போது பந்து நேராகவோ உள்ளாகவோ தாம் வரும். இது பாலபாடம்.

சரி அதையும் விடுவோம். பந்து ஸ்விங் ஆகாது என்று அவர் நினைத்தால் கவர் பகுதியில் ஆடும்படி அவரது தலை முன்னங்காலை நோக்கி கவர் பக்கமாகத் தானே போக வேண்டும். ஆனால் கோலியின் தலை அவரது இடப்பக்கம் சரிகிறது. மட்டையின் இறக்கமோ கீப்பரின் பக்கமிருந்து கீழே வருகிறது. அது கவர் டிரைவுக்கானது என்றால் ஷாட் நேரான டிரைவுக்கானது. இப்படி அவர் ஒரு ஷாட்டை அடித்தால் கையும் தலையும் வேறிரு ஷாட்களுக்காக தயாராகின்றன. முக்கியமாக அவர் பந்தின் திசையை பந்து விழும் முன்னரே கால்வினாடியில் கணிக்கிற திறனை இழந்துவிட்டார். எப்போதாவது அவரது பார்வையும் தலையும் காலாட்டமும் சரியாக அமையும்போது அழகான ஷாட்களை ஆடுவார். மற்ற சமயங்களில் பந்தை டி ராஜேந்தர் தன் நாயகியைப் பாடல் காட்சியில் லவ் பண்ணுவதைப் போலத்தான் அடிக்கிறார். 

பிரச்சினை ஆட்டநிலையிலோ கவனத்திலோ இல்லை. அவரது பார்வையில் ஏதோ பிரச்சினை உள்ளது. திராவிட்டுக்கும் அவரது ஓய்வுக்கு முன்பான ஓராண்டு காலத்தில் இப்பிரச்சினை தோன்றியது. ஆனால் அவர் மீண்டு வந்தார். நியுசிலாந்தின் ரோஸ் டெய்லர், தென்னாப்பிரிக்காவின் ஹஷீம் ஆம்லாவுக்கும் கண் பிரச்சினை ஏற்பட்டு ஆட்டத்தை பாதித்தது. விராத் கோலியின் இப்பிரச்சினையைப் பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன்னரே கபில் தேவ் ஓரிடத்தில் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. 

சிலநேரங்களில் இம்மாதிரி குறைகளுக்கு நேரடித் தீர்வு இல்லையென்றால் வீரர்கள் அதை வைத்துக்கொண்டே ஆட முயல்வார்கள். தம் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பார்கள். பிடிவாதமாக முயன்று கொண்டே இருப்பார்கள். ஒருவேளை கோலிக்கும் நடப்பது அதுவாக இருக்கலாம். 

பாவமாக இருக்கிறது! இவரைப் போய் ஏன் ரசிகர்கள் திட்டுகிறார்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...