வெள்ளைக்காரர்கள் தமிழ் பேசுவதையும் நம்மாட்கள் ஆங்கிலத்தில் பொழிவதையும் பார்த்து வியப்பது ஒரு காலனிய ஹேங் ஓவர் மனநிலைதான். அவர்கள் ஒருபோதும் நாம் ஆங்கிலம், பிரெஞ்சு பேசுவதை ரசிக்க மாட்டார்கள்.
இதற்குப் பதிலாக நாம் உள்ளூர் எழுத்தாளர்களை வாசித்துக் கொண்டாடலாம். தமிழ்நாட்டு அரசு சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு சசி தரூரை அழைப்பதற்குப் பதிலாக தமிழ் எழுத்தாளர்களை இந்தியாவுக்கும் உலகுக்கும் முன்னிலைப்படுத்தி பெருமை கொள்ளலாம் (எனக்காக அல்ல, பொதுநோக்கில் சொல்கிறேன்). சசி தரூரை விட நூறு மடங்கு மேலான எழுத்தாளர்கள் தமிழில் நூறு பேராவது இருக்கிறார்கள். நம்மூரில் முட்டாள்கள் அதிகம் என்பதால் சசி தரூருக்கு 90 வயதாகிறவரைக்கும் அவர் இது போன்ற இலக்கிய, பண்பாட்டு மேடைகளை அலங்கரித்துக்கொண்டே இருப்பார், ஆனால் ஒரு நல்ல இலக்கிய நூலைக்கூட ஜென்மத்தில் எழுத மாட்டார். நிஜத்தில் வேட்டையாடத் தெரியாத சர்க்கஸ் சிங்கம் அவர்.
தன் மொழியின், தன் ஊரின், தன் அருகே உள்ள படைப்பாளிகளை அந்த காரணத்தாலே முன்னெடுக்க முடியாத
இம்மாதிரி காலனிய தன்னிரக்க மனநிலையை தமிழ் சமூகமும் ஊடகமும் தமிழ்நாட்டு அரசும் கைவிட வேண்டும்.
Comments